Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போபர்ஸ் ஊழலில் ராஜிவுக்கு தொடர்பில்லை': சுவீடன் முன்னாள் போலீஸ்

Featured Replies

"போபர்ஸ் ஊழலில் ராஜிவுக்கு தொடர்பில்லை': சுவீடன் முன்னாள் போலீஸ் அதிகாரி தகவல்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவுக்கு, போபர்ஸ் ஊழலில் எந்த சம்பந்தமும் இல்லை என, சுவீடன் நாட்டு முன்னாள் போலீஸ் அதிகாரி தெரிவித்துள் ளார்.

ராஜிவ் பிரதமராக இருந்த போது, சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. ராணுவத்துக்காக வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேரத்தில், 61 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த ஊழலில் ராஜிவ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டதால், 1989ம் ஆண்டு

நடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி தோல்வியடைந்தது.

குட்ரோச்சியை காப்பாற்ற முயற்சி: இதற்கிடையே, போபர்ஸ் ஊழல் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு, இது தொடர்பாக விசாரணை நடத்திய சுவீடன் நாட்டின் முன்னாள் போலீஸ் தலைமை அதிகாரி ஸ்டென் லின்ஸ்ட்ராம், சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: போபர்ஸ் ஊழலில், ராஜிவுக்கு உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குட்ரோச்சியை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சுவிட்சர்லாந்தின் ஏ.இ., நிறுவனத்தின் மூலம் தான் குட்ரோச்சிக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடியாகக் கொடுக்காமல் அவரது வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளனர்.

ஜெனிவாவில் தான் இந்த பேரம் நடந்துள்ளது. ஏ.இ., நிறுவன அதிகாரிகளும், காந்தி அறக்கட்டளை வழக்கறிஞரும் தான் இது தொடர்பாக பேசியுள்ளனர். குட்ரோச்சியிடம் விசாரணை நடத்துவதற்கு, இந்திய புலனாய்வு நிறுவனம் எங்களை அனுமதிக்கவில்லை. குட்ரோச்சியை காப்பாற்றும் பொருட்டு அப்பாவிகள் பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த பேரத்தில் முழு பெயரை குறிப்பிடாமல் ராஜிவுக்கு பதில், ஆர் என்றும், குட்ரோச்சியின் பெயரை க்யூ என்றும், ராஜிவின் உறவினராக அருண் நேருவின் பெயரை என் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊழல் விவகாரம் வெளியே வந்ததும், அருண் நேருவை காப்பாற்றுவதை விட குட்ரோச்சியை காப்பாற்றுவதில் தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

போபர்ஸ் ஊழல் விவகாரத்தால் ஆட்சியைப் பிடித்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் அரசு கூட, இந்த விசாரணை நடத்துவதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆட்சியில் இல்லாத போது இந்த ஊழல் குறித்து பெரிதாக பேசியவர்கள், ஆட்சியில் அமர்ந்ததும் அமைதியாகி விடுகின்றனர். ராஜிவ் ஆட்சியில் இருந்த வரை இந்த ஊழல் விவகாரம் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ள இயலவில்லை. அவர் ஆட்சியில் இல்லாதபோது தான், இந்த விசாரணையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. அமிதாப் பச்சன் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டதாக சுவீடன் பத்திரிகை தேவையில்லாமல் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பத்திரிகையின் மீது அமிதாப் பச்சன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த ஊழலில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு எந்த தொடர்பும் இல்லை. போபர்ஸ் ஊழல் தொடர்பாக சுவீடன் வந்தவர்கள், இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கும் எங்களை கடைசி வரை சந்திக்கவேயில்லை. இதன் மூலம் இந்த ஊழல் விஷயம் மூடி மறைக்கப்படுவதை தெளிவாக புரிந்து கொண்டோம். இவ்வாறு ஸ்டென் லின்ஸ்ட்ராம் கூறியுள்ளார்.

அமிதாப் மகிழ்ச்சி: சுவீடன் அதிகாரியின் இந்த கருத்து குறித்து, நடிகர் அமிதாப் பச்சன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

பா.ஜ., கண்டனம்: இத்தாலிய தரகர் குட்ரோச்சியை காப்பாற்றுவதற்காக, விசாரணைகளில் ராஜிவ் தடையை ஏற்படுத்தியதாக, பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்லிமென்டில் மீண்டும் பிரச்னையை எழுப்ப, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிடுகையில், போபர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறிவிட்டது. முடிந்து போன இந்த விவகாரத்தை மீண்டும் கிளறத் தேவையில்லை. ராஜிவ் மீது அபாண்டமாக புகார் கூறியவர்கள், தற்போது வெளிவந்துள்ள இந்த உண்மை மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

குட்ரோச்சி வீட்டில் சோனியா: மத்திய புலனாய்வு நிறுவன (சி.பி.ஐ.,) முன்னாள் இயக்குனர் ஜோகிந்தர் சிங் இது குறித்து குறிப்பிடுகையில், போபர்ஸ் வழக்கு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி லின்ஸ்ட்ராம், அப்போதைய சி.பி.ஐ., இயக்குனர் எம்.ஜி.காத்ரிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக அப்போது மத்திய நிர்வாகத் துறையை கவனித்த அமைச்சர் சிதம்பரத்திடம், காத்ரி அனுமதி கேட்டிருந்தார். இந்த விவகாரம் தற்போது பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையில் உள்ளது என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. எனவே, சி.பி.ஐ.,யால் இந்த விசாரணையை அப்போது மேற்கொள்ள இயலவில்லை. இந்த ஊழல் நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து தான், அதாவது 90ம் ஆண்டு தான் இது தொடர்பான விசாரணை ஆரம்பமானது. பார்லிமென்ட் கூட்டுக் குழு உத்தரவுக்கு பிறகு தான், போபர்ஸ் ஊழலை விசாரிக்க அதிகாரிகள் சுவீடன் சென்றனர்.

குட்ரோச்சிக்கும், ராஜிவ் குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகம். பிரதமர் வீட்டில் குட்ரோச்சி அடிக்கடி தங்கியுள்ளார். குட்ரோச்சி வீட்டிலும் சோனியா தங்கியுள்ளார். ஆனால், போபர்ஸ் விஷயத்தில் ராஜிவ் மற்றும் சோனியா ஆகியோர் சம்பந்தப்பட்டனரா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குட்ரோச்சியிடம் விசாரணை நடத்த, பிரதமர் அல்லது நிர்வாகத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோர இருந்த சமயத்தில் குட்ரோச்சி, இந்தியாவிலிருந்து தப்பி விட்டார். அதன் பின், அவரை கைது செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. லண்டனில் உள்ள குட்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு குட்ரோச்சி அங்கிருந்து சென்று விட்டார். போபர்ஸ் நிறுவனத் தலைவர் மார்ட்டின் அடோபோ தனது டைரியில், ஜெனிவாவில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, காந்தி அறக்கட்டளை வழக்கறிஞர் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் பணம் கைமாறியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த விசாரணையை நிறுத்தி விட்டோம். இந்த வழக்கு விசாரணைக்காக ஏராளமான பணம் செலவானது. இவ்வாறு ஜோகிந்தர் சிங் கூறியுள்ளார்.

http://tamil.yahoo.c...dGVzdAM-;_ylv=3

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.