Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய கனவும் தமிழர் அரசியலும்

Featured Replies

[size=4]அவுஸ்திரேலிய கனவும் தமிழர் அரசியலும் - யதீந்திரா

சமீப நாட்களாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் பற்றிய செய்திகளே ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன. மிகவும் குறைந்த செலவில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முடியும் என்பது, தமிழ் சமூகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் கவர்ச்சியானதொரு விடயமாகவும் இருக்கிறது. இதுவரை பல லட்சம் கொடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவுஸ்ரேலியாவிற்கு கடல் வழியாக தமிழர்கள் அனுப்பிவைக்கப்படுவதற்கு பின்னால் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவும், இது தமிழர்களின் சனத்தொகையை குறைப்பதற்கு அரசு நுட்பமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்றும் அபிப்பிராயங்கள் உலவின. குறிப்பாக அரச மட்டங்களில் இருக்கும் ஒரு சிலரின் பெயர்களை குறிப்பிட்டும் சில இணையங்கள் செய்திகளையும் வெளியிட்டிருந்தன.

ஆனால் தற்போது அத்தகைய செய்திகள் அனைத்தையும் புறம்தள்ளும் வகையில் திருகோணமலையில் சில கைதுகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ஆட்கடத்தல்களுடன் (Human trafficking) தமிழர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளராவார் - இவர் ஆனந்தசங்கரியின் தலைமையில் இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவர் என்பது வேறு விடயம். பிறிதொருவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர். இவர் முன்னர் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, திருகோணமலை நகரசபையில் ஓர் உறுப்பினராகவும் இருந்தவர். எனவே இதுவரை அரச தரப்பின் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இப்போது வேறு பக்கம் திரும்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. மாகாணசபை தேர்தல் காலத்தில் இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பதானது, கூட்டமைப்பின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தலாம்.[/size]

[size=4]அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடல் வழியாக அனுப்பும் இவ்வகை நடவடிக்கைகள் பொதுவாக ஆட்கடத்தல் என்றே வகைப்படுத்தப்படுகிறது. உண்மையும் அதுதான். ஆனால் தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் இது ஆட்கடத்தல் அல்ல. மாறாக, இது விருப்பத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு சட்டவிரோத பயணம் ஆகும். எப்படியாவது ஐரோப்பா சென்றுவிட வேண்டும் என்று எண்ணுவோரின் ஆசையை சில வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே இதில் அடுத்தவரை குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் இவ்வாறு செல்லுவதற்கு பல இளைஞர் யுவதிகள் தமிழ்ச் சூழலில் தயாராக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அவர்கள் ஏன் தயாராக இருக்கின்றனர்?[/size]

[size=4]தமிழர் அரசியலானது - மிதவாத அரசியலில் இருந்து ஆயுதப் போராட்டமாக உருமாறிய பின்னர், பலருக்கும் அதுவரை கனவாக இருந்த ஒரு விடயம் மிகவும் இலகுவான விடயமாக மாறியது. அதுதான் ஐரோப்பிய வாழ்க்கை. யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்க தரப்பினரின் கனவை நிவர்த்தி செய்வதற்கான ஒரு அட்சயபாத்திரமாக ஆயுதப் போராட்டம் அவர்களுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் மத்தியதர வர்க்கத்தினரின் பங்களிப்பு ஆயுதப் போராட்டத்திற்கு இருந்த போதும், பிற்காலங்களில் வெறுமனே அது - இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகளின் இரத்தத்தால் பொலிவுபெற்ற போராட்டமாகவே மாறியது எனலாம்.

ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் அங்கத்தவர்கள் அதிலும் ஓரளவு குடும்பப் பின்னணியுள்ளவர்கள் ஒடித் தப்புவதற்கான ஓர் இடமாகவே ஐரோப்பிய நகர்வு அமைந்திருந்தது. ஆனால் காலப்போக்கில் வெளிநாடு செல்லுதல் என்பது, தமிழ் சமூகத்தின் ஓர் அந்தஸ்த்துமிக்க விடயமாக உருமாறியது. தமிழ் சமூகத்தில் 'வெளிநாடு' என்பது உச்சரிக்கும் போதே ஒரு கர்வத்தையும் பெருமிதத்தையும் கொடுக்கும் சொல்லாகவே பலராலும் உணரப்பட்டது. உணரப்படுகிறது. இறுதியில் 'வெளிநாடு' என்பது வசதியும், ஏற்கனவே சென்றவர்களின் தொடர்புமுள்ள ஒவ்வொரு தமிழனதும் எதிர்கால இலட்சியமாகவே மாறியது. தற்போது பெரும்பாலான தமிழர்களின் இலட்சியம் தமிழீழமோ அல்லது அதிகாரப் பகிர்வோ, சுயாட்சியோ அல்ல, மாறாக எவ்வாறு ஐரோப்பாவில் வாழ்ந்து சாகலாம் என்பதாகும். இத்தகைய எண்ணத்திற்கு பின்னாலுள்ள பொருளாதார நலன்களையும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

போர் - அது களத்தில் சீவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை பஞ்சப் பராரிகளாக்கிய அதேவேளை, புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் வாழ்வை செல்வச் செழிப்பாக தரமுயர்த்தியது. தமிழர்களிடமிருந்த இயல்பான சேமிப்புப் பழக்கம் ஒரு மத்தியதர வர்க்க ஐரோப்பியனைவிடவும் உயர்வான வாழ்க்கையை அனுபவிக்கக் கூடிய ஏதுநிலையைக் கொடுத்தது. ஆனால் களத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அல்லது போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், தாங்கள் எத்தகையதொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்னும் உண்மை, போருக்கு பின்னர்தான் அவர்களுக்கு விளங்கியது. ஒரு சாதரண குடிமகனின் புரிதலில் களம் என்பது, அழிவையும் அலைச்சலையும் தரும் பூமியாகவும், புலம் என்பது செல்வத்தையும், மகிழ்சியையும் தரும் இடமாகவும் தெரிகிறது. ஒரு சாதாரண தமிழ் குடிமகனின் புரிதலில் நின்று நோக்கினால் அப்படிச் சிந்திப்பது தவறுமல்ல என்றே இப்பத்தி புரிந்துகொள்ளும். ஏனெனில் மனிதர்கள் செல்வமும், மகிழ்சியும் உள்ள இடத்தை தேடிச் செல்வதையே விரும்புவர். அது மனித இயல்பும் கூட.

இத்தகையதொரு நிலையில்தான், சமீபநாட்களாக அவுஸ்திரேலியாவிற்கு செல்லுவோர் குறித்த கதைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவ்வாறானவர்கள் கடந்த ஆறு மாதத்திற்குள் 1300 வரை வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவ்வாறு செல்லுபவர்களில் அனேகர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இங்கு பிறிதொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தில், போராட்டத்தின் பேரால் பலருக்கும் ஐரோப்பிய வாழ்வு சாத்தியப்பட்டிருந்தாலும், அது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் வாய்த்திருந்தது. கிழக்கு மாகாணம் மற்றும் வன்னிப்பகுதி மக்களில் அனேகருக்கு (ஒப்பீட்டளவில்) வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால் போருக்கு பின்னரான வெளிச்சத்தில் தனது வாழ்வை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒருவருக்கு அவுஸ்திரேலியா சரியானதொரு தெரிவாகவே இருக்கும். இந்த பின்புலத்தில்தான் சமீபநாட்களாக இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை இப்பத்தி நோக்குகின்றது.

இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விடயம், போர் ஓய்வுக்கு பின்னரான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், அவர்களது எதிர்காலம் குறித்த கேள்வியே அவர்களை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது வாழ்நிலையை இரு பகுதியினரோடு ஒப்பிட்டு நோக்கும் நிலையில் இருக்கின்றனர். ஒன்று, தங்களுக்கு அருகாமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாதிக்கப்படாத மக்களின் வாழ்நிலைமையுடன் தங்களை அவர்கள் ஒப்பிட்டு நோக்குகின்றனர். அடுத்தது, ஐரோப்பிய வாழ்வில் சங்கமித்துவிட்டு போருக்கு பின்னர் உல்லாசப்பயணிகளாக வந்துபோகும் புலம்பெயர்ந்த முன்னைநாள் அயலவர்களுடன் தங்களை ஒப்பிட்டு நோக்குகின்றனர். இலங்கையே கெதியென்று வாழ்ந்து, இறுதியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு மேற்படி இரு பகுதியினரும் எட்ட முடியாத உயரத்திலேயே இருக்கின்றனர். அவர்களை தாங்களும் தொடுவதற்கு என்ன வழி?

இந்த விடயத்தை தமிழர் அரசியல் தலைமை சரியாக விளங்கிக் கொள்ளாத வரை, இது போன்ற விடயங்கள் தொடரவே செய்யும். பயணம் செய்வதற்கு ஆட்கள் தயாராக இருக்கும் போது, பணம் வசூலிப்போரும், படகோட்டிகளும் இருக்கவே செய்வர். அதில் சில சிங்கள படகோட்டிகளும் இருக்கலாம். [/size]

[size=4]http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=3c7be2f6-276c-4460-bc0f-cf2c9d08b092[/size]

  • தொடங்கியவர்

[size=4]எம்மை அறிந்தோ இல்லை அறியாமலேயே நாமும் எமது மக்கள் உயிரைப்பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க வழிசமைக்கின்றோம்.[/size]

அடுத்தது, ஐரோப்பிய வாழ்வில் சங்கமித்துவிட்டு போருக்கு பின்னர் உல்லாசப்பயணிகளாக வந்துபோகும் புலம்பெயர்ந்த முன்னைநாள் அயலவர்களுடன் தங்களை ஒப்பிட்டு நோக்குகின்றனர். இலங்கையே கெதியென்று வாழ்ந்து, இறுதியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு மேற்படி இரு பகுதியினரும் எட்ட முடியாத உயரத்திலேயே இருக்கின்றனர். அவர்களை தாங்களும் தொடுவதற்கு என்ன வழி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.