Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்த வரலாறு இல்லை- வினோ எம்.பியின் ஆதங்கம்

Featured Replies

SAM_3628-1-150x150.jpgஇலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்திலும், தமிழீழ விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை இந்திய இலங்கை அரசுகள் மோதவிட்டன. இன்றும் அந்த நிலைதான் தொடர்கிறது. உண்மையாக இதய சுத்தியுடன் தமிழ் தலைமைகள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை, தமிழ் இனம் நிம்மதியாக வாழப்போவதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…..

தமிழினம் பெருந்துயரையும் அவலத்தையும் சந்தித்துள்ள இன்றைய நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை.

தந்தை செல்வா காலத்திலும் தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்ததில்லை. பிரிந்து நின்றார்கள். அமிர்தலிங்கம் காலத்திலும் ஒற்றுமை இருக்கவில்லை. ஆயுதப்போராட்ட காலத்திலும் பல குழுக்களாக பிரிந்து நின்றன. இன்று வரலாற்றில் தாம் சந்திக்காத பெருந்துயரை சந்தித்த பின்பாவது ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தலைமையில் இணைந்திருக்கிறோம். ஆனால் கசப்பான ஒரு விடயம் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளும் ஒன்றாக சென்று அவர்களால் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

சம்பந்தன் ஐயா தலைமையில் ஒரு குழுவும், ஆனந்தசங்கரி ஐயா தலைமையில் ஒரு குழுவுமாக இரு குழுக்களாகத்தான் சந்தித்தார்கள். நாங்கள் ஒற்றுமையோடு ஒரே இலக்கோடு இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு ஒன்றாக சென்று கூறுவதற்கு முடியாமல் போய்விட்டது.

இலங்கை இந்திய அரசுக்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு இருப்பதை விரும்பவில்லை. எங்களுக்குள் பிளவை ஏற்படுத்ததான் அவர்கள் விரும்புவார்கள். அது காலம் காலமாக நடந்து வரும் விடயம். இதனை முறியடித்து தமிழ் தலைவர்களால் ஏன் ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்பட முடியாமல் இருக்கிறது.

உண்மையான ஒற்றுமை இதய சுத்தியுடன் வரவேண்டும். அதுவரை தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது .

வன்னியில் இன்று சிங்கள ஆக்கிரமிப்பு ஒரு புறம், வன்னி மாவட்டத்தில் இருக்கும் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரின் அட்டகாசம் ஒருபுறமுமாக தமிழ் மக்கள் பெரும் அவலங்களையும் துன்பங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களின் உரையின் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

SAM_3669.jpg

SAM_3628-1.jpgSAM_3629.jpgSAM_3628.jpg

www.Thinakkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.