Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர்களின் – ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

Featured Replies

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

kalaignar-3-hours-unnaviratham.jpg?w=640

இந்த இடுகையில் தலைப்பைத் தவிர வேறு எதையுமே

நான் எழுதவில்லை ….

இது சில செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)-

——————————–

15 நாட்கள் முன்பு கலைஞர் கேள்வி-பதில்.

டெசோ மாநாடு ஏன் ?

“என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன்.

தமிழ் ஈழத்தைக் காணாமல் என் வாழ்வு முடியாது.”

——————————–

”தினமணி செய்திகள்” -இன்று காலைப் பதிப்பு -

கருணாநிதி – ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு

First Published : 16 Jul 2012

01:08:00 AM IST

சென்னை, ஜூலை 15:

திமுக தலைவர்

கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர்

ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை

சந்தித்துப் பேசினார்.

————————————

நேற்று மாலை ஞானதேசிகன் பேட்டி -

சென்னை, ஜூலை 15: திமுக நடத்தும் டெசோ

மாநாட்டுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லை என்று

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

டெசோ மாநாடு: டெசோ மாநாடு தமிழீழ ஆதரவு

மாநாடு. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைவது நிரந்தரத்

தீர்வாக அமையாது.

————————————

நக்கீரன் செய்திகள் – 16/07/2012

தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று (16/07/2012)

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு

பேட்டி அளித்தார்.

“இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதை வலியுறுத்தி

டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இப்போது அதுபற்றி எந்த முடிவும் எடுப்பதாக

உத்தேசம் இல்லை.”

————

“என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று

கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி

தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?

அதை எப்போதும் சொல்வேன்”.

——————–

“தனி ஈழ ஆதரவு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது

என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததா?

எந்த நெருக்கடியும் இல்லை.

கே.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனி ஈழம்

பற்றி பேசினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில்

அதுபற்றி பேசமாட்டோம் என்கிறீர்களே?

டெசோ மாநாட்டுக்கு பல தரப்பினரும் வருகிறார்கள்.

அவர்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதுதான்

சரியான ஜனநாயக அணுகுமுறை”.

————-

“தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்தை மீண்டும்

வலியுறுத்துவீர்களா?

தனி ஈழம் வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால்

எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.

மாநாட்டில் ஐ.நா. சபை நடவடிக்கை குறித்து

தீர்மானம் வருமா?

அதுபற்றி எல்லாம் மாநாட்டுக்கு வருபவர்களை

கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம்”.

————–

“காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனி ஈழத்தில்

உடன்பாடு இல்லை. ஒருங்கிணைந்த இலங்கையில்

தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று

கூறியிருக்கிறாரே?

மாநாட்டின் நோக்கம் பற்றி என்னிடம் கலந்து பேசி விட்டு

கருத்து தெரிவித்து இருக்கலாம். அவசரப்பட்டு அறிக்கை

வெளியிட்டு உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.”

http://vimarisanam.wordpress.com

பல மாதங்களுக்கு முன் நான் கருணாவை பற்றிய என் கருத்தை உண்மைத்தமிழன் வலைதளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன்.அதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்,,..

=======================================================================

கருணாநிதி…

ஒரு ஆத்திகவாதியும் இல்லை

நாத்திகவாதியும் இல்லை

சனாதனவாதியும் இல்லை

பகுத்தறிவு வாதியும் இல்லை

பிராமண விரும்பியும் இல்லை

பார்பன துவேஷியும் இல்லை

ராஜாஜியும் இல்லை

காமராஜரும் இல்லை

பெரியாரும் இல்லை

ஜனநாயகவாதியும் இல்லை

சர்வாதிகாரியும் இல்லை

பின் யார்தான் அவர்?

அரசியலை வியாபாரமாக்கி

தந்திரமாக மக்களை ஏமாற்றி

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

அவர்களிடமே மூலதனம் பெற்று

வியாபாரம் செய்து

பணம் சேர்க்கும்

ஒரு கைதேர்ந்த வியாபாரி.

இருக்கும்பொழுது வாழ நினைப்பவர்!

இறந்தபின் வாழ அவருக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை!!.

90வயதில் அவர் நிகழ்த்தும் சாகசங்களை முறியடிக்க,

நம்மிடம் 45 வயதில் கூட போட்டியாளர் இல்லை என்பதுதான் நிதர்சனம்

ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடியலாம்;ஆனால் அவனால்

எல்லோரையும்,எப்பொழுதும்,ஏமாற்ற

இயலாது!!… என்றார் ஆப்ரஹாம் லிங்கன்

ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடிந்தால் அதுவே போதுமானது !!… என்கிறார் நம் மு.க.

நாம் விரும்பியது நிகழும் போது நாம் மகிழலாம்

ஆனால்

நாம் விரும்பாதது நிகழும் போது நாம் சிந்திக்க வேண்டும்

வருத்தப்படுவதிலோ,

கோபப்படுவதிலோ

பயனில்லை

=============================

2016 தேர்தலில் ஜெயா ஆட்சி பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு ஒட்டு போடக்கூடாது..”அதே சமயம் கருணாவிற்கும் ஓட்டளிக்க கூடாது” இதை நாம் கடைபிடித்தால் தமிழகம் பிழைக்கும்.

  • தொடங்கியவர்

548163_263831227052108_1284224657_n.jpg

இப்படி பிழைப்பதை விட செத்தே போகலாம்.........

தவறான தலைப்பை இட்டு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்து விட்டீர்கள் :( :( :( மு.க குடும்பத்துக்கு ஒப்பற்ற தலைவன் என்று தலைப்பை இடுவது தான் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.