Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமும் இந்தியாவும்-19: சீனா, அமெரிக்காவிடம் ஆயுதம் கேட்ட ஜெயவர்த்தன!

Featured Replies

தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளைனயும்ää அவர்களுக்குப் புகலிடத்தையும் வழங்கிப் பராமரிப்பதை இந்தியா கைவிடப்போவதில்லை என்பதை லலித் அத்துலத்முதலியின் இந்திய விஜயம் கொழும்புக்குத் தெளிவாக உணர்த்தியது. இந்த நிலையில்ää இந்திய உதவியுடன் வடபகுதியில் தரையிறங்கி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடிய தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியது.

சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவுடன் இராணுவத்தைப் பலப்படுத்துவதுதான் இதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தன அதற்கான திட்டங்களுடன் 1984 மே, ஜூன் மாதங்களில் சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொண்டார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியிலான ஆதிக்கத்தைச் செலுத்தி இந்தியாவுடன் போட்டியிடும் நாடுகளாக சீனாவும் அமெரிக்காவும் உள்ளன. இதனால்ää இந்த நாடுகளின் ஆதரவைத் தம்மால் நிச்சயமாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜெயவர்த்தன நம்பினார். அதற்கான சில உபாயங்களையும் வகுத்துக்கொண்டே அவர் விமானம் ஏறினார்.

சீனாவுக்கான ஜெயவர்த்தனவின் விஜயம் பெருமளவு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. சீன ஜனாதிபதி லீ சியானை பீஜிங்கில் ஜனாதிபதி ஜெயவர்த்தன சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்கள்ää இதன் பின்னணியில் இந்தியாவின் செயற்பாடுகள் போன்றவற்றினால் இலங்கை எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜெயவர்த்தன விளக்கினார். ~~இலங்கையின் 2ää500 வருடகால வரலாற்றில்ää பல தடவைகள் நாம் ஆக்கிரமிக்கப்பட்டோம். இருந்தபோதிலும், ஒருபோதும் நாம் சரணாகதியடையவில்லை. அதேபோலத்தான் இப்போதும் நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் சரணபகதியடையப்போவதில்லை. ஒன்றரைக் கோடி மக்களும் சரணாகதியடையாமல் மரணத்தைத் தழுவிக்கொள்வோம்" என உணர்ச்சிவசமாக ஜனாதிபதி ஜெயவர்த்தன பேசினார்.

இதற்குப் பதிலளித்த சீன ஜனாதிபதி, இந்தியாவிடமிருந்து வரக் கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான திட்டம் எதனையும் அறிவிக்கவில்லை. பதிலாக இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு எப்போதும் உற்சாகமளிக்கும் வகையிலேயே சீனா செயற்படும் எனக் குறிப்பிட்டார். சீனா ஜனாதிபதியின் இந்தப் பதில் ஜெயவர்த்தனவுக்குப் பெரிதும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சீனப் பிரதமர் ஸாவோ ஸீ யுங்கையும் ஜெயவர்த்தன சந்தித்தார். இந்தச் சந்திப்பம் முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்தச் சந்திப்பின்போதும், இலங்கை எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஜெயவர்த்தன விளக்கினார். இதற்குப் பதிலளித்த சீனப் பிரதமர், "மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கான எந்தவிதமான உரிமையும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இருக்க முடியாது. உங்களுடைய நாட்டின் சுதந்திரத்தையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாம் நிச்சயமாக எமது ஆதரவை வழங்குவோம். உங்களுடைய தலைமையின் கீழ் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நாம் நிச்சயமாக நம்புகின்றோம்" எனக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, "இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் சீனா உதவி பரிந்துவருகின்றது. அவை அனைத்தும் வெற்றிகரமானவையாகவுள்ளன. இருந்தபோதிலும், உள்ளுர் பாதுகாப்புதான் எமக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ளது. இவ்விடயத்தில் உங்களடைய உதவியை நாம் எதிர்பார்க்கின்றோம். எமது கடற்படைக்கு ஆறு ரோந்துப் படகுகளைத் தந்துதவமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் சட்டவிரோதமான முறையில் வருபவர்களைத் தடுபபதற்கும், வடபகுதியில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும் இது அவசியமானதாகும்" என விளக்கினார். ஜெயவர்த்தனவின் இந்தக் கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டது.

இருந்த போதிலும்ää இது தொடர்பான தகவல்களை அறிந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜெயவர்த்தன மீது கடும் சீற்றமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிடமிருந்து தமக்கு ஆபத்து உள்ளது என சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை முன்னெடுத்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஜெயவர்த்தன மேற்கொண்டுள்ள முயற்சிகளே இந்திரா காந்திக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுத்ததாக 'இலங்கையில் இந்தியத் தலையீடு' என்ற நூலில் ரோஹான் குணரட்ண குறிப்பிட்டிருக்கின்றார்.

சீன விஜயத்தையடுத்து தென்கொரியாவுக்கும் இதேபோன்ற விஜயம் ஒன்றை ஜெயவர்த்தன மேற்கொண்டார். சோவியத்- இந்திய அணிக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டுள்ள ஒரு நாடாகவே தென்கொரியாவும் இருந்தது. இதனால், இந்தியாவுடன் விரோதத்தைக் கொண்டுள்ள நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஜெயவர்த்தனவின் நோக்கம் என்பது புரிகின்றது. பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம் என்பதால் இந்தியாவுக்கு விரோதமான நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வது இலகுவானதாக இருக்கும் என ஜெயவர்ததன கணக்குப் போட்டிருந்தார்.

தென்கொரியாவுக்கான விஜயத்தையடுத்து அமெரிக்காவுக்குச் சென்ற ஜனாதிபதி ஜெயவர்த்தனää அங்கு அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்ளத்தக்கவகையில் அமெரிக்காவிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்வதுதான் றீகனுடன் ஜெயவர்த்தன நடத்திய பேச்சுக்களின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது. இலங்கையின் நிலைமைகளைää குறிப்பாக இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகள் வடபகுதியில் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்பாக ஜெயவர்த்தன அமெரிக்க ஜனாதிபதிக்கு தெளிவாக விளக்கினார். இதனை விளக்கிய ஜெயவர்த்தனää இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவின் இராணுவ உதவியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஜெயவர்த்தனவின் கருத்துக்களை மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி றீகன் இந்தப் பிரச்சினை தொடர்பில் இப்போது எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் தொடர்பாக அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக அப்போதிருந்த ஜோர்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் உயர் பாதுகாப்ப அதிகாரிகளுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கமைய வெள்ளை மாளிகையிலுள்ள அமைச்சரவை மண்டபத்தில் விஷேட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 1984 ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அமெரிக்க உப ஜனாதிபதியுடன் முக்கிய உயர் அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். இலங்கை நிலையை எவ்வாறு கையாள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு கூட்டமாக இது இருந்திருந்தது எனக்கூறலாம்.

இச்சந்திப்பில் உரையாற்றிய ஜெயவர்த்தன, இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாகவும், அதன் பின்னணியில் இருந்து இந்தியா எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் விளக்கினார். இந்தச் சந்திப்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள் மிகவும் முக்கியமானவையாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் தன்னுடைய காய்நகர்த்தல்களுக்கு ஜெயவர்த்தனவைப் பயன்படுத்திய அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பதற்கு இச்சந்திப்பு பெருமளவுக்கு உதவியது.

புதுடில்லிக்கு தான் சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் தான் நடத்திய பேச்சுக்களின் விபரங்களையும் ஜெயவர்த்தன இங்கு விளக்கினார். குறிப்பாக தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போராளிகளுக்கு வழங்கிவரும் ஆதரவு ஆபததானது எனவும் ஜெயவர்த்தன குறிப்பிட்டார். இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலைமைகளை விளக்கிய ஜெயவர்த்தன போராளிகளுக்கு இந்திரா காந்தி ஆதரவளிப்பது தேர்தலில் வெற்றிபெறுவதை நோக்கமாகக் கொண்டதே எனவும் தெரிவிததார்.

ஜெயவர்தன எதிர்பார்த்ததைப்போல அமெரிக்க விஜயம் அவருக்குப் பெருமளவு சாதகமாகவே அமைந்திருந்தது. எதிர்பார்த்த ஆயுத உதவிகள் கிடைத்தன. திருப்தியுடன் அவர் கொழும்பு திரும்பிய போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஜெயவர்தன மீது கடும் சீற்றமடைந்தவராக இருந்தார். ஜெயவர்த்தனவின் இந்த விஜயங்கள் தொடர்பில் முழுமையான புலனாய்வுத் தகவல்கள் இந்திரா காந்திக்குக் கிடைத்திருந்தன. அடுதத கட்ட நடவடிக்கைக்கு அவர் தயாரானார்...

- தமிழ் லீடருக்காக சிவயோகன்.

http://www.tamilleader.com/pathivukal/4496-eelamindia19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.