Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் சர்வதேசமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஏந்தி நீதி கேட்டு நிற்கும் நேரத்தில் முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து விட்டது தருவதை வாங்கிகொள்ளுங்கள் என்று கூறி நடக்கும் பகடைக்காய் ஆட்டம்!

Featured Replies

tamil_eelam_20120519_1439930880.jpgதமிழர்கள் நாம் மிக விழிப்பாக இருந்து நடப்பதை உற்று கவனித்து செயல்படவேண்டிய நேரம்.

முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை முடித்து விட சிறி லங்கா அரசும் அதனுடன் சேர்ந்து ஏகாபத்திய நாடுகள் சிலவும், இந்திய அரசும் முனைந்து கொண்டிருக்கும் போது தமிழீழத்தாயகம் தொடக்கம் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடெங்கும் தமிழீழ மக்களின் இன அழிப்பிற்கு நீதி கிடைக்கும் வரை நாம் நிறுத்த மாட்டோம் என்ற குரலுடன் மக்கள் கூடி நின்றார்கள்.

அதே நேரத்தில் தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழீழ கொடியை முன்னிறுத்தி தமிழீழ மக்களுக்கும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் செயல் திட்டங்களை சில ஆங்கில ஏகாபத்திய நாடுகளில் உருவான அமைப்புகள் அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் வலை பின்னல்லில் சிக்குண்டு, இனப்படுகொலை என்ற சொல்லை பாவிக்காதீர்கள், அதை நாம் ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை, தமிழீழம் என்ற சொல்லை பாவிக்காதீர்கள், சிறி லங்கா என்ற வரையறைக்குள் தான் நீங்கள் வாழ வேண்டும் என்ற கூற்றை வலியுறுத்தி ஆங்கிலேய நாடுகளின் கீழ் எஸ் சார் என்று சொல்லியே பழக்கப்பட்டு போன சிலரால், தமிழீழ மக்கள் தமது சுதந்திரத்தை இழந்து நிற்கும் நிலை எமக்கு வந்து விடுமோ என்ற கேள்வி எழுத்து நிற்கிறது.

இன்று, அண்மையில், சில காலமாக சிலர் சிறி லங்காவில் நடைபெற்றது போர் குற்றம் என்பதையே வலியுறுத்த வேண்டும், போர் குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தி வருகிறார்கள். இனப்படுகொலையை பற்றி பேச அவர்கள் தயாரில்லை.

நாடு கடந்த அரசு 2012 தமிழீழ போர்குற்ற ஆண்டாக அறிவித்து இருந்தது, ஆனால் சர்வதேச சரித்திரத்தில் போர் குற்றத்தால் ஏதாவது ஒரு நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறதா என்று நாங்கள் பார்த்தோம் என்றால், உலக சரித்திரத்தில் இதுவரை நடந்த போராட்டங்கள், அதன் பின்னணியில் சுதந்திரம் பெற்ற மக்கள், அல்லது உருவான நாடுகளை பார்த்தல், அவ்வாறு உருவான நாடுகள் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

அதே நேரத்தில் போர்குற்றம் என்று குற்றத்தை முன்வைக்கும் போது

போர் குற்றம் செய்தவர் ஒரு ராணுவ வீரராகவோ, ராணுவ அதிகாரியாகவோ இருக்கலாம், அவர் செய்த குற்றத்திற்கு இன்று சிறி லங்கா என்ற வரையறைக்குள் விசாரணை செய்யவேண்டும் என்று தான் இன்றைய வல்லரசுகள் கூறுகிறது, அதையே சிறி லங்கா அரசு செம்மணி படுகொலைக்கு பாலியல் வல்லுறவு குற்றசாட்டின் பேரில் தீர்ப்பு அளித்தது.

வெள்ளை கொடியுடன் சரணடையுங்கள் என்று கூறி திட்டமிட்டு கொன்றது,சரணடைந்த போராளிகளை நிர்வாணப்படுத்தி சுட்டது போன்ற குற்றங்கள் மனிதாபிமானத்திட்கு எதிரான குற்றமாகவும், அந்த குற்றங்கள் இனப்படுகொலையை வலியுறுத்தவும் உதவும்.

முள்ளிவாய்க்காலில் நடந்த பாலியல் வல்லுறவுகள் போர் குற்றம், அதற்குரிய குற்றவாளி ஒரு ராணுவ அதிகாரி அல்லது ராணுவ வீரர், ஆனால் மக்களை பாதுக்காப்பு வலயத்திற்குள் வரவழைத்து கிளஸ்டர் குண்டுகள், ரசாயன குண்டுகள், போன்ற ஆயுதங்களை பாவித்து திட்டமிட்டு கொன்றது, இனப்படுகொலை, போஸ்னியாவில் நடந்ததும், கொசோவோவில் நடந்ததும், ருவாண்டாவில் நடந்ததும், முள்ளிவாய்க்காலில் நடந்ததும் ஒன்று தான்.

ஆகவே 1948யில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை, அதிலிருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் திட்டமிடப்பட்ட முறையில் நடந்து கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பு, ஒரு இனப்படுகொலைஎன்றுதான் சகல உலக ஆய்வுகளின் படி நாம் வலியுறுத்தி கூறக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் அமெரிக்காவின் சில ராஜதந்திரிகள், சிறி லங்கா, இந்தியாவின் நண்பர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பாவிக்காதீர்கள் என்று சொல்லும் போது, எம்மவர்கள் அதற்கு தலையாட்டிவிட்டு, போற்குற்றத்தை எடுத்து செல்வோம் என்று திரும்பி வந்து விடுகிறார்கள்.

போற்குற்றத்தால் நமக்கு கிடைக்க கூடிய பலன் என்ன என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அதற்கும் மேலாக ஜெனிவாவில் அமெரிக்க அரசு கொண்டுவந்த பிரேரணையில் வடக்கு மாகாண தேர்தல் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பிரேரணையை இதே ஆங்கிலேய ஏகாதிபத்திய நாடுகளின் பிடிக்குள் சிக்குண்டு நிற்கும் எமது சில அமைப்புகள் வரவேற்றும் பாராட்டியும் இருக்கிறது. அதில் நாடுகடந்த அரசு முக்கியமாக இருந்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள், அண்மையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் நாடு கடந்த அரசின் ஜெர்மன் பிரதிநிதி ஒருவர், சிறி லங்கா அரசின் நல்லிணக்க ஆணை குழு வெளிவிட்ட அறிக்கையில் சில வரவேற்க்க தக்க பரிந்துரைகள் இருப்பதாகவும், அமெரிக்க அரசின் பிரேரணை எமக்கு விடுதலையை தேடி தரும் என்று சொல்லி இருந்தார்.

அதற்கான விடையை அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூறும் தினத்தன்று நாம் வலிகளை சுமந்து கொண்டு நிற்க, அமெரிக்காவில் எம்மவர்கள் துக்கம் கொண்டாடி கொண்டிருக்க, அதே நேரத்தில் அமெரிக்காவில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலரி கிளிண்டனை சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிசை சந்தித்தபோது தமிழர்க்கான தீர்வாக வடக்கு மாகாண சபையின் தேர்தலையும் வலியுறுத்தி இருப்பதையும் நீங்கள் எல்லோரும் செய்திகள் மூலமாக அறிந்திருப்பீர்கள்.

அதே காலகட்டத்தில் அதே அமெரிக்க நாட்டில், அமெரிக்க சண் பிரான்சிகோ விற்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையே ஒரு சில தமிழ் நண்பர்கள் பயணித்து கொண்டிருந்ததையும் நாம் சிலர் அறிந்திருந்தோம், அத்துடன் சண் பிரான்சிகோ நகரில் தமிழர் சிலரின் சந்திப்பு நடந்ததையும் எல்லோரும் அறிந்த செய்தியாக இன்று இருக்கிறது.

தென் ஆபிரிக்காவின் பங்கு தமிழர் பிரச்சனையில் எங்கே நிற்கிறது என்ற கேள்வி இன்று கேள்வி பெரிதாக இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஆதரித்து விடுதலை புலிகளின் உறுப்பினர்களை வரவேற்று பேசிய தென் ஆபிரிக்க அரசின் நிலைப்பாடு முள்ளிவாய்க்கால் பின் எங்கே நிற்கிறது என்பதை நாம் உற்று நோக்கவேண்டும். ஜூன் 2009யில் சிறி லங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டு வந்த பிரேரணையை வாக்களித்த தென் ஆபிரிக்க அரசு அண்மை காலமாக சிறி லங்கா அரசிடம் சிறி லங்காவில் போருக்கு பின் நில்லிணக்கு ஏற்படுவதற்கு தாம் தமது முழு ஆதரவையும் தருவதாக கூறிய வண்ணம் இருக்கிறது. அதே தென் ஆபிரிக்காவை அமெரிக்க அரசு தனது ஆசியாவின் பிராந்திய வல்லமை நிலைநிறுத்திக்கொள்ள பயன்படுத்துகிறது, இதில் முக்கிய விடயம் 19வது மனிதவுரிமை அமர்வில் ஆரம்பத்தில் சிறி லங்கா அரசுக்கு எதிரான பிரேரணையை மூன்றாம் உலக நாடாகிய தென் ஆபிரிக்காவே கொண்டு வருவதாக இருந்தது. அதன் பின் அமெரிக்க அந்த பிரேரணையை கொண்டு வந்ததையும், அதன் பின் இன்று நடைபெறுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம்.

அமெரிக்க சண் பிரான்சிகோ சந்திப்பு, தென் ஆபிரிக்காவிட்கும் லண்டனிட்கும், வாஷிங்டன், சண் பிரான்சிகோ என்று பயணித்து கொண்டிருக்கும் சிலரும், தென் ஆபிரிகாவிட்கு அண்மைகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணங்கள், அதன் பயணத்தில் பங்கேற்ற சம்பந்தர், சுமேந்திரன், அதே நேரத்தில் தென் ஆபிரிக்காவிட்கு பல பயணங்களை மேற்கொண்ட சில புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சந்திப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.

சம்பந்தர் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து சிறி லங்கா கொடியை பிடித்து கொண்டு இருக்கிறார்,ஏகாதிபத்திய நாடுகள் சிறி லங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பி நிற்கிறார்கள், சிறி லங்காவில் சுமந்திரன், சிறி லங்காவில் (அவர் தமிழ் பிரதேசம் என்ற சொல்லை பாவிக்க விரும்பவில்லை) தமிழர்கள் தமிழீழத்தை கேட்கவில்லை என்கிறார்.

அதற்கும் மேலாக தமிழர்களின் பேரழிவிற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த சரத் பொன்செக்காவுடன் கைகோர்த்து நின்ற சம்பந்தர் இன்று சரத் பொன்சேகாவின் விடுதலை அடைந்து இருக்கும் நேரத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருப்பதும் அதே நேரத்தில் அமெரிக்க அரசும் இந்த விடுதலையையொட்டி சிறி லங்கா அரசை பாராட்டி இருப்பதும் இன்று தமிழர்களை வைத்து அமெரிக்க செய்யும் அரசியல் மீண்டும் எம்மை பனிப்போர் காலத்திற்கு இழுத்து செல்கிறது.

அத்துடன் சில மாதங்களுக்கு முன் மிக ரகசியமாக ஆஸ்திரியா தலைநகரம் வியன்னாவிலும், பெர்லின் நகரிலும் ஒரு அரசுசார்பற்ற அமைப்பின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழீழ கொள்கையை விலைபேசும் சம்பந்தர், சுமேந்திரனுடன் புலம் பெயர் தமிழர் சிலருடன் சந்திப்பு, இன்று இவையெல்லாம் தமிழர்களின் விடுதலை, உரிமை சிலரால் விலைபேசப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் எம்மிடையே ஏற்படுகிறது.

அமெரிக்காவின் பிரேரணையில் கிழக்கு மாகாணம் மறைக்கப்பட்டுள்ளது, வடக்கு மாகாணத்தில் மாகாணசபை தேர்தல் வலியுருதப்பட்டுள்ளது.

இன்று இந்த அமெரிக்க திட்டத்தை சுற்றி பலர் இருப்பதையும், அமெரிக்க தனது பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்த முயல்கிறது என்பதையும் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.

அன்பார்ந்த தமிழ் மக்களே! முள்ளிவாய்காலில் நாம் இழந்த உறவுகளுக்கு நீதி கேட்டு நாம் 3வது வருடமாக நீதி கேட்டு உலகத்தின் ஐந்து கண்டங்களிலும் மே 18, தமிழரின் போராட்டத்தின் முடிவு முள்ளிவாய்க்கால் அல்ல என்று வலிகளுடனும் நீதிக்காக வலு சேர்ப்போம், நீதி கேட்டு நாம் நிற்கும் நேரத்தில், பல நாடுகளில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று பலர் கூற ஆரம்பித்து இருக்கும் நிலையில் தமிழீழ மக்களை சுற்றி தமிழ் தேசியம் பேசிக்கொண்டு, தமிழீழ கொடியை பிடித்து கொண்டு சிலர் தமிழர் விடுதலையை விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை எம் கண் முன்னாள் இன்று அறிந்து கொண்டு இருக்கிறோம்.

இதுவரை நாம் அமைதி காத்தது போதும், தமிழீழ மக்களின் விடுதலையை பாதுகாக்கும் முகமாக இன்று சர்வதேச வலை பின்னலில் எம்மவர்கள் சிலர் ஏகாதிபத்திய நாடுகளின் சர்வதேச புவியல் அரசியலில் எமது விடுதலையை விலை பேச நாம் பார்த்து கொண்டு இருக்க முடியாததின் காரணமாக, தமிழீழ மக்களை விழிப்பாக இருந்து இவ்வாறானவர்கள் இனம் கண்டு தமிழீழ மக்களின் விடுதலையை, தமிழீழத்தை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறோம்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

http://eeladhesam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.