Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளக்குடியமர்த்துமாறு நீதிமன்றத்தில் வழக்குதயாராகுகின்றனர் மயிலிட்டி மக்கள்

Featured Replies

[size=4]எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size]

[size=2][size=4]பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.[/size][/size]

[size=2][size=4]இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது, வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள "அக்கரை' என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. [/size][/size]

[size=2][size=4]எனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.[/size][/size]

[size=2][size=4]இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் மயிலிட்டி பிரதேசமானது மண்வளமும், கடல்வளமும், கைத்தொழில் வளமும் கொண்ட பிரதேசமாக இருந்தது. சொந்தத் தொழில் செய்தே நாங்கள் வருமானம் ஈட்டினோம். நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை.[/size][/size]

[size=2][size=4]ஆனால் தற்போது நாங்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற நாங்கள் வீடுகள் மாறிமாறி தொடர்ந்தும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் நாம் நிர்கதியான நிலையில் உள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]கடற்றொழில் தவிர மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் வேறு எவ்விடத்திலும் தொழில் செய்ய முடியாத நெருக்கடிக்குள் நாம் வசித்து வருகின்றோம். இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் இருந்தது. [/size][/size]

[size=2][size=4]மயிலிட்டித் துறையில் கடற்றொழில் செய்பவர்களைத் தவிர அந்தத் தொழிலை அண் டித் தொழில் செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுடை நலன்புரி முகாமில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாம் இங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.[/size][/size]

[size=2][size=4]வளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது. இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார். இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது. [/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]இவ்வாறான விடயங்களை கூட்டமைப்பு ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புக்கள் முன்னிலையில் கொண்டுவர முடியுமா?[/size][/size]

[size=1]

[size=4]இவ்வாறான சட்ட முயற்சிகளுக்கு எமது மக்களுக்கு நாம் உதவ முடியுமா? எவ்வாறு உதவலாம்? [/size][/size]

[size=1]

[size=4]ஓரிடத்தில் வெற்றிபெற்றால் மற்றைய இடங்களிலும் மக்கள் தமது இடங்களுக்கு செல்ல வழி சமைக்கும். [/size][/size]

வழக்குப் போடுவது எதோ ஒரு நன்மையை நிச்சயம் தரும்! ஆனால் முடிவுவரை வழக்கை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்!

சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் நன்மை!

சார்பாக இல்லை என்றால் சிங்கள நீதித்துறையின் இனப் பாகுபாட்டை உலகறியச் செய்யலாம்!

ஆனால் வழக்கு போட்டபின் இடையில் கைவிடவே கூடாது! சமரசம் என்றாலும் நீதிமன்றில் வைத்தே எழுத்து மூலம், நீதிபதிகளின் கையொப்பங்களுடன் சமரசம் செய்யவேண்டும்!

அதைவிட்டு விட்டு அரவேக்காடு சுமந்திரன் சில வழக்குகளைப் போட்டுவிட்டு பின்னர் சிங்கள அரச பயங்கரவாதிகளின் மேல் உள்ள விசுவாசத்தால் அவற்றை பின்னர் வாபஸ் பெறுவது தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்! அண்மையிலும் காணிப் பதிவு தொடர்பாக கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை, சிங்கள அரச பயங்கரவாதிகள் மீதுள்ள விசுவாசம் காரணமாக, சுமந்திரன் தான் தோன்றித்தனமாக நீதிமன்ற உத்தரவாதம் பெறாமல் எதையும் பெறாமல் வாபஸ் பெற்று இருந்தான்!

முன்னர் மாவை ஒரு வழக்கு போடு, சிங்கள பயங்கரவாத நீதிபதிகளால் அது நீண்டகாலம் இழுத்தடிக்கப்படது! பின்னர் இந்த இழுத்தடிப்பு சர்வதேசத்தாலும் கேள்விக்குட்படுத்தப் பட்டிருந்தது! அது சிங்கள நீதித்துறையின் பக்கச்சார்பை வெளிக்கொண்டுவர உதவியது!

  • தொடங்கியவர்

[size=4][size=5]பொதுச் சட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்[/size]

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-28 10:33:46| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]ஐயா! எனக்கு இந்தச் சட்டம் தெரியாது. இப்படி நீதிமன்றில் கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பது பொது நியதி. சட்டத்தை சகலரும் அறிந்திருக்க வேண் டும் என்பதே இதன் உள்ளார்ந்தம். எனினும் எங்கள் நாட்டில் பலருக்கு சட்டம் தெரிவதில்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ள முற்படுவதும் இல்லை. மாறாக பொதுச் சட்டங்கள் பற்றி பொது மக் களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொது அமைப் புகளும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பொதுச்சட்ட விதிமுறைகள் சகலருக்கும் தெரி விக்கப்படும். சட்டங்கள் மட்டுமல்ல குழந்தை யைப் பெற்றெடுப்பதற்கு முன்னதாக குழந்தை வளர்ப்புப் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். திருமணம் செய்தவுடன் திருமண பந்தம் - கர்ப்ப காலப் பராமரிப்பு இவை எல்லாம் எடுத்தி யம்பப்படும். இப்படியே வாழ்க்கைக்குத் தேவையான கல்வி அங்கு உடனுக்குடன் வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் வாழ்க்கைக்காகக் கற்கிறார்கள். அதனால் அவர்களால் எந்தச் சவால்களையும் எதிர் கொள்ள முடிகின்றது. ஆனால் எங்கள் நாட் டில் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் கிடை யாது. இப்போதெல்லாம் பட்டதாரிகளுக்கு நிய மனம் வழங்கி அவர்களை பிரதேச செயலகங் களில் குவித்து வைத்திருக்கிறார்கள். இதனால் மனித மூலதனம் பயன்பாடு இன்றி அல்லது உச்சப் பயன்பாடு இன்றி வீணடிக்கப்படுகின்றது. பொதுச் சட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய அரச அமைப்புகளை உருவாக்கி, அதற்குரிய பயிற்சிகளை பட்ட தாரிகளுக்கு வழங்கி அவர்களை பொது மக்களிடம் அனுப்பும் போது, பொதுச்சட்டங்களை மக்கள் அறிவதற் கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதன் மூலம் அரச பொதுச் சொத்துக் களை பாதுகாக்கும் நடைமுறைகளும் பொதுச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் மனோநிலையும் உருவாகும்.

இல்லையேல் தனிமனிதர்களாக அல்லது குழுமங்களாக எதனையும் செய்யலாம் என்ற அறியாமை மேலாடும். இத்தகைய அறியாமைகள் இருக்கும் போது அத்தகைய மக்களை உயர்ந்த இடங் களில் இருக்கக் கூடியவர்கள் தங்கள் சுய நலனுக்காக பயன்படுத்திக் கொள்வர். இந்த மோசமான செயல்களால் அழிந்து போன அல்லது சட்டத்தின் பிடியில் அகப்பட்டுப் போய் தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர் கள் ஏராளம். எனவே எதுவும் செய்வோம் என்று நினைக் கின்ற அறியாமையை இல்லாமற் செய்வ தற்கு பொதுச் சட்டங்கள் பொது நியமங்கள், பொது நியதிகளை மக்கள் அறிந்து கொள் வதற்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும்.[/size]

[/size]

[size=1]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.