Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்குள் உருவாகியுள்ள வெடிப்பு! காரணம் யார்? - சமகால அரசியல் பார்வை

Featured Replies

இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவது தொடர்பாக பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத போதிலும், வேறு இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான முன்னணிச் சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சியின் கடும் போக்கின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறக்கூடிய சூழ்நிலை தொடர்வதையும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

வெவ்வேறு கட்சிகளின் கூட்டடாக இருப்பது மட்டும் கூட்டமைப்பில் உருவாகியிருக்கும் நெருக்கடிகளுக்கக் காரணம் அல்ல. கூட்டமைப்பின் முதன்மையான கட்சியாக, பிரதான கட்சியாக தமிழரசுக்கட்சி இருக்க வேண்டும் என்ற அந்தக் கட்சியினரின் விட்டுக்கொடுக்க முடியாத கோரிக்கைதான் பிரச்சினைகளுக்கப் பிரதான காரணமாகவுள்ளது.

கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய பேருரையிலும் இந்த அவாவைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணிச் சக்தியாக தமிழரசுக் கட்சியே இருக்கும் என அங்கு அவர் பிரகடனம் செய்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் தமிழரசுக் கட்சி ஒன்றுதான் இரத்தக்கறை படியாத ஒரு கட்சி என்பது போல அவர் தெரிவித்திருந்தமையும் பலரது விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைப் பகிரங்கமாகவே விமர்சித்திருக்கின்றார். கூட்டமைப்பக்குள் ஒரு வெடிப்பு இருப்பதை இது உறுதிப்படுத்தியது.

இந்தப் பின்னணியில்தான் நேற்று முன்தினம் பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே நடைபெற்ற சந்திப்பு பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. இதில் சாதகமான சில சமிஞைகளைக் காணக்கூடியதாக இருந்துள்ள போதிலும்கூட கட்சியைப் பதிவு செய்வது என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சியினர் விட்டுக்கொடுப்பதற்கத தயாராகவில்லை என்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் மூன்று விடயங்கள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதி உயர் சபை ஒன்றை அமைப்பது.

2. கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளுக்கு இடையிலும் பரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எற்படுத்திக்கொள்வது.

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்துகொள்வது.

இதில் முதலாவது இரு விடயங்களிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதை ஆரோக்கியமானதாகக் கருதக்கூடியதாகவுள்ள போதிலும், அதில் அடுத்த கட்டங்களில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களே முக்கியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் பீடமாக தற்போது கருதப்படுவது அதன் பாராளுமன்றத் தெரிவுக்குழுதான். இருந்த போதிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கு அதி உயர் சபை ஒன்றின் அவசியத்தை ஐந்து கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளமை முன்னேற்றமான ஒன்றாகவே கருதப்படுகின்றது.

கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இப்போது இணைந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ என்பன ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றன. இவற்றுடன் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் இப்போது இணைந்திருக்கின்றன. அதற்றுக்கிடையே எழுத்துமூலமான இணக்கப்பாடுகள் எதுவும் இல்லை. கூட்டமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அவற்றுக்கிடையில் பரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளையில், கூட்டமைப்பை தனியான ஒரு அரசியல் கட்சியாகப் பதிந்துகொள்வதில் வெள்ளிக்கிழமைக் கூட்டத்தில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பம் கடந்த வாரம் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியினர் தேவையான ஆவணங்களை உரிய முறையில் கொடுக்காதததுதான் இந்த நிராகரிப்புக்குக் காரணம் என மற்றைய கட்சியினர் குற்றஞ்சாட்டியதாகத் தெரிகின்றது. அதேவேளையில் தேர்தல் திணைக்களம் ஒரு கட்சியின் விண்ணப்பத்தை நிராகரித்தால், ஒரு வருட காலத்துக்கு குறிப்பிட்ட கட்சி மீண்டும் விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆக, கட்சியைப் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக தமிழரசுக் கட்சி செய்த ஒரு சதியாகவே மற்றைய கட்சிகள் இதனை நோக்குகின்றன.

இந்த நிலையில் உடனடியாகக் கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமாயின் கூட்டமைப்பினருக்கு ஒரேயொரு மாற்றுவழிதான் உள்ளது. அதாவது, மற்றொரு கட்சியின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என மாற்றிக்கொள்வதுடன், அதன் செயற்குழு உறுப்பினர்களையும் மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக தமது கட்சியைத் தியாகம் செய்வதற்கும் சில கட்சிகள் தயாராக இருந்துள்ளன. இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியினர் அதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தெரிகின்றது. அதாவது கூட்டமைப்பைப் பதிவு செய்துகொள்வதை தமிழரசுக் கட்சியினர் தவிர்ப்பதற்கு முற்படுகின்றார் என்ற சந்தேகத்தைத்தான் இதுவும் வலுப்படுத்தியிருக்கின்றது.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 'பதிவு" தொடர்பான வாக்குவாதங்கள் ஒரு வருட காலத்துக்குப் பின்தள்ளப்படப்போகின்றது!

கூட்டமைப்பு பதிவைத் தவித்துக்கொள்வதன் மூலம் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக அதற்கான சட்டரீதியான அங்கீகாரம் இல்லாமல் போய்விடுகின்றது. இது முதலாவது பிரச்சினையாகும். அதற்குச் சட்டரீதியான ஒரு அங்கீகாரம் இருக்கும் போதுதான் அதற்கான நிதி உதவி என்பவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், அதற்கான மாணவர் அமைப்பு, மகளீர் அமைப்பு, இளைஞர் அமைப்பு என அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்கி கீழ் மட்டத்தில் பணியாற்ற முடியும்.

2001 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் எதிர்கொள்ளப்பட்ட வேளையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் பலிகள் அமைப்பின் ஆதரவுடன் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது கஜேந்திரகுமார் கபான்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அதில் இணைந்திருந்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பு 16 இடங்களைப் பெற்றுக்கொண்டது.

கூட்டமைப்பு எதிர்கொண்ட இரண்டாவது பொதுத் தேர்தல் 2004 ஏப்ரலில் நடைபெற்றது. இதில் 22 இடங்களைக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. இருந்தபோதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010 ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 14 ஆசனங்களை மட்டுமே கூட்டமைப்பினால் பெற முடிந்தது. ஆக, பத்து வருட காலமாக கூட்டமைப்பு செயற்படுகின்ற போதிலும், அதற்குத் தேவையான கட்டமைப்பக்களை உருவாக்கவோ, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்துகொள்வதற்கோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவிலலை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பை தனியான ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றார்கள். இதற்கான தமது விருப்பத்தை அவர்கள் ஏற்கனவே தேர்தல்களின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். கூட்டமைப்பைவிட்டு வெளியேறி தேர்தல் களத்தில் குதித்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்க தாம் தயாராகவில்லை என்பதை கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் திட்ட வட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இப்போதும் அதே நிலைதான் காணப்படுகின்றது. அதனால்தான் கூட்டமைப்பை வைத்திருக்கவும் வேண்டும் ஆனால், பதிவு செய்யவும் கூடாது என தமிழரசுக் கட்சி முற்படுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்கள் பெரும் நெருக்குதலகளைச் சந்திக்கின்றார்கள். பேரினவாதம் சிறுபான்மையினரின் அடையாளத்தையே தாயகத்திலிருந்து துடைத்தெறிவதற்குத் துடித்துக்கொண்டுள்ளது. இதனைச் செயற்படுத்திக்கொண்டும் உள்ளது. முல்லைத்தீவு, சம்பூர் என நாம் இழக்கும் நிலங்களின் பரப்பளவு கூடிக்கொண்டே செல்கின்றது. இவற்றுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தாயகத்தில் கட்டுறுதியான அரசியல் தலைமை ஒன்று அவசரமாகத் தேவைப்படுகின்றது. அதனை வழங்குவதற்குப் பதிலாக சில்லறைப் பிரச்சினைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருப்பது தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே உள்ளது.

தமிழரசுக் கட்சியின் இவ்வாறான செயற்பாடும் கூட தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான ஒன்றாகவே கருதப்படவேண்டும்!

- பார்த்தீபன்.

http://tamilleader.com/mukiaya/4536-2012-06-03-16-42-56.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாராசமான பாடல் அது எல்லாருக்கும் தெரியும்.. ஒரு வரைமுறை இல்லாம சேர்த்து கொண்டால் இப்படித்தான் ஆகும். அதென்ன பெரிய தமிழரசு கட்சி. கும்பலில் கோவிந்தா போடுவதெல்லாம்.. பெரிய வேலையா.. அந்த தெலுங்க அரசு கட்சியை கை கடாசிவிட்டு வேற நல்ல அணியை அமைக்க இப்ப காலம் கணிந்து வருகுது... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடையம் இலகுவாகவும் எவ்வித பிரச்சினை இன்றியும் அதுதவிர எதிர்காலத்தில் தமிழர்க்கான ஒரு நல்ல அரசியல் தீர்வினை எட்டுவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்குமாகவும் ஒரேயொரு விடையத்தைச் செய்தாலே போதும் அதுதான் "சிங்களவன் பேண்டுவிட்டதைப் பொறுக்கித் தின்ன நினைக்கும் சுமந்திரனை வெளியேற்றவும்" எல்லாம் சுமூகமாக நடக்கும்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கும், மகாத்மாவை சுட்டிகொன்ற கோட்சேயின் பரம்பரைக்கும், வெள்ளை அரசில் பணிபிரிந்தவர்களின் பரம்பரைக்கும் இந்தியாவில் இன்று தேசியக்கொடி மூவர்ணக்கொடிதான். அதுபோல ஈழ விடுதலை போராட்டத்தில் துரோகம் செய்தவர்களின் வழிவந்தவர்களுக்கும் புலிக்கொடிதான் தேசியக்கொடி, அந்த நாள் விரைவில் வரும்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கும், மகாத்மாவை சுட்டிகொன்ற கோட்சேயின் பரம்பரைக்கும், வெள்ளை அரசில் பணிபிரிந்தவர்களின் பரம்பரைக்கும் இந்தியாவில் இன்று தேசியக்கொடி மூவர்ணக்கொடிதான். அதுபோல ஈழ விடுதலை போராட்டத்தில் துரோகம் செய்தவர்களின் வழிவந்தவர்களுக்கும் புலிக்கொடிதான் தேசியக்கொடி, அந்த நாள் விரைவில் வரும்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கும், மகாத்மாவை சுட்டிகொன்ற கோட்சேயின் பரம்பரைக்கும், வெள்ளை அரசில் பணிபிரிந்தவர்களின் பரம்பரைக்கும் இந்தியாவில் இன்று தேசியக்கொடி மூவர்ணக்கொடிதான். அதுபோல ஈழ விடுதலை போராட்டத்தில் துரோகம் செய்தவர்களின் வழிவந்தவர்களுக்கும் புலிக்கொடிதான் தேசியக்கொடி, அந்த நாள் விரைவில் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.