Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி நண்பர்

Featured Replies

இப்ப அர்ஜுன் அண்ணாவின் பிரச்சினைகள் உங்களுக்கு விளங்கியிருக்கும்தானே??!! :icon_mrgreen:

எனக்கு ஏற்கனவே தெரியும். காட்டிக்கொள்ளுறேல்லை. :icon_mrgreen: இப்பிடி சொன்னனான் என்று அர்ஜுன் அண்ணாக்கு சொல்லிப்போடாதையுங்கோ. :lol: :lol: :icon_idea:

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களில் ஒவ்வொரு வருடமும் சிறந்த பத்து பேரை தேர்ந்தெடுத்து கூகிள்ஐரோப்பா ஸ்கொல்ர்ஷிப் வழங்கி வருகிறது உலக புகழ் கூகிள் நிறுவனம் . இந்த போட்டியில் பங்கேற்று பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார்

தற்போது இத்தாலி ரோம் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள செல்வகுமார் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளதன் மூலம் புலமைபரிசிலையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய 5லட்சம் ரூபாய் ஊக்கதொகையையும் கூகிள் நிறுவனத்திலேயே வேலை பார்க்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தெற்காசியாவிலேயே இந்த போட்டிக்கு தெரிவான முதல் மாற்று திறனாளி மாணவர் இவர் மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு

இந்த போட்டியில் கலந்து கொள்ள இவர் அனுப்பிய மென்பொருள் திட்டத்திற்கான வரைபு ஒன்று இவருக்கு இந்த கௌரவத்தை பெற்று தந்திருக்கிறது.

அது பற்றி செல்வகுமாரே பேசுகிறார்

கிலேக்ட் என்ற கையசைவுகளின் வழியாக கணனியில் விளையாட்டுகளை விளையாடும் ஒரு ஹார்ட்வேர் பற்றிய வரைவுதிட்டத்தை இதன் மூலம் சமர்ப்பித்தேன் மாற்று திறனாளிகள் வெறும் கையசைவுகளை வைத்து கூகிள் வரைபடங்களில் எளிமையாக தேடலாம் அத்துடன் விர்ச்சுவல் சுற்றுலா பற்றியும் கொடுத்து இருந்தேன்

என்னுடைய திட்டமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் அவர்களை கவர்ந்ததால் போட்டி குழுவினர் என்னை தேர்ந்தெடுத்தனர். நான் ஸ்வீடனில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது ஏற்கெனவே ஒருமுறை இப்போட்டிக்கு விண்ணப்பித்திருந்தேன் அப்போது என்னைவிட தகுதியானவர்கள் நிறைய பேர் இருந்ததால் அப்போது என்னுடைய விண்ணப்பம் தேர்வுசெய்யபடவில்லை.ஆனாலும் மனம்தளராமல் நம்பிக்கையோடு முயற்சித்தேன் வென்றேன் என்கிறார் செல்வகுமார் .மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று 7 வருடங்கள் லேசர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பொறியியலாளராக வேலை பார்த்து கொண்டிருந்த இவரிற்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் வேலையை உதறிவிட்டு மேற்படிப்பு படிக்க ஸ்வீடனுக்கு போய் இருக்கார். அங்கே முதுகலை படிப்பில் சிறந்த மாணவராய் தேர்வு பெற்றதனால் தற்போது இத்தாலி ரோம் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

ஒருவயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பால் என்னுடைய இரு கால்களும் பாதிக்கபட்டன . அதனால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அல்லது தவழ்ந்து தான் எங்குமே செல்ல வேண்டும். இருந்தாலும் என் அப்பா ராமசந்திரனும் அம்மா ஜோதியும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் என்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர் . அவர்களின் ஊக்கத்தால் தான் என்னால் இன்றுவரை தொடர்ந்து படிக்க முடிகின்றது . என் வெற்றிகளிற்கான ஒவ்வொரு விதைகளும் பெற்றோர் இட்டது தான் . பள்ளிநாள்களில் வெளிநாட்டில் குறிப்பாக ஐரோப்பாவில் மேல்படிப்பு படிக்கணும்னு ஆசை இருந்தது. அதன் முதல் படியாக ஸ்வீடனில் மாஸ்டர் முடித்தேன் இத்தாலியில் தற்போது ஆராய்ச்சி படிப்பு படிக்கிறேன் என்கிறார் செல்வகுமார்

இத்தனைக்கும் இவர் குடும்ப சூழல் வசதியானது கிடையாது.நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் வங்கியில் லோன் வாங்கித்தான் இளங்கலை இஞ்சினியரிங் படிப்பை முடித்திருக்கிறார்.அந்த கடனை ஏழு வருடங்கள் வேலை பார்த்து அடைத்திருக்கிறார்.முதுகலை சுவீடன் படிப்பும் வங்கி கடன் வாங்கித்தான் படித்திருக்கிறார.இவரது ஆராய்ச்சி படிப்பை படித்துகொண்டேதான் ஓர் இத்தாலிய நிறுவனத்தில் தற்போது பகுதி நேர வேலை பார்ப்பதால் தவறாது வெளிநாட்டு வங்கி கடனை அடைக்க முடிந்திருக்கிறது.”முனைவர்” பட்டம் பெற்றபின் இவர் கூகிள் நிறுவனத்தில் நிரந்தர வேலையில் சேர்ந்து தமிழ் அடையாளத்துடன் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதை அறிவு சார்ந்த தமிழ் சமுதயத்திட்கு விட்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.நெம்புகோல் சேவை மட்டும் தீர்வு என்ற பெயரில் விரைவில் ஓர் அமைப்பை ஆரம்பிக்க இருக்கிறேன் என்று சொல்லும் செல்வகுமார் “வினையூக்கி” என்ற பெயரில் எழுதி வரும் கட்டுரைகள் ,சிறுகதைகள் ,இணையத்தள வாசகர் மத்தியில் மிகவும் பிரபல்யம் .இவர் எழுதிய சிறுகதைகள் சுவிடிஸ் மொழியில் மொழி பெயர்க்கபட்டு சுவிடன் நாட்டு பத்திரிகைகளிலும் வெளியாகி பின்னர் ஒரு தொகுப்பாகவும்

வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .”என் சோதனைகளை எல்லாம் சாதனையாகக வேண்டும் என்ற விருப்பத்தில் என் சகோதரர்கள் தியாகராசன் மற்றும் மதனகோபால் இருவருக்கும் மிக பெரிய பங்குண்டு .இதுவரை என்னால் மற்றவர்களைபோல் நடக்க முடியவில்லையே என்று துளியளவும் கவலைபட்டதில்லை.என்னைப்போல உயர வேண்டும் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு உழைத்தேன் “என்கிற செல்வகுமாரின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது அவரது கடுமையான உழைப்பும் கனவும்

நன்றி புதிய தலைமுறை

முகநூலில் பகிர்ந்து இருந்தவர் VINI SHARPANA (செய்தியாளர் புதியதலைமுறை )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.