Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......"

pooraddam_20120328_1583416631.jpg

கோயில் மணி ஓசையிலும்,

குயில்களின் இன்னிசையிலும்,

மங்கள வாத்திய இசையிலும் ,

மலர்ந்திடும் எங்கள் காலை....,

இன்று...,

கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும்,

பறை எழுப்பும் அவல வசையிலும் ,

ஐயோ ...என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை.

யுத்தத்தின் வடுக்கள்....

அடுத்தவன் கை ஒன்றை எடுத்து

தன் கையோ ?என ஏங்கும் ஒருவன் அங்கே...!

பிணமாய் கிடக்கும் ஒருவனுக்கு ......,

அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே...!

தமிழன் அல்லவா.....?

இறந்தும் அவன் பறவைகளுக்கு தீனி தருகின்றான்.

பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை....,

நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன.

"இந்தா பிள்ள தேத்தண்ணி " என்ற தாயிடம்.....,

"வந்தேன் அம்மா..." என்று...,

முற்றத்து மரக் கண்ணாடியில் தலை சீவச் சென்றவள்...,

தலையை சீவிச் சென்றதாம் ஒரு பீரங்கி.

அதே மரத்தில் தொங்குகிறது ,அவள் அணிந்த மேலங்கி.

சிங்களவன் பீரங்கிகள் கூட ....,

வல்லுறவு செய்துதான் உயிர் பறிக்குமோ ...என்ன?

ஐயகோ..!

கருணைக்கடவுளே! என்று அவனிடம் தேடி ஓட....,

கருவறைச் சிலையில் கால் தடக்கி விழுகிறேன்.

ஐயோ.. என்று அண்ணார்ந்து பார்த்தால்...,

ஐந்து நாள் முன்பு கும்பாபிசேகம் நடந்த கோயில்,

இன்று குண்டால் அபிசேகிக்கப் பட்டுக்கிடக்கிறது.

என்ன கொடுமை அங்கே....?

மரணத்திலும் அணைப்பின் சொரூபமாய் ,

தாயும் சேயும் அங்கே...!

அவள் காலடியில் கணவனோ ..மனிதக் கருவாடு.

என்ன மனிதக் கருவாடு....?

ஆம்,ஐநா வின் அங்கத்துவ நாடுகளின் அன்பளிப்பின்

உச்சக் கொடையாய்...எரிகுண்டுகள்(பொஸ்பரஸ் குண்டுகள்)

மிச்சமாய் தமிழன் கரித்துண்டுகளாய்.....!

பிணம் அருகே உரிமைகொண்டு ஓலமிட நாதியில்லை அங்கே..!

நரிகள் அங்கே ஊளையிடுகின்றன....,

பதுங்கு குழிகளே எமக்கு சவக்குழிகள் ஆயின.

வீரம் விளைந்த மண்ணில் இங்கே...,

மறவர் உடல்கள் சரிந்து கிடக்கிறது.-ஆனாலும்

வீரத் தழும்புகள் இன்னும் கொதிநிலையில்.

ம்ம்ம்..

ஊருக்குள் ஒரு சுடுகாடு கண்டோம் அன்று,

சுடுகாட்டுக்குள் ஒரு ஊரைத் தேடுகிறோம் இன்று.

செழித்துப் பசுமை செய்த எங்கள் ஊர்...-இன்று

ஊழித் தீயால் சிவந்து கிடக்கிறது.

முள்ளிவாய்க்காலில் என் இனத்திற்கு முடிவுரை எழுத,

நீ முந்தி நான் முந்தி என ,மேற்க்குலகம்.

அகிம்சா பேசும் அயல் நாடும் தன் அக்கினிக் கரம் நீட்டுகிறது.

என்னடா பாவம் செய்தோம்?

விண்ணதிர வெடியோசை...,கண்ணெதிரே பிணக்குவியல்.

ஐநாவின் மௌனத்தில் அரைமணிக்குள் ,

ஆயிரம் மரணச் செய்திகள்..

மார்பு அறுக்கப்பட்டு மடிந்தவள் மடியருகே...,

பாலுக்காய் கதறுகிறது பச்சிளங் குழந்தை.

பால் மணம் மாறாப் பாலகியின்

பாலுறுப்பில் துப்பாக்கி செலுத்தும் பரதேசி அங்கே..ச்சீ ..,

இவர்கள் என்ன இலங்கையின் பாதுகாப்பு படையினரா?அல்ல

பாலியல் பயங்கரவாதிகளா?

அங்கே அறைகூவுகிறானாம்...இலங்கா பதியின் அரசன்,

"தமிழ் மண்ணை அபகரித்து என்னிடம் கொடு,

தமிழ் பெண்களை கற்பழித்து நீ அழி..."

போருக்கு புறப்பட்டு முன் எடுத்த சத்தியம் அது.

தன் கண்களையே நம்ப முடியா விரோதியாகிறான் தமிழன்.

ஆம்,

துரோகங்களும்,காட்டிக் கொடுப்புகளும் மலிந்து விலைப்படுகிறது.

ஒட்டுக் குழுக்களின் கைவரிசையில் ..-எம்மை

காத்து நின்றவர்களின் கைகள் ஓய்கின்றன.

பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும்?

வெள்ளைக் கொடியேந்தி நின்றவர்க்கும் ,

பள்ளம் வெட்டிப் படுகொலை செய்யும் யுத்த தர்மம் அங்கே...

அது உள்நாட்டு யுத்தமல்ல?உலகமகா யுத்தம்...

ஆம் ,

எண்ணி எண்ணி மூன்றாண்டு முடிந்தது இன்று..

விம்மி விம்மி அழுவதோ முடிவின்றி.

முள்ளிவாய்க்கால் பேரவலம் முள்ளாய் தைத்தது.

கனவிலும் கதறல்கள் காதைக் கிழித்தது.

ஆம் ,

தொலைக்காட்சி செய்திகள் எம் நெஞ்சுகளை

துளையிட்ட கணங்கள் அவை.

வானொலிச் சேவையில் சாவோலி கேட்டு

தினம்தினம் புழுங்கிய கணங்கள் அவை.

கால்கடுக்க கண்ணீர்மல்கி உண்ணாது நோன்பிருந்து

உலகமன்றங்களின் முன் மன்றாடி நின்ற கணங்கள் அவை.

பட்டினிச்சாவிலும் கொத்தணிக் குண்டழிவிலும்

கையேந்தி நின்றவரிடம் சிங்களனின் காமவிளையாட்டு

கண்டதா உலகம்?

செவிப்பறையிழந்த செவிடர்களுக்கும்,

கண்ணொளி மறைந்த குருடர்களுக்கும்

அரச மன்றங்களில் என்னடா வேலை?

தறிகெட்ட படைகளின் நெறிகெட்ட யுத்தத்தால்

பறிபோன உயிர்கள் ஏராளம் .

சர்வதேசம் கணைகொடுக்க....,

காந்திதேசம் துணை இருக்க....

புத்தன் தேசம் கணைதொடுத்து...

எம் ஈழதேசம் பலியானதங்கே...

எம் கடலோரம், கத்திடும் அலைகள் கக்கிடும் நுரைகள்

நாம் படும் வேதனை சொன்னதங்கே..

கண்டதா உலகம்?

செவிப்பறையிழந்த செவிடர்களுக்கும்,

கண்ணொளி மறைந்த குருடர்களுக்கும்

அரச மன்றங்களில் என்னடா வேலை?

பயந்து பயந்து ஒடுங்க நாங்கள் ஒன்றும்

பனம்காட்டு நரிகள் அல்ல..

பாயும் புலிகளடா!

போரும் வாழ்வுமாய் வாழ்ந்த சமூகம் நாங்கள்.

அதன் வடுக்கள் என்றுமே எம் வாழ்வின் அங்கம்

என் இனம் வடித்த குருதி ஈழம் வரைவது உறுதி...

நன்றி

பிரசாத்,

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=14102:q-q&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

சர்வதேசம் கணைகொடுக்க....,

காந்திதேசம் துணை இருக்க....

புத்தன் தேசம் கணைதொடுத்து...

எம் ஈழதேசம் பலியானதங்கே...

எம் கடலோரம், கத்திடும் அலைகள் கக்கிடும் நுரைகள்

நாம் படும் வேதனை சொன்னதங்கே..

கண்டதா உலகம்?

இவர்கள் இருக்கத்தானே எமது தேசம் காடானது.. நமது வேதனை இன்னும் தொடர்கதையாய் உலாவருகிறது.. முடிவு யாருக்கும் தெரியவில்லை ... மூன்றாண்டு முடிந்தும் துயர்களின்கு முடிவிலியாய்.. நன்றி உங்கள் இணைப்பிற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.