Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றும் இன்றும் தமிழர்களைக் கொல்லும் தம்பிமுத்து என்னும் தறுதலை !

Featured Replies

london1-150x150.jpg1987ம் ஆண்டு கொக்கட்டிச் சோலை படுகொலைகள் பலற்றி பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால் அது எவ்வாறு நடந்தது ஏன் நடந்தது என்பது தொடர்பாக பலருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை . சமீபத்தில் லண்டன் வந்து புரொன் லைன் கிளப் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அருன் தம்பிமுத்து என்பவர் யார் ? என்று மக்கள் அறிந்திருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் தமது தாய் தகப்பனை சுட்டுக்கொன்றதாக இவர் வேற்றின மக்கள் மத்தியில் கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். துடிக்கத் துடிக்க தமது தாய் தந்தையர் இறந்ததாக 70MM பயாஸ்கோப் படம் போட்டுக் காட்டும் இந்த அருன் தம்பிமுத்து யார் ? இவர் குடும்ப வண்டவாளம் என்ன… உங்களுக்கும் தெரியவேண்டாமா ….

சரி 1987ம் ஆண்டு நடந்தது என்ன ? விடையத்துக்குச் செல்வோம்:

ஹாங்காங் நாட்டில் வசித்துவந்த அமெரிக்கர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் வசித்துவந்த உள்ளூர் வர்தகர்கள் சிலரும் சேர்ந்து 1987ம் ஆண்டு செரண்டிப் கடல் உணவு நிலையம் ஒன்றை ஆரம்பித்தனர். இதற்காக காணிகள் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கு இடைத் தரகர் வேலைபார்த்த ஆள் தான் சாம் தம்பிமுத்து ஆவார். இவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க உறுப்பினர். கள்ளவோட்டில் வென்று எம்.பி ஆக இருந்தவர். அப்போது 1 ஏக்கர் தரிசு நிலம் ரூபா 2500 க்கு விற்கப்பட்ட காலம். ஆனால் இவரோ மக்களின் காணிகளை, செரண்டிப் நிறுவனத்துக்காக வாங்குவதாகக் கூறி பணத்தைப் பெற்று, 2500 ரூபா கொடுக்கவேண்டிய இடத்தில், 500 ரூபாயைக் கொடுத்து உறுதிகயை மாற்றிக்கொண்டார். இதனால் பல குழப்பங்கள் எழுந்ததால், அந் நிறுவனம் இவரை வேலையில் இருந்து நிறுத்தியது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இந்த நாதாரி சாம் தம்பிமுத்து, எண்ணிப்பார்க்க முடியாத ஈனச் செயலில் இறங்கினார்.

இராணுவத்திடம் சென்று, செரண்டிப் நிறுவனம் இருக்கும் காணிக்குள் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும், அங்கே பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து அங்குசென்ற அதிரடிப்படையினர், அங்கே வேலைசெய்துகொண்டு இருந்த 86 அப்பாவித் தொழிலாளிகளைச் சுட்டுக் கொன்றனர். இந்த 86 பேரின் சாவுக்கும் கரணம் இந்த சாம் தம்பிமுத்துதான். அதிர்சியடைந்த அமெரிக்க நிறுவனம், இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. அதில் அது வெற்றியும் பெற்றது. இதனால் இலங்கை அரசு, இறந்த குடும்பத்துக்கு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் இதனை மன்னிக்கவில்லை. 86 அப்பாவித் தொழிலாளர்களைக் கொல்ல காரணமாக இருந்த சாம் தமிமுத்துவை குறிவைத்தனர். இதனை அறிந்த சாம் தம்பிமுத்துவும், அவரது மனைவியும் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

அவர்கள் கனடாவுக்குச் செல்ல விசா விண்ணப்பம் செய்தனர். செய்துவிட்டு வெளியே வரும்போது கனேடிய தூதரகத்துக்கு முன்னால் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ! இதுவே நடந்த உண்மை. பணத்துக்காவும், பேராசைக்காவும் 86 பேரின் உயிரைக் குடித்த நாதாரி சாம் தம்பிமுத்து, ஒரு தமிழனா ? ஈனப்பிறவியான அவரை புலிகள் ஏன் கொன்றார்கள் என்பது மக்களுக்கு இப்போது நன்கு புரியும். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் மகன் அருன் தம்பிமுத்து தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். நூலைப் போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பார்கள் ! அதுபோல அருன் தம்பிமுத்துவும், தனது வாலை ஸ்ரீலங்கா அரசுக்கு ஆட்டிக்கொண்டு தற்போது வலம் வர ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு பிரதேசவாதம் பேசிவரும் இவர், வர இருக்கும் தேர்தல்களில் இலங்கை அரசு சார்பாக போட்டியிடவும் உள்ளார். 86 பேர்களின் ரத்தகறை படிந்த இவரும், இவரது குடும்பமும் தமிழினத்தின் துரோகிகள் என்பதனை வரலாறு மறந்துவிடாது ! தமிழ் மக்களும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள் !

london2.jpg

www.irruppu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.