Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதங்களை மெளனிக்கச் சொன்னவர்களிடம் தமிழர்களுக்கான நீதியைக் கேளுங்கள் - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

தமிழர்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென்று யாரும்கேட்டால் ஒரே சொல்லில் பதில் தர முடியும் ‘மறதி’ என்று. உங்களில் யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பறவாயில்லை. அதுதான் மாற்றப்பட முடியாத உண்மை. எங்களை யார் ஏறிமித்தார்களோ!, எங்களை யார் இரத்த சகதியாக மாற்றினார்களோ!, எங்கள் பிள்ளைகளை யார் உயிர்பிடுங்கி வீசினார்களோ! அவர்களையும், அந்தச் சம்பவங்களையும் கூட நாம் மறந்துபோயிருக்கின்றோம்.

இந்த நிலை நீடித்தால் நிச்சயமாக 60 வருடமல்ல 6 ஆயிரம் வருடங்கள் சென்றாலும் தமிழன் அடக்கப்பட்ட இனமாகவே இருப்பான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களிடம் இந்த மறதியிருப்பதால் தான் என்னுடைய சுயம்பற்றி சிந்திக்க முடியவில்லை, எங்களைக் கொன்று புதைத்தவனை பழிவாங்கும் எண்ணம் எமக்கு இன்னும் வரவில்லை.

நிச்சயமாக நாங்கள் தோற்றுப்போவோம். அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் வைத்து நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவத்தை புலத்திலும், அகத்திலுமுள்ள பலர் மறந்துவிட்டோம். நிமலரூபனை யாரும் அரசியல் கைதியாக பார்க்கவேண்டாம். நிமலரூபனை யாரும் போராளியாகப் பார்க்கவேண்டாம். ஒடுக்கப்பட்ட என்னுடைய இனத்திலேதான் அவனும் பிறந்தான் என்று பாருங்கள். செருக்கேறிப்போன திராவிடத்தின் இரத்தத்தை நிமலரூபனின் உடல் கிழித்து சிங்களவன் சிந்தினான் என்று சிந்தியுங்கள்.

நிமலரூபனை நாம் சாதாரணமாகப் பார்க்கவில்லை, பார்க்கவும் முடியாது. அவன் ஒடுக்கப்பட்டு, அடிமைச்சாயம் பூசப்பட்டுக்கிடக்கும் எம் இனத்தின் அடையாளம். சிங்களத்தின் வெற்றிமமதையும், தலைக்கனமும் தமிழினத்தை சிதைத்து வீசப்போகும் ஒரு சகாப்தத்தின் தொடக்கப்புள்ளி. மறதியால் மாண்டோம் என்ற வரலாறு தமிழனுக்கு வேண்டாம். நாங்கள் துப்பாக்கிகளை சுமந்திருந்தபோது மனிதாபிமானம் பேசிய நாடுகள் எங்கே? எங்கள் துப்பாக்கிகள் சன்னங்களை உமிழ்ந்து கொண்டிருந்தபோது ஜனநாயகம் பேசிய நாடுகள் எங்கே? வன்முறை வழியில் தமிழருக்குத் தீர்வில்லை என்று சொன்ன அதிமேதாவிகளை அழையுங்கள், அவர்களின் மனசாட்சிகளே அவர்களை கொல்லும்படி கேள்வியெழுப்புங்கள்.

அப்போதுதான் நிமலரூபனதும் அவனைப்போன்று அடித்தும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவி இளைஞர், யுவதிகளின் ஆத்மாக்கள் சாந்திபெறும். நாங்கள் துப்பாக்கிகளை விரும்பிச் சுமக்கவில்லை, நாங்கள் துப்பாக்கிகள் மீது மோகம் கொண்டவர்களும் கிடையாது. எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டபோது, எங்கள் சுயம் சிதைக்கப்பட்டபோது, எங்கள் உறவுகள் உடல் கிழித்து வீசப்பட்டபோது, வரலாறு எங்கள் கைகளில் ஆயுதங்களைச் சுமத்தியது.

நாங்கள் அல்லல்பட்டபோது, அழுதுபுலம்பியபோது எங்களுக்காக யாரும் பேசவில்லையே?

எங்கள் துப்பாக்கிகள் பேசத்தொடங்கிய பின்னர்தானே எங்களுக்காக உலகமே பேச முனைந்தது. எங்களை யாரென்று அடையாளம் கண்டுகொண்டது. அந்த உலகம் கூறியதற்காகத்தனே நாங்கள் ஆயுதங்களை மௌனித்தோம். அந்த உலகம்தானே எங்கள் ஆயுதங்களுக்குப் பேச்சுத்தடை போட்டது. எனவே எங்களுக்காக பேசுவதற்கு அழையுங்கள். எங்கள் உரிமைகளை, உணர்வுகளை மதியுங்கள் என்று கேளுங்கள். அதை மதிக்காத தால்தான் எங்களை மிதித்ததால்தான் சிங்களவனுக்கு மரணம் கொடுத்தோம் என்று சொல்லுங்கள். ஆனால் இன்று உலகம் சொன்ன சொல்லுக்காக ஆயுதங்களை தூக்கி வீசிவிட்டு நிராயுதபாணிகளாக, நிர்வாணிகளாக நிற்கின்றோம்.

அன்று வாய் கிழியப்பேசியவர்கள் இன்றும் பேசவேண்டும் என்று சொல்லுங்கள். தமிழனின் கையில் ஆயுதம் இல்லை. தமிழனுக்கு இருக்க இடமில்லை, வாழ வீடில்லை, சொந்தங்கொண்டாட உறவுகளில்லை, பெற்ற பிள்ளையின் கல்லறைக்குச் செல்ல வழியில்லை, கோயிலுக்குச் சென்று கும்பிட முடியவில்லை, நினைத்த பாட்டுக்கு அடித்துக் கொல்கிறார்கள், நாய்களைப் பாதுகாப்பதற்கும் கூட மகிந்த சிந்தனையில் இடமிருக்கின்றது. தமிழனை பாதுகாப்பதற்கில்லை. கைப்பற்றப்பட்ட நாட்டுமக்களைப் போல நடத்தப்படுகின்றோம். இறந்து போனவனின் உடலை பெற்ற தாய், தந்தை பார்க்க முடியவில்லை. 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன பிள்ளையை அடித்து நொருக்கி வைத்தியசாலையில் போட்டிருக்கிறார்கள்.

தேடி அலைந்து ஓய்ந்த பெற்றோர் யாரோ சொல்லக்கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற போதுதான் தெரியும் தங்கள் பிள்ளைதான் என்று. என்னே கொடுமை. மனிதாபிமானம் பேசும் மனிதர்கள் ஏன் மௌனியாகிப்போனார்கள்? முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்டபோது மௌனம் காத்தது போதும். இனியாவது! இப்போதாவது! வாய்திறக்கச்சொல்லுங்கள். எங்கள் அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய புலம்பெயர் தமிழர்களே. திறந்தவெளிச் சிறையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக சர்வதேசம் குரல் எழுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். தமிழன் சுதந்திரம் கேட்ட 60 வருடங்களின் முன்னர் என்ன? எப்படி? ஏங்கே? நடந்ததோ அப்படி, அங்கே. அது நடந்து கொண்டிருக்கின்றது. பின்னர் எப்படி நாங்கள் சிங்களவனோடு வாழமுடியும்.

தென்னிலங்கையில் ஏன் முள்ளிவாய்க்கால் இடம்பெறவில்லை, தென்னிலங்கைச் சிறையில் ஏன் ஒரு சிங்கள அரசியல் கைதி அடித்துக் கொல்லப்படவில்லை, ஏன் ஒரு சிங்கள அரசியல் கைதி சிறை அதிகாரியின் சப்பாத்தை நக்கவில்லை. நாங்கள் தனித்துவமானவர்கள், இது சிங்களவனுக்கும் தெரியும். வடகிழக்கு எங்கள் தாயகம், அதன் பெயர் தமிழீழம் என்பதுவும் சிங்களவனுக்குத் தெரியும்.

நிமலரூபன் என்ற பெயரே சிங்களவன் ஆக்கிரமித்து தமிழினத்தை கொன்று குவித்துக் கொண்டிருக்கும், அடக்கியாண்டு கொண்டிருக்கும் தன்மையினை வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு சிங்களவனோடு தமிழன் இணைந்து எக்காலத்திலும் வாழ முடியாது என்ற உண்மையினை உலகத்தின் மனசாட்சிக்குச் சொல்லுவதாகவும் இருக்கவேண்டும். சிங்களக் காடையர்களால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிமலரூபனுக்காகவும், அவனது உயிரற்ற உடலுக்காக கூட ஏங்கிக் கொண்டிருக்கும் குடும்பத்திற்காகவும், எங்கிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து உலகம் எம்மை திரும்பி பார்க்கும் வகையில் போராட்டங்கள் வெடிக்கவேண்டும்.

அகத்திலிருந்து அதற்கான முழுமையான ஒத்துழைப்புக்கள் கிடைக்கவேண்டும். இந்தப் போராட்டத்தின் மூலம் சிங்களவனோடு தமிழர்கள் எக்காலத்திலும் இணைந்து வாழ முடியாது என்ற யதார்த்தம் சொல்லப்படவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் இறுதியானதும், அறுதியானதுமான தீர்வு தமிழர்கள் பிரிந்து தனியாகவும், தனித்துவமாகவும் வாழ்வது ஒன்றே என்பதை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்.

நாங்கள் எல்லாவற்றையும், மறந்துபோனால் தமிழினத்திலிருந்து திரிந்துபோன இனமாக மாற்றப்படுவோம் என்பதில் நாம் மாற்றுக்கருத்தினை கொண்டிருக்கத் தேவையில்லை என்பது எமது நிலைப்பாடு. அதுவே எல்லோருடையதுமான நிலைப்பாடாகவும் இருக்கும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.