Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈகைச்சுடர் முருகதாசனுக்கு யூலை மாதம் உடல் விதைக்கப்பட்ட இடத்தில் நினைவுக்கல்லறை .

Featured Replies

ஈகைச்சுடர் முருகதாசனுக்கு நினைவுக் கல்லறை ஈகைச்சுடர் முருகதாசனின் ஈகமும் தன்னையே ஆகுதி ஆக்கியபடி சர்வதேசசமூகத்திடம் அவன்‘எனது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று கோரியதும் என்றென்றும் மனதைவிட்டு அகன்றுவிடப்போவதில்லை. ஒரு பெரும் இனப்படுகொலைக்கும் அதனூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தைசிதைப்பதற்கும் சிங்கள பேரினவாத படைகளும் வல்லாதிக்ககூட்டும் தனது இரும்புப்பிடியை இறுக்கி இறுக்கி எமது மக்களை கொலைவலையத்துள் நகர்த்தியபடி இருந்த பொழுதில்தான்‘எமது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று சர்வதேச மனச்சாட்சியை உலுப்பியபடி ஈகைச்சுடர்முருகதாசனின் தியாகம் உலகமுன்றலில் நிகழ்ந்தேறியது.

அவனது தியாகமும் அவன் தனதுதாயகவிடுதலைமீது காட்டிய அளவற்ற தாகமும் வார்த்தைகளாலும் ஒப்பீடுகளாலும் வர்ணிக்க முடியாதவை. ஒரு மனிதன், ஒரு இளைஞன் தனது இனத்தின் விடுதலைப்போராட்டத்தை மிகமிகஇக்கட்டான ஒரு சூழலில் இருந்து மீட்பதற்காக,தனது இனமக்களை இனஅழிப்பிலிருந்து மீட்பதற்காக செய்யக்கூடிய ஆகக்கூடிய அர்ப்பணம் முருகதாசனின் அர்ப்பணிப்பு.தமிழர்கள் அனைவரதும் நெஞ்சுக்குள் அவர்களின் ஆழமான மனஉணர்வுகளுக்குள் என்றென்றும் முருகதாசனின் ஈகம் நினைவில் அனலாடியபடியே நிற்கும்.ஆனாலும் அவனை விதைத்த இடத்தில் அவனுக்கு ஒரு நினைவுக்கல்லறை ஒன்றை அமைப்பது சம்பந்தமானஎண்ணமும் அதற்கான முன்முயற்சியும் ஈகைச்சுடர் முருகதாசனின் பெற்றோருடன் கதைத்தும்அவர்களது கருத்துக்களை உள்வாங்கியும் உருவானது.இதற்கான முன்னேற்பாடுகளிலும் இதற்கான நிதியை பெறுவதிலும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுசெயற்பாட்டாளர்கள் தமக்குள்ளேயே தாமாக முன்வந்து சேகரித்து ஒருநினைவுக்கல்லறையை வடிவமைத்து உருவாக்கி வருகின்றார்கள். இதற்கான நிதியை பொதுமக்கள்எவரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளாமல் செயற்பாட்டாளர்களே தமது பங்களிப்பாக வழங்கியஉதவிகளை கொண்டே இது உருவாக்கப்பட்டு வருகின்றது. எமக்காக எமது மக்களுக்காக அதனிலும் மேலாக எமது விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேரை காப்பாற்றுவதற்காக ஆகுதியாகிய ஈகைச்சுடர் முருகதாசனுக்கு வருகின்ற யூலை மாதம்அவனின் உடல் விதைக்கப்பட்ட இடத்தில் நினைவுக்கல்லறை பொருத்தப்படும்.

ஈகைச்சுடர் முருகதாசன் எமக்கு விட்டுச்சென்ற சேதி ஒன்றுதான்.‘தளர்வின்றி மிக உறுதியுடன் எமது மக்களின் விடுதலைக்கான பாதையில் தொடர்வது’தான் அது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுபிரித்தானியக் கிளை.

uk-muruga.jpg

http://thaaitamil.com/?p=18150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.