Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்லஸ் டெய்லருக்கு தண்டனை மகிந்தருக்கு செங்கம்பளமா?

Featured Replies

நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பொன்று தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத் தண்டனையை விதித்துள்ளது. உலக வரலாற்றில் ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை.

இத்தனைக்கும் லைபீரிய ஜனாதிபதி நேரடியாகப் போரில் ஈடுபட்டவரோ அல்லது போரில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவோ, தலைமை தாங்குபவராகவோ இருந்தவரும் அல்ல. அயல்நாடான சியராலியோனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கு தனது சுய இலாபங்களுக்காக ஆயுதங்களை வழங்கி உதவியதுதான் இவர் மீதான போர்க்குற்றத் தண்டனைக்கு வழிகோலியது.

அதாவது, சியராலியோனில் நடைபெற்ற படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததுதான் இவர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கும், 50 வருடத் தண்டனைக்கும் காரணம். நைஜீரிய எல்லையில் கோடிக்கணக்கான பணத்துடன் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சார்ள்ஸ் டெய்லர் மீது ஐந்து வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ‘சார்லஸ் டெய்லர் போர்க் குற்றவாளிதான்’ என்பதற்கான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.

அவர் ஒரு போர்க்குற்றவாளி என்பதை கடந்த மாதம் உறுதிப்படுத்தியிருந்த சர்வதேச நீதிமன்றம், கடந்த வாரம் தண்டனையை அறிவித்து அவரைச் சிறைக்குள் தள்ளியுள்ளது. இதேபோன்று றுவாண்டில் 8 இலட்சம் ருட்சி இன மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் காலிக்ஸ்ற் நிசபோனிமனாவிற்கு இனப்படுகொலையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி, சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் ஆயுள் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, எகிப்தில் கடந்த ஆண்டு நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 850 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு அந்த நாட்டு நீதிமன்ற மொன்று ஆயுள்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், முபாரக்குக்கு இந்தத் தண்டனைபோதாது, அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றவேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளார்கள்.

இவ்வாறு, போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் பொது மக்களின் உயிரிழப்புக்களுக்கு காரணமானவர்களும் தண்டனைகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ள அதேகாலத்தில்தான் பாரிய இனப்படுகொலை ஒன்றில் ஈடுபட்ட சிறீலங்காவின் முப்படைகளையும் தலைமைதாங்கி வழிநடத்திய சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய ராணியின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காக சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளார்.

‘போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்’ பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கே அஞ்சுவார்கள். அந்தளவிற்கு மனித உரிமை மீறல்வாதிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் பிரித்தானியாவிற்குள் இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்தவும், அவரது படைத் தளபதிகளும், அவர்களுடன் இணைந்து படுகொலைகளைப் புரிந்த ஒட்டுக்குழுக்களின் தலைவர்களும் நடமாடமுடிவது அதிசயம்தான்.

பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் அங்கு நிம்மதியாக தனது பொய்ப்பித்தலாட்டங்களை அரங்கேற்ற முடியாது என்பதை புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டத்தினால் விமானத்தின் பின் கதவு வழியாக வெளியேறியபோதும் மகிந்த இம்முறையும் உணர்ந்து கொண்டிருப்பார்.

எனினும், சாதாரண சிப்பாய்களுக்கே தண்டனை வழங்க மறுத்துவரும் சிறீலங்கா நீதித்துறை, மகிந்த மற்றும் அவருடன் கூட்டிணைந்து இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு தண்டனையை வழங்கிவிடும் என என்றுமே எதிர்பார்க்கமுடியாது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் மீது பாரிய இனப்படுகொலையைப் புரிந்த சிறீலங்காவின் ஜனாதிபதிக்கும் அவரின் கீழ் செயற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவத் தளபதிகள் அனைவரையும் சர்வதேசத்தின் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நிறுத்துவதன் ஊடாகவே, அவர்களை இனப்படுகொலையாளிகளாக நிரூபித்து, தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியும்.

அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் தண்டனை என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயத்தையும், தமிழ் மக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுப்

பதற்கான வாசலையும் திறந்து வைக்கும் என்பது திண்ணம். எனவே, இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் காத்திரமான நகர்புவுகளை புலம்பெயர்ந்த தமிழர் தலைமைகள் முன்னெடுக்கவேண்டும். அதற்கான இலகுவான வழிகளையே லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கும், றுவண்டா முன்னாள் அமைச்சர் காலிக்ஸ்ற் நிசபோனிமனாவிற்கும் சர்வதேச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

நன்றி : ஈழமுரசு

ஆசிரியர் தலையங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத் தண்டனையை விதித்துள்ளது. உலக வரலாற்றில் ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை.

இத்தனைக்கும் லைபீரிய ஜனாதிபதி நேரடியாகப் போரில் ஈடுபட்டவரோ அல்லது போரில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவோ, தலைமை தாங்குபவராகவோ இருந்தவரும் அல்ல. அயல்நாடான சியராலியோனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கு தனது சுய இலாபங்களுக்காக ஆயுதங்களை வழங்கி உதவியதுதான் இவர் மீதான போர்க்குற்றத் தண்டனைக்கு வழிகோலியது.

இதே தண்டனை மகிந்தவிற்கு வருமாயின்???? வராது வரவும் விட மாட்டார்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.