Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதி

Featured Replies

வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை

* `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!'

* தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது'

வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்....

ஆர்.பி

" வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...."

இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். தமிழகத்தில் வெளியான பல தரமான, புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி, தனக்கெனத் தனியான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு புகழ்தேடிக் கொடுத்த `முள்ளும் மலரும்' மற்றும் ` உதிரிப்பூக்கள்' என்பன இவரது திறமைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள். ரஜினிகாந்தை உருவாக்கியவர் கே.பாலச்சந்தர் என்று சொன்னார், ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்குக் காரண மாகவிருந்தவர்களில் மகேந்திரன் முக்கியமானவர் எனக்குறிப்பிடலாம்.

இவ்வளவு பிரபலமான ஒரு இயக்குநர் இதுவரையில் திரைக்கு வராத தமிழீழ திரைப்படம் பற்றி இவ்வாறு கூறியிருப்பதற்கு காரணம் தான் என்ன?

நிச்சயமாக காரணம் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் வன்னி சென்ற மகேந்திரன், இங்கு விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவினரால் தயாரிக்கப்படும் குறும்படங்கள் மற்றும் வீடியோ கமராக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படங்களைப் பார்வையிட்டதுடன், நிதர்சனம் குறும்படப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சில மாதகாலப் விசேட பயிற்சி வகுப்புகளையும் நடத்திய பின்னர் திரும்பியிருக்கின்றார். இதற்கும் மேலாக கிளிநொச்சிலுள்ள ஆதவன் திரைப்படக் கல்லூரிக்காக `நடிப்பு என்பது.. என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளார். நடிப்புத்துறைக்கு வருவோருக்கான சிறந்ததொரு கைநூலாக இதுவே உள்ளது.

இந்த நூலை எழுதியமைக்கான காரணத்தை மகேந்திரன் பின்வருமாறு விளக்குகின்றார்.

" ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிர் முகத்தோடு, வேறு வேறு விசித்திரமான கதாபாத்திரங்களாக உலவிவரும் மண்ணைச் சார்ந்தவர்களுக்கு நடிப்புப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் ஓர் முகம், எல்லோரும் ஓர் குணம் என்றிருப்பவர்களுக்குத் திரையில் பொய் முகம் காட்டி நடிக்க முடியுமா?

இப்படித்தான் தமிழீழம் வருமுன் எல்லோரும் நினைப்பார்கள். நானும் அப்படியே. இங்கே வந்த பிறகு இங்குள்ள கலைஞர்கள் யாவரும் நுண் கலைகள் அனைத்திலும் வல்லவர்களாகத் நிகழ்ந்திடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்க

  • தொடங்கியவர்

முதல் ஞாயிறு சஞ்சிகைப்பகுதி இருக்கா?

திரு மகேந்திரன் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த ஏனையோருக்கும் மனமார்ந்த நன்றிகள்

8) & :)

(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. )

தகவலுக்கு நன்றி........

  • தொடங்கியவர்

கடந்த வாரத்தானுக்கு முதலன் வேலை செய்யவில்லை மற்ரும் இந்த வாரத்தானை காணவில்லை கண்டுபிடித்து தருபவருக்கு பரிசு வலங்கபடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.