Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழம் குறித்து ஜெயலலிதா..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்

அப்படியென்றால்..

சரி எங்களை நிராகரிக்காமல் ஒரு இலட்சியம் என்று சொல்வது நல்ல பண்பான சொல் பிரயோகம். அவ்வளவுதான்

முதலில் அம்மணிக்கு ஈழம் என்பது முழு இலங்கையைத் தான் குறிப்பதென்பது தெரியவில்லையா??

என்ன நேசன் உம்மை நீரே தேற்றிக் கொள்கின்றீரா??

அம்மணி செப்பியது:

ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய நிலையில் ஈழத்தமிழர் என்பது முழு இலங்கைத் தமிழர்களையும் குறிப்பதில்லை. இந்த விசயத்தில் ஜெயலலிதா சொன்னது சரியே.

கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.

ஈழம் என்பது எங்கள் தாய்நாட்டைத்தான் குறிக்கும். முழு இலங்கையும் அல்ல. இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள்.

ஈழம் மற்றது சிறீலங்கா.

எனவே ஜெயா அக்கா சொன்ன தமிழர் இலங்கைத்தீவில் இரண்டு நாட்டிலும் உள்ள தமிழர் பற்றி.

ஜெயா அக்காவும் கனவுத்தொழிற்சாலையில் இருந்துதானே வந்தவா. அந்த பழக்கதோசம் தான். கனவு என்கிறா போலும்

வாழ்க டமில்நாடு

தமிழக அரசியல்வாதிகள் உருப்படியில்லாத புண்ணாக்குகள். எமது தீவிர போரட்டம் 23 வருடங்களை கடந்து விட்டது. இவ் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் எமது விடுதலை முடிவுக்கு வரவில்லை. ஆங்காங்கே தமிழ் நாட்டுபற்றாளர்கள் குரல் கொடுத்தால் அவர்களையும் சிறையில் போட்டு விடுகிறார்கள். தமிழ்நாடு மாபியா அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது. இவர்களின் இலட்சியம் பணம் சம்பாதிப்பதுதான். :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்வாதிகளின் வேலை மக்களை அடிக்கடி குழப்புவதுதானே!

அதைத்தான் இவரும் செய்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.

ம்.. ஆனால்.. அந்தச் செவ்வியில் அதனை அவர் சொன்ன தொனியில் நிறைவேறாத கனவு என்பது போன்று சொன்னதாக தோன்றவில்லை. எதுவோ அவர் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம்.

இன்னும் கேட்டிருக்கலாம்.. கிளறியிருக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் படி ஈழம் என்பது இன்றைய நிலையில் அது இலங்கையல்ல என்ற நிலையில்தான் நோக்கப்படுகிறது. நடைமுறையில் இது தான் யதார்த்தம். வேண்டுமானால் விவாதிக்கலாம் இல்லையென்று.

பலர் ஈழம் என்பது வடகிழக்குத் தமிழர்களின் தாயகத்தைத் தான் குறிப்பதாக தவறாக எண்ணுவதாலேயே அப்படித் தெரிகின்றது. மற்றும் படி ஈழம் என்பது முழு இலங்கையையே குறிக்கின்றது. இல்லை யதார்த்தம் அதுவல்ல என்றால் பின்பு ஏன் தமிழீழம் என்ற வார்த்தைப் பிரயோகம்.

பலர் ஈழம் என்பது வடகிழக்குத் தமிழர்களின் தாயகத்தைத் தான் குறிப்பதாக தவறாக எண்ணுவதாலேயே அப்படித் தெரிகின்றது. மற்றும் படி ஈழம் என்பது முழு இலங்கையையே குறிக்கின்றது. இல்லை யதார்த்தம் அதுவல்ல என்றால் பின்பு ஏன் தமிழீழம் என்ற வார்த்தைப் பிரயோகம்.

அட பாவமே. இதில வசம்பூக்கு என்ன சந்தேகம்.?

சிங்கள நாட்டில் சிங்கள சொல்லாகிய ஈழம் எண்ற சொல்லை நாங்கள் நேரடியாக கடன் வாங்காமல் தமிழ்ழீழம் எண்டு தமிழோடை சேத்து சொல்லுறம்.... ஈழம் எப்படி சிங்களவனுக்கு சொந்தமோ அப்படியே அந்த சொல்லும் சொந்தம் எண்டு நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரிய வேணும் எண்டதில்லை. :lol:

அகிலன் wrote:

அட பாவமே. இதில வசம்பூக்கு என்ன சந்தேகம்.?

சிங்கள நாட்டில் சிங்கள சொல்லாகிய ஈழம் எண்ற சொல்லை நாங்கள் நேரடியாக கடன் வாங்காமல் தமிழ்ழீழம் எண்டு தமிழோடை சேத்து சொல்லுறம்.... ஈழம் எப்படி சிங்களவனுக்கு சொந்தமோ அப்படியே அந்த சொல்லும் சொந்தம் எண்டு நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரிய வேணும் எண்டதில்லை.

அப்பு அகிலன்

முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.

அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??

அகிலன் wrote:

அப்பு அகிலன்

முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.

அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??

அப்ப என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் சொல்லான ஈழம் சிங்கள நாட்டின் பெயரா ? அல்லது ஈழம் முழுவதும் தமிழரின் சொந்தமானதை சிங்களவன் பிடித்துவிட்டானா.?

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தாறதைப்பற்றி சிந்தித்து பார்க்கவே மாட்டீர்களா.? ஈழம் எண்ற பெயர் எதனால் எப்போ வந்தது எண்று யாரும் சொல்லித்தரவில்லையா.? :lol:

அகிலன்

இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!! :lol::lol::lol:

இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!! :lol::lol:

அண்ணா நீங்கதான் எல்லாம் தெரிஞ்ச சுப்பர் எடுத்து விடுங்கண்ணா.

களத்தில இருக்கிற அனேகர் அறிவாளிகள் அவர்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டி இல்லை. ஒண்று இரண்டு அரவேக்காடுகள் உங்களைபோல இருக்கிறார்கள்தான் அவர்களுக்கு சொல்லி வேலை இல்லை. :lol:

அகிலன்

பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரியாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.

அகிலன்

பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரயாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.

தெரியாது என்பதை ஒத்து கொள்ளுறீங்கள் போல நல்லது... :lol::lol::lol:

நான் தெரியவில்லை என்பதால்த் தானே உம்மைச் சொல்லும் படி கேட்கின்றேன். எல்லாம் தெரிந்தவர் எடுத்து விடுமன். எனியும் சொல்ல முடியவில்லை என்றால் புலம்பியதை ஒத்துக் கொள்ளும். எனிமேலாவது தேவையில்லாமல் எல்லாம் தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதி முட்டாள்த் தனத்தை நிறுத்திக் கொள்ளும். :P :P

ஈழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.

[தொகு]

பெயர்த் தோற்றம்

ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.

[தொகு]

'தமிழு'ம் 'ஈழ'மும்

ஈழம் என்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.

[தொகு]

தற்காலத்தில் 'ஈழம்'

இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D" இலிருந்து மீள்விக்கப்பட்டது

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%...%AE%AE%E0%AF%8D

ஈழம்

[தொகு]

பெயர்த் தோற்றம்

ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.

இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது ஆராயாமல் வசம்பு தான் சொல்லுற சொல்தான் சரி என்கிறாரே..... அது சரியா நாரதார் அண்ணா...??? :lol:

எனிமேலாவது தேவையில்லாமல் எல்லாம் தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதி முட்டாள்த் தனத்தை நிறுத்திக் கொள்ளும்.

அறிவுரை எல்லாம் சொல்லுறீங்கள் போலகிடக்கு...... மற்றவைக்கு மட்டும்தானே அறிவுரை...???? :lol::lol::lol:

நாரதர்

ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.

ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.

அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப

இங்கே ஈழம் என்பது சிங்களச் சொல் என்று அகிலன் எழுதிய தவறைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அது புரியாமல் தலாவும் ஏன் புலம்புகின்றாரோ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.