Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுகதையின் தொன்மம்

Featured Replies

  • தொடங்கியவர்

பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.

அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்

வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன? - தேங்காய்

கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌

சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்? - குரக்கன் ( சேவல் )

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்

அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்

கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்

கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்

அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்

அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்

-வாழை ( சதுரங்கம் )

அண்ணனின் தயவால்

[size=4]ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?[/size][size=4] - சந்திரன்[/size]

ரெம்ப நன்றீங்க மல்லையூரான் அண்ணன் :):).

.

  • தொடங்கியவர்

அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?

மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்

முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே

ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்.

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்

நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை

நீக்கினால் ‘பகை’யாகும் – நன்றே அந்த

மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்

முடியாமற் போகாது தேடிப் பார்தால்!

அது என்ன

ஆயிரம் தச்சர் கூடி

அழகான மண்டபம் கட்டி

ஒருவன் கண்பட்டு

உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

Edited by சொப்னா

  • 2 weeks later...

அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

காற்று, நீர்

யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

மீசை நீண்ட கரப்பொத்தான்.

கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?

சேட்டு.

மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்

முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே

ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்.

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்

நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை

நீக்கினால் ‘பகை’யாகும் – நன்றே அந்த

மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்

முடியாமற் போகாது தேடிப் பார்தால்!

அது என்ன

ஆயிரம் தச்சர் கூடி

அழகான மண்டபம் கட்டி

ஒருவன் கண்பட்டு

உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

குளவி கூடு

  • கருத்துக்கள உறவுகள்

அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

தண்ணீர்

யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?

மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்

முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே

ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்.

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்

நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை

நீக்கினால் ‘பகை’யாகும் – நன்றே அந்த

மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்

முடியாமற் போகாது தேடிப் பார்தால்!

அது என்ன

பலகை

ஆயிரம் தச்சர் கூடி

அழகான மண்டபம் கட்டி

ஒருவன் கண்பட்டு

உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

தேன்கூடு

  • தொடங்கியவர்

ஜாலியா ஆன்ஸசர் செஞ்ச மல்லையூரான் அண்ணன் புங்கையூரான் அண்ணன்களுக்கு தாங்ஸ்சுங்க :) :) .ஏனுங்க மத்வங்க வரவே மாட்டீங்களா சொப்னாவோட விடுகதை சாலன்ஞ்சுக்கு :lol: :lol: ??

Edited by சொப்னா

  • தொடங்கியவர்

இன்னிக்கு ஒரு கை பாக்கலாமா அண்ணனுங்க அக்காளுங்களா :lol: :lol: :D :D ??

கிளை உண்டு, மரம் இல்லை

ஆளைக் காட்டும், கண்ணாடி இல்லை

வழிகாட்டும், பாதையில்லை

அது என்ன?

தெரியலீங்க யாராச்சும் சொல்லுங்களேன் :( :(

அக்காள் வயிற்றில் தங்கை குதிக்கிறாள் –

அது என்ன?

தெரியலீங்க யாராச்சும் சொல்லுங்களேன் :(

பால் இல்லாமலே பருக்கிறது, நோய் இல்லாமல்

இளைக்கிறது, அது என்ன?

சந்திரன்

செவி இல்லாத செவிடன் செகம் பூராவும் திரிகிறான்.

கால் இல்லாத கபடன் காடும் மேடும் போகிறான் -

அவன் யார்?

பாம்பு

போவான் போய்க்கொண்டே இருப்பான். போகும்

இடங்கள் எல்லாம் கோடிட்டே போவான் – அவன் யார்?

நத்தை

பாளை போலப் பூ பூக்கும், பார்த்தவர்க்கு விருப்பூட்டும்,

தலையிலே சூடாதது, தரணிதனிலே என்ன பூ?

வாழைப்பூ

ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு

செல்லப்பிள்ளை – அது என்ன?

வெற்றிலை

Edited by சொப்னா

  • தொடங்கியவர்

இன்னிக்கு வெளையாடணும் ஓக்கேயா :lol: :lol: :D .

கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-

அது என்ன?

கடுகு மடிக்க இலை இல்லை, யானை

படுக்க இடமுண்டு- அது என்ன?

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன்,

பள்ள நீரைக் கண்டு பதைக்கிறான்- அது

என்ன?

கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்

போனால் முட்ட வருது- அது என்ன?

கந்தல் துணி கட்டியவன், முத்துப்

பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்-

அது என்ன?

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து,

தெருவிலே திரியும் பூ எது?

இதுக்கு ஒரு வழி சொல்லுங்க :lol::D:lol: .

ஒரு விவ​சாயி இருந்​தான்.​ அவன் ஒரு ஆட்டை​யும் புலியை​யும் வளர்த்து வந்​தான். இரண்டை​யும் தனித்தனியாகத்​தான் வைத்தி​ருந்​தான். ஏனெ​னில் புலி, ஆட்​டைத் தின்றுவி​டும் என்று அவ​னுக்கு நன்​றாகத் தெரி​யும். ஆட்​டிற்கு வைத்தி​ருந்த புல் தீர்ந்து​விட்டது. எனவே புல் கட்டு வாங்குவதற்​காக சந்​தைக்​குச் சென்​றான். புலியை​யும் ஆட்டை​யும் பாது​காப்​பாக தன்னுடன் அழைத்​துச் சென்​றான்.

புல்கட்டு வாங்கி வீடு திரும்​பும் போது மழை வருவது போலி​ருந்தது. எனவே குறுக்கு வழி​யில் சீக்கிரம் வீட்​டிற்​குச் சென்றுவிட​லாம் என்று நினைத்​தான் விவ​சாயி.​ குறுக்கு வழி​யில் செல்வ​தென்​றால் ஒரு ஆற்​றுப் பாலத்​தைக் கடந்து செல்ல வேண்​டும். மிகக் குறுக​லான பாலம் அது. ஒரு நேரத்​தில் ஒருவர்​தான் செல்ல முடி​யும். சுற்று வழி​யில் சென்​றால் மழையி​லும் காற்றி​லும் மாட்டி துன்பப்பட வேண்டியி​ருக்​கும். எனவே அவன் பாலத்தை நோக்​கிச் சென்​றான். குறுக​லான பாலத்​தில் அவன் மட்​டுமே செல்ல முடி​யும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட்​டும் தூக்​கிச் செல்ல​லாம். புலி, புல்​லுக்கட்டு, ஆடு – இதில் ஏதாவது ஒன்றை மட்​டும் தன்னுடன் தூக்​கிச் செல்ல​லாம்.

இப்​போது என்ன செய்வது?

புலியை​யும் ஆட்டை​யும் இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்​றால்,​புலி ஆட்​டைக் கொன்றுவி​டும். புல்​லுக்கட்டை வைத்து​விட்டு புலி​யைத் தோளில் தூக்​கிச் சென்​றால் ஆடு புல்​லுக்கட்டை தின்று சிதற​டித்துவி​டும். ஆட்டை​யும் புலியை​யும் ஒன்​றாக விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ புல்​லுக்கட்டை​யும் ஆட்டை​யும் விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ பிறகு எப்படி மூன்றை​யும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித்​துப் பார்த்​தான். ஒரு வழி​யும் தெரிய​வில்லை. நீங்கள் ஏதாவது அவ​னுக்கு ஆலோ​சனை சொல்​லுங்க​ளேன் :lol::D :D .

இதுக்கு ஒரு வழி சொல்லுங்க :lol::D:lol: .

ஒரு விவ​சாயி இருந்​தான்.​ அவன் ஒரு ஆட்டை​யும் புலியை​யும் வளர்த்து வந்​தான். இரண்டை​யும் தனித்தனியாகத்​தான் வைத்தி​ருந்​தான். ஏனெ​னில் புலி, ஆட்​டைத் தின்றுவி​டும் என்று அவ​னுக்கு நன்​றாகத் தெரி​யும். ஆட்​டிற்கு வைத்தி​ருந்த புல் தீர்ந்து​விட்டது. எனவே புல் கட்டு வாங்குவதற்​காக சந்​தைக்​குச் சென்​றான். புலியை​யும் ஆட்டை​யும் பாது​காப்​பாக தன்னுடன் அழைத்​துச் சென்​றான்.

புல்கட்டு வாங்கி வீடு திரும்​பும் போது மழை வருவது போலி​ருந்தது. எனவே குறுக்கு வழி​யில் சீக்கிரம் வீட்​டிற்​குச் சென்றுவிட​லாம் என்று நினைத்​தான் விவ​சாயி.​ குறுக்கு வழி​யில் செல்வ​தென்​றால் ஒரு ஆற்​றுப் பாலத்​தைக் கடந்து செல்ல வேண்​டும். மிகக் குறுக​லான பாலம் அது. ஒரு நேரத்​தில் ஒருவர்​தான் செல்ல முடி​யும். சுற்று வழி​யில் சென்​றால் மழையி​லும் காற்றி​லும் மாட்டி துன்பப்பட வேண்டியி​ருக்​கும். எனவே அவன் பாலத்தை நோக்​கிச் சென்​றான். குறுக​லான பாலத்​தில் அவன் மட்​டுமே செல்ல முடி​யும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட்​டும் தூக்​கிச் செல்ல​லாம். புலி, புல்​லுக்கட்டு, ஆடு – இதில் ஏதாவது ஒன்றை மட்​டும் தன்னுடன் தூக்​கிச் செல்ல​லாம்.

இப்​போது என்ன செய்வது?

புலியை​யும் ஆட்டை​யும் இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்​றால்,​புலி ஆட்​டைக் கொன்றுவி​டும். புல்​லுக்கட்டை வைத்து​விட்டு புலி​யைத் தோளில் தூக்​கிச் சென்​றால் ஆடு புல்​லுக்கட்டை தின்று சிதற​டித்துவி​டும். ஆட்டை​யும் புலியை​யும் ஒன்​றாக விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ புல்​லுக்கட்டை​யும் ஆட்டை​யும் விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ பிறகு எப்படி மூன்றை​யும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித்​துப் பார்த்​தான். ஒரு வழி​யும் தெரிய​வில்லை. நீங்கள் ஏதாவது அவ​னுக்கு ஆலோ​சனை சொல்​லுங்க​ளேன் :lol::D :D .

புல்லை அவிழ்த்து பின்னால் போட்டு கொண்டு சென்றால் ஆடு புல்லை தொடந்து வரும். புலியை ஆற்றில் இறக்கி விட்டால் அது பாலத்தின் மீது நடக்கும் ஆட்டை தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுக்கட்டைப் புலியின் முதுகில் கட்டிவிட்ட பின்பு, அவன் ஆட்டுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றைக் கடப்பானாம்!

பின்பு, அங்கு நின்று, புலிக்கு 'ஹலோ' சொல்லப் புலி, புல்லுக்கட்டுடன் வருமாம்!

இதைப் போயி, பெரிய பிரச்சனையாக்கிறீங்களே, சொப்னா! :icon_idea:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாரிங்க

புல்லுக்கட்டைப் புலியின் முதுகில் கட்டிவிட்ட பின்பு, அவன் ஆட்டுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றைக் கடப்பானாம்!

பின்பு, அங்கு நின்று, புலிக்கு 'ஹலோ' சொல்லப் புலி, புல்லுக்கட்டுடன் வருமாம்!

இதைப் போயி, பெரிய பிரச்சனையாக்கிறீங்களே, சொப்னா! :icon_idea:

என்னங்க நீங்க ரவுசு பண்றீங்க விடை இதுதாங்க :lol: ,

முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். தனி​யாக இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்று அக்கரை​யில் வைத்து​விட்டு ஆட்டுடன் இக்கரை வர​வேண்​டும்.​ ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புலியை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட்​டைக் கொண்டு செல்ல வேண்​டும்.

இன்னுமொரு ரூட் இருங்குங்க,

முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வர​வேண்​டும்.​ பிறகு புலி​யைத் தூக்​கிச் செல்ல​வேண்​டும். அங்கி​ருக்​கும் ஆட்டை எடுத்​துக் கொண்டு இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ (அக்கரையி​லேயே விட்டு​விட்​டால் புலி ஆட்​டைத் தின்றுவி​டும்). ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பின்பு தனியாகத் திரும்பி இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​

அடுத்தது,ஆட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல​வேண்​டும் :) :) .

Edited by சொப்னா

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க, சொப்னா தங்கச்சி, மூக்கு முகத்தில முன்னுக்குத் தானே இருக்கு!

அதைத் தொடுறதுக்கு, நீங்க எதுக்கு, தலையைச் சுத்திகிட்டு, தான் வரணும் என்று பிடிவாதம் பிடிக்கிறீங்க? :D

புலி ரொம்பவும் பாரமுங்கோ!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

1) குண்டு முழி ராசாவிற்கு குடலெல்லாம் பல். அது என்ன?

2) ஊசி நுழையாத கிணற்றில் ஒரு ஆழாக்கு தண்ணீர் – அது என்ன?

3) திரவமாகப் பிறந்தான். புகையாய் மறைந்தான். அது என்ன?

4) பாடத் தெரிந்தவனுக்கு ஆடத் தெரியாது. ஆடத்தெரிந்தவனுக்குப்

பாடத் தெரியாது. – அது என்ன?

5) அவன் நகராதவன், ஆனாலும் அவன் வாய்க்குள் போட்டவை நகரும்-

அது என்ன?

புல்லுக்கட்டைப் புலியின் முதுகில் கட்டிவிட்ட பின்பு, அவன் ஆட்டுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றைக் கடப்பானாம்!

பின்பு, அங்கு நின்று, புலிக்கு 'ஹலோ' சொல்லப் புலி, புல்லுக்கட்டுடன் வருமாம்!

இதைப் போயி, பெரிய பிரச்சனையாக்கிறீங்களே, சொப்னா! :icon_idea:

புல்லு மேயும் புலி

spaceout.gifspaceout.gif5884170119_322f56d84c_m.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புல்லு மேயும் புலி

spaceout.gifspaceout.gif5884170119_322f56d84c_m.jpg

மல்லை, புல்லுக்கட்டை முதுகில தானே, கட்டச் சொன்னேன்! :D

1) குண்டு முழி ராசாவிற்கு குடலெல்லாம் பல். அது என்ன?

- மாதுளம் பழம்

2) ஊசி நுழையாத கிணற்றில் ஒரு ஆழாக்கு தண்ணீர் – அது என்ன?

- இளனீர்

3) திரவமாகப் பிறந்தான். புகையாய் மறைந்தான். அது என்ன?

- பெட்றோல்

4) பாடத் தெரிந்தவனுக்கு ஆடத் தெரியாது. ஆடத்தெரிந்தவனுக்குப்

பாடத் தெரியாது. – அது என்ன?

அவை யாவை?

- குயில், மயில்

5) அவன் நகராதவன், ஆனாலும் அவன் வாய்க்குள் போட்டவை நகரும்-

அது என்ன?

மல்லை, புல்லுக்கட்டை முதுகில தானே, கட்டச் சொன்னேன்! :D

இந்த புலியை நம்பியா? :D

tiger__scratch_my_back_by_schaduwvacht.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இன்னிக்கு ஒரை கை பாக்கலாமா அண்ணனுங்களா அக்காளுங்களா  :lol:  :lol: .

 

01 நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?

 

02 ஊருக்கு அழகு எது என்றேன்

ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?

 

03 சித்திரையில் சிறு பிள்ளை

வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?

 

04 பூத்த போது மஞ்சள்

பூத்ததும் சிவப்பு
காய்த்த போது சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?

 

05 வந்ததுதான் வந்தீர்களே

வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.