Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கந்துவட்டி ௭ன்ற பெயரில் பணமும், காணியும் அபகரிப்பு! தமிழக பொலிஸாரால் இலங்கையர் கைது.

Featured Replies

prison3-150x150.jpgதிருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள சுந்தர் நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி ௭ன்கிற மனோராணி. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்து சுந்தர் நகரில் வசிக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மனோராணியின் தம்பி லண்டன் செல்ல பணம் தேவைப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், அதே பகுதியில் வசித்த இலங்கையரும், நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான சாந்தகுமார் ௭ன்பரை அணுகி பணம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சாந்தகுமாரும், உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு மனோராணிக்கு 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் பெற்றுக் கொண்ட கடன் தொகைக்காக சில மாதங்கள் முன் வரை, 59 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மனோராணி, சாந்தகுமாருக்கு கொடுத்துள்ளார். வெறும், 16.5 இலட்சம் கொடுத்து, கந்துவட்டி ௭ன்ற முறையில் 59.4 இலட்சம் ரூபாவை வசூலித்த பின்னரும் அசல் தொகையை கொடுக்க வேண்டும் ௭ன சாந்தகுமார் மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்த மனோராணி, தன் பெயரில் இலங்கையிலிருந்த காணியையும் சாந்தகுமாரின் பெயருக்கு ௭ழுதிக்கொடுத்தார். பின்னர் அவர், இது தொடர்பாக திருச்சி மாநகர பொலிஸ் ஆணையாளர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பொலிஸார், விசாரணையின் போது மனோராணி வாங்கிய 16.5 இலட்சம் ரூபா கடனுக்காக, சாந்தகுமார் அவரை மிரட்டியே, 59.4 இலட்சம் ரூபாவை வசூலித்ததையும், இலங்கையில் உள்ள காணியை ௭ழுதி வாங்கியதையும் தெரிந்து கொண்டனர்.

இதனையடுத்து சாந்தகுமாரை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

www.irruppu.com

... இந்த நோய் எம்மவர்களை இங்கு புலத்திலும் வேகமாக தொற்றுகிறதாம்! ... நாய்களுக்கு நடுக்கடலிலும் ... என்பதா? .... இல்லை ... கெட்ட குடி ... என்பதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.