Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும்-சுஷ்மா தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது.

Featured Replies

"அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும். இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். ராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி, அந்தப் பகுதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட, இந்தியாவில் இருந்து நிபுணர்களை அனுப்பிட வேண்டும்' என, பிரதமரிடம் சுஷ்மா தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் போருக்கு பின், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா சார்பில், 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அங்கு தமிழ் பகுதிகளில் வீடு கட்டித் தரும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை பார்வையிடவும், தமிழர்களின் நிலைமை குறித்தும் நேரில் பார்த்து ஆராய்ந்து வரவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி குழு இலங்கை சென்றது. அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் இல்லாமலேயே இலங்கை சென்று விட்டு இந்தக் குழு திரும்பியது.

பிரதமரிடம் விளக்கம்:

இந்நிலையில், தங்களின் இலங்கை பயணம் குறித்த விவரங்களை நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து இந்தக் குழு விளக்கியது. பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு துவங்கியது. 45 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் கிருஷ் ணா, நாராயணசாமி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கூடுதல் அதிகாரங்கள்:

இலங்கையில் தமிழர் பிரச்னையை தீர்க்க ஒரே வழி அரசியல் தீர்வுதான். இதை ஏற்படுத்தாவிடில் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. எனவே, அரசியல் தீர்வை காணும்படி, இந்தியா அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளில், இந்தியா இறங்கிட வேண்டும். குறிப்பாக, 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்திட அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும். அதோடு சேர்த்து, கூடுதல் அதிகாரங்களையும் தமிழர்களுக்கு வாங்கித் தர வேண்டும்.

பேச்சுவார்த்தை:

தற்போதைய உடனடி தேவை எதுவெனில், இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் தடைபட்டுப் போய் நிற்கும் பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கிட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இந்த பேச்சுவார்த்தை நின்று போய் இருப்பதற்கு காரணம், பேச்சுவார்த்தையில் என்ன விஷயம் குறித்து பேசுவது என்ற விவரத்தை, இலங்கை அரசாங்கம் சொல்ல மறுக்கிறது என்பதே. எனவே, இந்தப் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவின் பேச்சுவார்த்தை விவரங்களை இறுதி செய்யும்படி, இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டும். அதன்பின், பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை துவங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணுவ முகாம்கள்:

வடக்குப் பகுதியில் மிகுந்த வளமுடைய விளைநிலங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏற்கனவே விடுதலைப் புலிகள் தங்களது முகாம்களை அமைத்திருந்தனர். தற்போது இங்கெல்லாம் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த விளைநிலங்களில் இருந்து, ராணுவத்தை அகற்றிவிட்டு அவற்றை நிலத்தின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிபுணர்கள்:

தமிழர் பகுதிகளில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் எண்ணிலடங்கா ராணுவ முகாம்களை அகற்றிட வேண்டும். ராணுவத்திற்கு பதிலாக போலீசாரை அந்தப் பகுதிகளில் நிறுத்திட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையை, தமிழகத்து பிரச்னையாக மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்திய பிரச்னையாக கருதிட வேண்டும். அங்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட நிதி உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையாக போய் சேருகிறதா என்று கண்காணிக்க வேண்டும். தற்போது இந்த கண்காணிப்பை, அந்நாட்டு ராணுவம் செய்து வருகிறது. இது போ தாது. இந்த கண்காணிப்பை செய்வதற்கு இந்தியா தரப்பில் நிபுணர்களை அனுப்பிட வேண்டும்.

மறுகுடியமர்த்தல்:

தமிழர் வசிக்கும் பகுதிகளில், அவர்களின் பிரச்னைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், அதன்பேரில் நடவடிக்கை எடுத்திடவும், தமிழ் அதிகாரிகள் நிறையப் பேரை நியமனம் செய்திட வேண்டும். மறுகுடியமர்த்தலைப் பொறுத்தவரை, 2005ம் ஆண்டுக்கு பிறகு உள்ளவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிகிறது. இது சரியல்ல. 2005ம் ஆண்டுக்கு முன்பே இரண்டரை லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் இடங்கள் எல்லாம் பறிபோய் உள்ளன. எனவே, அவர்களையும் மறுகுடியேற்றம் செய்திட வகை ஏற்படுத்திட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களிடையே ஒருவித அச்சம் இப்போதும் உள்ளது. கோவில்கள் போன்ற வழிபாட்டு தலங்களில் எல்லாம் ராணுவத்தினர் நிறைந்து காணப்படுகின்றனர். இது தமிழர்களிடையே ஒருவித பீதியை இன்னும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

கெடுபிடிகள்:

தவிர வீடுகளில் நடைபெறும் திருமணம், காதுகுத்து போன்ற சடங்கு நிகழ்ச்சிகளுக்கும்கூட ராணுவத்தினரின் கெடுபிடிகள் உள்ளன. இது தேவையற்ற குழப்பத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தி வருவதால், இதை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குழுவினர் விவரித்தனர்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிரதமர், இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தையை துவங்குவது உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிற்றது.

-தினமலர்-

http://www.seithy.com/breifNews.php?newsID=59645&category=TamilNews&language=tamil#.T6SplUqEJrU.facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.