Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுப்பாரா..?

Featured Replies

ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுப்பாரா..?

ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார் இன்று. இன்று மாநிலங்களவை உறுப்பினராக அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் ராஜிய சபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவி ஏற்றுள்ளார். சச்சின் அவர்களை போன மாதத்தில் ஏப்ரல் இறுதியில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார், அதற்கேற்ப சச்சின் அவர்களுக்கு இன்று ஹமித் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். என்னை எம்.பி.யாக தேர்வு செய்த சக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எம்.பி.ஆகிய நான் கிரிக்கெட் மட்டுமல்ல மற்ற விளையாட்டுத் துறைகளை ஊக்குவிக்க என்னால் ஆன அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன், ஏனைய விளையாட்டுத் துறைகளுக்கும் என்னால் உதவி செய்திட வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.

இந்நிலையில் தான் ஊழலுக்கு எதிராகவும், கறுப்புப் பண மீட்டெடுப்புக்கு ஆதரவாகவும் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அண்ணா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் புதிய எம்.பி.யாக நியமனம் பெற்ற சச்சின் டெண்டுல்கரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஹசாரே கூறுகையில், எம்.பி.யாக பொறுப்பேற்ற டெண்டுல்கர் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா கொண்டு வரும் விசயத்தில் சச்சின் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். லோக்பால் மசோதாவை ஆதரிக்காத சில எம்.பி.க்களை சந்தித்து வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு சச்சின் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை அல்லது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கடந்த வாஜ்பாய் அரசிலும், அதற்குப் பிறகு அமைந்த யு.பி.ஏ. அரசிலும் சில வரிசலுகைகளை பெற்றார் என்பதை அனைவரும் அறிவோம். அதாவது விலை மதிப்புமிக்க ரொனால்ட் கார் பலவற்றை பரிசுப் பொருளாக பெற்றார்.அதற்கு வரியாக சுமார் சில கோடிகளை கட்டச் சொன்னது சுங்கத்துறை, புகழ்பெற்ற விளையாட்டு வீரரும் கோடிக்கணக்கான சொத்துக்களை பெற்றவருமான சச்சின் கட்ட மறுத்து, சலுகை வேண்டி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். மத்திய அரசும் உடனே விரைந்து வரிசலுகை அளித்தது. இந்திய கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் ஆனந்தம் அடைந்தார்கள். இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..? அந்த வரிசலுகை பெற்ற ஸ்போர்ட்ஸ் காரை வரி உட்பட நல்ல விலைக்கு பலமான லாபத்துக்கு விற்றுவிட்டார் என்று தெரியுமா..? இவை மட்டுமின்றி, இன்று ஊழலில் சிக்கியுள்ள அணைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சரத் பவார் வழிகாட்டுதலோடு சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பல நூறு சர்க்கரை ஆலைகளுக்கு முதலாளி என்று தெரியுமா..? வெளிநாடுகளில் போட்டிருக்கும் முதலீடுகள் எவ்வளவு என்று தெரியுமா..? இவை எல்லாம் சச்சினுக்கு விளையாட்டுத் துறையில் கிடைத்த வருமானம், அந்த வருமானத்தை முதலீடுகளாக பெருக்கியுள்ளார் என்று யாரும் கூற முடியாது. ஊழல் அமைச்சர்களிடம் நெருங்கிய முதலீட்டாளர், நண்பர் தற்பொழுது அரசியல்வாதி என்று புதிய அவதாரம் எடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரிடம் ஹசாரே ஊழலுக்கு எதிராக ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்னவாக இருக்கும்..?

ஒருவேளை இவ்வாறு இருக்கலாமா..? மன்மோகன் சிங் மீது எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றன என்று கூறும் சோனியா அம்மையாரின் எரிச்சலுக்கும், மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பது ஒன்று தான் தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் முக்கயமானது என்று கூறும் கருணாநிதியின் பொய்யுரைக்கும் எவ்வாறு துளி கூட சம்மந்தமே இல்லையோ அதைப் போன்றது தான் சச்சின் டெண்டுல்கர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் என்று கருதலாமா..?

அல்லது இந்திய இளைஞர்களிடம் இந்தியாவின் ஐகான் என்று உருவகத்தை பெற்றிருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒன்றும் ஊழலுக்கு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு என்றும் சளைத்தவர் இல்லை என்று பிம்ப உடைப்பாக இருக்குமா..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

சங்கிலிக்கருப்பு

கிரிக்கெட்டில நடக்காத ஊழலா?? அதுக்கே குரல் கொடுக்கேலை....

  • அவர் கிரிக்கட்டில் செய்யாத ஊழலா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.