Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Spring, Summer, Fall, Winter... and Spring

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது.

300383_image2_1_thumb%25255B3%25255D.jpg?imgmax=800

வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் செட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றினால் தான் கட்டை அவிழ்த்துவிடுவேன் என்று துறவி சொல்ல, சிறுவன் முனகியபடியே கல்லை இழுத்துக்கொண்டு அந்த தவளையை தேடி போய் அதை காப்பாற்றுகிறான். ஆனால் பாம்பும் மீனும் இறந்துவிட்டது. சிறுவன் கதறுகிறான்.

spring-summer-fall-winter-and-spring5%252520%2525281%252529_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

கோடைக்காலம். இப்போது அந்த சிறுவன் இளைஞன். துறவியை தேடி ஒரு தாயும் மகளும் வருகிறார்கள். அந்த மகளுக்கு ஏதோ ஒரு நோய். குணப்படுத்தி தருமாறு சொல்லி துறவியிடமே ஒப்படைத்துவிட்டு தாய் கிளம்புகிறாள். காட்டுப்பகுதி, கோடைக்காலம். இரண்டு இளைஞர்கள்! சூடு கிளம்புகிறது! இருவருக்கும் காதல் or whatever you name it. ஆனால் இந்த தொடர்பால் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமாகிறது! ஒருநாள் இளைஞனும் அந்த பெண்ணும் ஆற்று நடுவே படகில் ஆடையின்றி கிடப்பதை துறவி கண்டுவிட, அவர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். அந்த இளைஞனால் அவளை பிரிந்து இருக்கமுடியவில்லை. துறவியை பிரிந்து ஓடுகிறான்!

இலையுதிர் காலம். இளைஞனுக்கு நடுத்தர வயது. திரும்பி வருகிறான். மனைவி இன்னொருவனை விரும்புவது தெரிந்து அவளை குத்தி கொன்றுவிட்டு இரத்தக்கத்தியுடன் வந்து நிற்கும் அவனை துறவி அடித்து விளாசுகிறார்.ப்ரஜ்ஞா பரமிதா என்ற மகாயான பௌத்த வேதத்தை தரையில் செதுக்க சொல்லுகிறார். முடிவில் அவனை கைது செய்து கூட்டிப்போகிறார்கள். கொஞ்ச நாளில் அந்த துறவியும் தன் இறுதிக்காலம் வந்துவிட்டது அறிந்து ஆற்றின் நடுவே படகில் தன்னை தானே எரியூட்டி இறந்துபோகிறார்!

பனிக்காலம்! அந்த இளைஞன் தண்டனை முடிந்து திரும்புகிறான். ஆறு உறைந்து போய் இருக்கிறது. பனியை வெட்டி குருவின் பற்களை வெளியே எடுக்கிறான். அந்த இடத்தை செப்பனிட்டு குரு செய்த வேலையை தொடர்கிறான். இப்போது ஒரு தாய் தன் குழந்தைக்கு வருத்தம் என்று சொல்லி இவனிடம் ஒப்படைக்கிறாள். அவள் திரும்பி போகும் வழியில் அந்த துறவி போட்ட பனித்துளைக்குள் விழுந்து உயிரிழக்க, இவன் மனம் வருந்தி, தன் காலில் தானே கல்லை கட்டி தனக்கு தானே தண்டனை கொடுக்கிறான். இப்போது அந்த குழந்தை அநாதை. அவனிடம் குருகுல வாசம் இருக்கிறது!

வசந்த காலம். அவன் சிறுவனாய் இருந்த போது செய்த தவறுகளை இந்த குழந்தையும் செய்ய .. வாழ்க்கை ஒரு வட்டமடா என்ற விஜய் தத்துவத்துடன் படம் முடிகிறது!

இந்த படம் ஒரு போரிங் படம்! தானே செதுக்கிய தானைத்தலைவன் அஜித் நடிக்காத படம். அதனால் எல்லோருக்கும் பிடிக்கவேண்டிய தேவை இல்லை. இரண்டு மணிநேரமாய் வாழ்க்கை ஒரு வட்டம் மாட்டரை கிம்கிடுக் போன்ற தேர்ந்த இயக்குனர்கள் வெறுமனே சொல்லவேண்டிய தேவையில்லை! இன்னொரு மாட்டரும் இருக்கிறது! பல பருவங்களில் மனிதன் செய்யும் தவறு அவனுக்கு எவ்வாறு உணர்த்தப்படுகிறது என்பதை மகாயான பௌத்த தர்மத்தின் அடிப்படையில் படம் சொல்லுகிறது. எவர் சொல்லியும் எந்த மனிதனும் திருந்துவதில்லை. ஆனால் தானே பட்டு தெளிவான். ஒரு கட்டத்தில் தன் தவறுக்கு தானே தண்டனை வழங்குவான். இன்னும் எழுதலாம் … ரொம்ப லெந்தாக போய்விட்டது. ஒரு மூட் இருந்தால் பாருங்கள். அட்டு சீனுக்காக பார்க்கவேண்டாம் பாய்ஸ்!

http://www.padalay.com/

Edited by jkpadalai

சில வருடங்களுக்கு முன் நானும் உந்த படத்தை பார்த்தேன் ,விளங்கியும் விளங்காமலும் இருந்தது .

ஈரானிய படமான "அப்பிள்" யாரும் பார்த்தீர்களா? என்னை மிகவும் பாதித்த படமொன்று.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arjun,

அப்பிள் கேள்விப்பட்டிருக்கிறேன் ... பார்க்கவில்லை .. நல்ல படமா?

பின்னூட்ட இணைப்பிற்கு நன்றி jkpadalai, இன்று youtube-ல் பார்த்தேன்...

சிறுவனாக அவன் செய்யும் குறும்புகள் சிறு பராயத்தை நினைவூட்டுகிறது... தவறு விடும் சிறுவனுக்குப் அந்தப் பெரியவர் பாடம் கற்பிக்கும் முறை யதார்த்தமானது... இயற்கையான மனித உணர்வுகளை உணர்த்தும் ஒரு கதை... கதையைப் படமாக்கிய இடம் மிகவும் அமைதியான இயற்கையை, மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு... 3D யில் இந்தப் பார்த்தல் சொல்லி வேலை இல்லை... நீளமான படமாக இருந்தாலும் (சிம்புவின் படத்தில் கதையாலையே ஆளைக் கொல்லும் போல் இல்லாமல், தேவையானதை மட்டுமே கதைத்துள்ளது தான் படத்தில் ப்ளஸ் பாயிண்ட்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.