Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் நாடற்றோர் பிரச்சனை - க.வீமன்

Featured Replies

[url="http://www.sankathi24.com/news/21182/64//d,fullart.aspx#"]

நாடற்றோர் எண்ணிக்கை பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளது. நாடற்றோர் (Stateless People) அகதிகள் அல்ல. ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க மக்கள் நாடிழந்து புகலடைந்த நாடுகளில் உரிமைகள் இழந்து நாடற்ற பெருங் கூட்டமாக வாழ்கின்றனர். உலகின் நாடற்றோரின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

இவர்களைப் பற்றிப் பேசுவோரும் இவர்களுடைய பாதுகாப்பு பற்றி அக்கறைப் படுவோரும் மிக அரிது. செய்தி நிறுவனங்கள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இதுவொரு பாரிய மனித உரிமைப் பிரச்சனை. கென்யா, சோமாலியா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில், வங்கதேசம், இலங்கை, பர்மா, போன்ற நாடுகளின் மக்கள் காற்றில் பறக்கும் தூசி போல் இருப்பிடமின்றி அலைகிறார்கள்.

பிறந்து வாழ்ந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில், ஆண், பெண், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர்கள் அந்நிய நாடுகளில் அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுடைய கோரிக்கை வழமையாக ஏற்க்கப்படுவதில்லை. இதன் காரணமாக அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

திருட்டுத் தனமாக வேலைக்குப் போகிறார்கள. அங்கு அவர்களுக்குச் சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. உழைப்புக்குரிய ஊதியத்திற்காகப் போரிடும் உரிமை அவர்களுக்கு இல்லை. நாடற்றவர்கள் என்ற காரணத்தால் கொடுத்ததை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்களுக்கு சுகாதாரச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. குடியுரிமை இல்லாதபடியால் பிள்ளைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது.

புகலிடம் பெற்ற நாடுகளில் வேர் விட்டாலும் குடியுரிமை மறுக்கப்பட்டதால் பொலிஸ், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றின் கெடுபிடிகளுக்கு உட்படுகிறார்கள். அவர்கள் வாழும் நாடு கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், அடையள அட்டை போன்றவற்றை வழங்க மறுக்கிறது. வாக்குரிமை இல்லாதபடியால் அரசியல்வாதிகள் நாடற்றவர் பிரச்சனையைத் தீண்டுவதில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சட்டங்களில் நாடற்றோர் பற்றிய சரத்துக்கள் காணப்படுவதில்லை. அவர்கள் எந்தவொரு உலக நாட்டிற்கும் சொந்தமானவர்கள் அல்ல. ஒரு நீதித்துறை சஞ்சிகை “They are Citizens of Nowhere” என்று குறிப்பிடுகிறது. இப்படியானவர்கள் நாடுகடத்தப்படும் போது எதிர்கொள்ளும் துன்பம் மிகப் பெரியது.

அவர்களைக் காணாமற் போகச் செய்யலாம், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலாம், காலவரையின்றி அடைத்து வைக்கலாம், எதுவும் செய்யலாம் ஒருவரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் சட்டத்தின் பார்வையில் அப்படி ஒருவரும் இல்லை. அவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவர்கள் “They are Invisible"

நாடற்ற தனி மனிதர்கள் நாடுகளிடம் உரிமை கோருகிறார்கள். நாடுகள் சர்வதேச சட்டத்தின் மீதும் குடிமக்களைத் தெரிவு செய்யும் தமது உரிமை மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றன. அதன் காரணமாக நாடற்றோரை உதாசீனம் செய்ய உலக நாடுகளால் முடிகிறது. ஜநா போன்ற சர்வதேச அமைப்புக்கள் நாடற்றோர் பிரச்சனைக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

குடியுரிமையைப் பொறுத்தளவில் உலகின் மிக மோசமான அரசியல் சாசனத்தைக் கொண்டிருக்கும் நாடாக லைபீரியா (Liberia) இடம்பெறுகிறது. அது நீக்ரோ (Negro) வம்சாவழியினருக்கு மாத்திரம் குடியுரிமை வழங்குகிறது. அடுத்த இடத்தில் பர்மாவி;ன் அரசியல் சாசனம் இருக்கிறது.

வழமையாக அரசியல் சாசனங்கள் யாருக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றன. ஆனால் பர்மா அரசியல் சாசனம் யாருக்குக் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்று வழமைக்கு மாறாகக் கூறுகிறது. தெற்கு ஆசிய நாடுகளில் மதச் சார்பு அரசியல் சாசனத்தைக் கொண்டிருக்கும் நாடு இலங்கையாகும். அது புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது.

கடந்த முப்பது வருட காலத்தில் இஸ்லாம் மதத்தினரான றோகின்கியா (Rohingya) சிறுபான்மையின மக்கள் பர்மாவில் இருந்து தொடர்ச்சியாக விரட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான வாழ்விடத்தை பர்மிய அரசு இராணுவ நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறித் தெற்கு வங்கதேசத்தில் (South Bangladesh) குடியேறியுள்ளனர்.

இஸ்லாம் மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசம் றோகின்யா மக்களை மிகக் கொடூரமாக நடத்துகிறது. 250,000 றோகின்கியா மக்கள் 1978ம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பியோடி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். வங்கதேசம் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக வங்கதேசத்தோடு செய்த ஒப்பந்தத்தின் மூலம் றோகின்கியா மக்களை ஏற்க பர்மா ஒத்துக் கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்மாறாக பர்மிய இராணுவ அரசு 1982ம் ஆண்டு உருவாக்கிய அரசியல் சாசனத்தில் இந்த மக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆட்சி முறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாசனத்திலும் றோகின்யா மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் மீது மிகவும் கொடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யும் உரிமையை அரசு தன்னிடம் வைத்திருக்கிறது. இதன் காரணமாக 300,000 வரையானோர் மீண்டும் வங்கதேசத்திற்குத் தப்பி ஓடிவிட்டனர்.

வங்கதேச அரசும் றோகின்யா மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதோடு அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் பறிமுதல் செய்துள்ளது. மிக அண்மையில் தனது படைப்பலப் பிரயோகத்தின் மூலம் வங்கதேசம் அவர்களை வலுக்கட்டாயமாக பர்மாவுக்கு நாடுகடத்தத் தொடங்கியுள்ளது.

றோகின்கியா மக்களின் பிரச்சனை ஈழத் தமிழர்கள் போன்ற நாடற்றறோரின் அடிப்படை உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் உரிமை பற்றிய கேள்வி இதில் முதன்மையானது. உயிராபத்தை எதிர்கொள்ளும் நாடற்றோரை வெளியேற்றும் உரிமையை நிலைநாட்ட அரசுகளால் முடியுமா என்று கேட்கப்படுகிறது.

ஜக்கிய இராச்சியம் இலங்கைக்கு நாடு கடத்திய ஈழத் தமிழர்களை இலங்கைப் படையினர் கைது செய்து மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். நாடற்றோர் பிரச்சனை பற்றிய கரிசனை வலுப்பெறும் போது இதைப் போன்ற அத்துமீறல்களுக்கு முடிவு காணப்படலாம்.

/www.sankathi24.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.