Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான ஆதரவை இந்தியா தொடருமானால் இலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் முன்வைக்க வாய்ப்பில்லை:

Featured Replies

இலங்கை தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இந்தியா மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கான தனது ஆதரவை இந்தியா தொடருமானால் இலங்கைக்கு எதிராக இனிமேல் எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப் பட வாய்ப்பில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த ஆண்டு முற்பகுதியில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை குறித்துக் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததிலிருந்து இது வரை இறுக்கமான கருத்தெதனையும் வெளிப்படுத்தாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது மௌனத்தைக் கலைத்துக் கொண்டு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்குப் பின்னர், முதல் தடவையாக 'ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த இந்தச் செவ்வியை வழங்கியுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தீர்மானத்தின் வலுவைக் குறைக்க, இந்தியா இலங்கைக்கான தனது ஆதரவைத் தொடருமானால், இலங்கைக்கு எதிராக இனி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்பட வாய்ப்பிருக்காது என ஜனாதிபதி இந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நல்ல முயற்சியும் எப்போதும் பாராட்டுக்கு உள்ளாகும். நாம் கோரிய கால அவகாசத்துக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இத்தகையதொரு தீர்மானம் முன்வைக்கப்படாதிருந்திருக்கக்கூடும்.

இந்தியா தனது அயல் நாடுகளுடன் சரியான விதத்தில் தொடர்புகளைப் பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகள் இலங்கை மக்கள் மத்தியில் உருவானமை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையரும் இந்தியர்களும் ஒரே இனமல்ல. அதேபோன்று மக்களும் உணர்வுகள் அற்றவர்களல்ல. இந்தியாவும் இலங்கையும் ஒரே கலாசார மற்றும் வரலாற்று பெறுமதிகளைப் பகிர்ந்து கொண்டால் நாம் மேற்குறித்த நிலைப்பாடு குறித்து சிந்திக்கலாம் எனத் தெரிவித்தார்.

இரு நாடுகளும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பிணைப்பு ஜெனிவா வாக்களிப்பால் மாறியுள்ளதாக நான் உணரவில்லை. நடந்துமுடிந்தவையாகவே இருக்கப்படும். தற்போது எதிர்காலம் பற்றி நாம் சிந்திப்போம். எமக்கு இடையே நெருங்கிய நட்பு நிலவுகிறது. இரு நாடுகள் மத்தியிலும் தொடர்ந்தும் நல்லுறவு நிலவுகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் சீனத் தலையீடு அதிகரிப்பதாக கூறப்படுவது பற்றி கருத்து வெளியிட்ட அவர்,இந்தியா சீனாவுடன் கொண்டிருக்கும் வர்த்தகத் தொடர்பு அளவுக்கு இலங்கை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தகம், தொழில்துறை முதலீடுகளில் இந்தியாவே முன்னுரிமை வகிக்கிறது. ஆசிய வலய முன்னணியில் இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை இலங்கை தடுக்காது. இந்தியாவின் அத்தகைய அச்சம் எதுவும் காணப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவினால் நிர்மாணிக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் செயற்பாட்டு நிர்வாகம் சீனாவிடம் ஒப்படைக்கப்படமாட்டாதென உறுதிமொழி எதனையும் ஜனாதிபதி இந்தச் செவ்வியின்போது வழங்கவில்லை.

அம்பாந்தோட்டை வேலைத்திட்டத்தை ஏற்குமாறு முதலில் இந்தியா கோரப்பட்டதாகவும், கொழும்புத் துறைமுக நிர்மாண ஒப்பந்தம் ஹொங்ஹொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், இந்தியா கொழும்புத் துறைமுக நிர்மாண சேவைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் வெளிப்படுத்தவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

சீனா 2009ஆம் ஆண்டில் முடிவடைந்த யுத்தத்துக்கு உதவியமைக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். சரியான கோணத்தில் ஒரு விடயம் குறித்து பார்வையைச் செலுத்துவது முக்கியமானது. இந்தியா காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்தை கையேற்றுள்ளது.

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கிறது. இந்தியா பலாலி விமான நிலையத்தை புனர்நிர்மாணம் செய்கிறது எனவும் ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

www.Globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.