Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் பொங்க பயம் பொங்குகிறது என ஐ.தே.க குமுறல்!

Featured Replies

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் தமிழ், சிங்களப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கும் மக்களின் கனவுகளை மகிந்த அரசு குழிதோண்டிப் புதைத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பால்பொங்கி புத்தாண்டை வரவேற்க வேண்டிய தருணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது என்ற அபாய சமிக்ஞை எப்போது வருமென அல்லோலகல்லோலப்பட்டே மக்கள் புத்தாண்டில் அடுப்பு மூட்டவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்து தவிக்கும் மக்களை சர்வதேச நாணய நிதியத்திடம் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு மகிந்த அரசு தயாராகி வருகின்றது எனவும், அரசின் அராஜகங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

'பெரும் வாழ்க்கைச் சுமையைத் தமது தலைகளில் சுமந்து கொண்டு துன்பப்படுகின்ற மக்கள், கடன்பட்டாவது தமிழ், சிங்களப் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு மகிந்த அரசிடமிருந்து எப்போதுவரும் என்ற அச்ச உணர்வுடனே அடுப்பு மூட்ட வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டிலாவது நாம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வேண்டும், சிறிய வீடொன்றைக் கட்ட வேண்டும் என்ற கனவுடனும், எதிர்பார்ப்புடனும் ஏழைமக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் கனவுகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோக்களின் விலையை அதிகரித்துள்ளதுடன், வட்டி வீதத்தையும் அதிகரித்துள்ளது மகிந்த அரசு.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து மக்களைத் தாரைவார்த்துக் கொடுக்கமாட்டோம் என ஆட்சிக்கு வரும்போது முழக்கமிட்ட மகிந்த அரசு, தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் மக்களைத் தாரை வார்த்துக் கொடுக்க முயற்சிக்கின்றது. அரசின் இந்த அசம்பாவித செயல் ஒரு சிறு பிள்ளைக்குக்கூட நன்றாகத் தெரியும். மகிந்த அரசின் இந்தச் செயலின் மூலம் அதன் இரட்டைவேடம் நாட்டினுள் அம்பலமாகியுள்ளது.

அமைச்சர்களின் சுகபோக வாழ்க்கைக்கும் அவர்களின் சுயலாபத்திற்குமே அரசு இதுபோன்ற கடன்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அமைச்சர்களின் சுகபோகத்திற்காகப் பெறப்படுகின்ற கடனை மக்களே செலுத்தும் நிலையை மகிந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் பின்னர் நாம் சுதந்திரமாக வாழலாம், அரசிலிருந்து எமக்கு மானியங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு அரசு மேன்மேலும் கடன் சுமையேற்றி வருகின்றது. எவரிடமும் மண்டியிட்டு நாம் மக்களைத் தாரை வார்த்துக் கொடுக்கமாட்டோம் என வீர வசனம் பேசிய மகிந்த அரசு, தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிட்டு மக்களைத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர்களைப் பின் தொடர்ந்தே புத்தாண்டைக் கொண்டாட வேண்டியுள்ளது.

தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டுவரும் மகிந்த அரசின் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை நாடு முழுவதும் எமது அரச எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டேயிருக்கும்'- இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a1354cea-a120-4b02-b9f5-f95f422292e4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.