Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமூடி - சினிமா விமர்சனம்

Featured Replies

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..!

Mugamoodi.jpg

இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..?

காதலியை மகிழ்விக்க பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டாரா..? இல்லையா..?

ஜீவாதான் ஹீரோ என்றாலும், முழுமையாக பாராட்டைப் பெறுவது நரேன்தான்.. “அஞ்சாதே” பிரசன்னாவை போன்று இந்த வில்லத்தனத்தை கேட்டுப் பெற்ற நரேனின் புத்திசாலினத்தை மிகவும் பாராட்ட வேண்டும்..! அவருடைய அறிமுகக் காட்சியில் துவங்கி, அஸ்தமிக்கும் காட்சிவரையிலும் அவர் இருக்கின்ற ஸ்கிரீனில் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்..!

மருத்துவமனையில் மாஸ்க்கை எடுத்துவிட்டு தனது ஒரு புற முகத்தை மட்டும் காட்டிவிட்டு ஓடத் துவங்கும் நரேனின் அந்த ஸ்டைல் ஸ்கிரீனுக்கே அழகு சேர்க்கிறது.. செல்வாவை தேடி கொலைவெறியுடன் ஆனால் எந்தவித அலட்டலும் இல்லாமல் கையில் சுத்தியலுடன் படியேறி வரும் அந்த அலட்சிய நரேனை யாருக்கும் பிடிக்காமல் போகாது.. தியேட்டரில் முழு கைதட்டலையும் இந்தக் காட்சி பெறும் என்றே நினைக்கிறேன்..!

இதே வேகத்தோடு இறுதியில் “சூப்பர்மேன்.. பேட்மேன்.. ஸ்பைடர்மேன்..” என்று ஜீவாவை கிண்டலடித்து பேசும் காட்சியில் நரேனைவிடவும் வேறொரு சிறப்பான வில்லன் மிஷ்கினுக்கு கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது..!

மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்பூ, கராத்தேயில் தானும் ஒரு கில்லிதான் என்பதை நிரூபிக்கும்வகையில் சண்டைக் காட்சிகளில் மிக பிரயத்தனம் செய்து நடித்திருக்கிறார் ஜீவா.. தமிழ்ச் சினிமாவில் இந்த குங்பூ கலை இந்த அளவுக்கு வியாபித்திருப்பது இந்தப் படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்..!

இந்த பேட்மேன் ஜீவாவைவிடவும், சாக்லேட் பாய் ஜீவாதான் அசத்தியிருக்கிறார்..! மீன் மார்க்கெட்டில் “என் கையை வெட்றா” என்று வம்புச் சண்டைக்கு இழுக்கும் அந்த ஸ்டைல்.. ஹீரோயினை பார்த்தவுடன் சொக்கிப் போய் நிற்பது.. அவள் அடிப்பதையும், செருப்பை எடுத்து வீசுவதையும்கூட அலட்சியமாக ஒதுக்குவது.. ஸ்பிரே செய்வதைக்கூட மாலை, மரியாதை லெவலுக்கு ஏற்றுக் கொண்டு சரிவதுமான அந்தக் காட்சியில் அனைத்து காதலர்களுக்கும் ஜீவாவை பிடிக்கும் என்று நினைக்கிறேன்..!

ஹீரோயினைத் தேடி கோபத்துடன் கிளம்பி வரும் காட்சியில் வரும் வசனங்களும், நண்பர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியும் செம கலகலப்பு..! ஹீரோயினிடம் பேசுவதற்காக வந்து தன்னைப் பற்றி பீலாவிட்டுக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா வந்து குட்டையை உடைப்பதும் இயல்பான நகைச்சுவையில் ஒன்று..!

மாஸ்டருக்கு ஒரு அவமானம் என்றால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிஷ்யர்களை வைத்திருக்கும் கேரக்டர் செல்வாவிற்கு.. அநியாயமாய் பரமபதம் அடையும்வரையிலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்த ஒரு மர்மக் கதை சூப்பர்.. அதன் திருப்பம் திரைக்கதைக்கு அந்த இடத்தில் மேலும் ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது..! செல்வா,. நரேன் மோதலில் சந்தேகமில்லாமல் நரேன் ஜெயித்தார் என்றாலும், செல்வாவின் அந்த ஈடு கொடுத்தலும் நிஜமான பைட்டுதான்..

ஹீரோயின் பூஜா ஹெக்டே புதுமுகம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இன்னும் 2 படங்களிலாவது நடிக்கட்டும். பின்பு பேசலாம்..!

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் இது மிஷ்கினின் படம் என்பதை பல காட்சிகளும், பல ஷாட்டுகளும் சொல்லிக் கொண்டே வருவதுதான் இப்படத்தின் சிறப்பு.. மக்களுக்கான சினிமா என்பதைவிட சினிமா என்னும் கலைக்கான சினிமாவில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..!

ஜீவா சாப்பிடும்போது அங்கேயிருந்து கேமிரா நகர்ந்து படுக்கையில் படுத்திருக்கும் அவர் அப்பாவிடம் வருவதும். தொடர்ச்சியான வசனக் காட்சிகள் எடுக்கப்பட்டவிதம் கவர்கிறது..! கையில் சிக்கிவிட்ட ஒரு கொலையாளியிடம் உண்மையை வரவழைக்க நாசர், செல்போனில் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் பேசும்காட்சி உம்மணா மூஞ்சிகளைகூட சிரிக்க வைத்துவிடும்..!

அதேபோல் மருத்துவமனையில் தன்னைக் கொல்ல வரும் பத்ரியை பிடிக்கும் இடத்தில் நடிப்பும் டைரக்ஷனும் ஏ ஒன்..! ஆனால் அதற்கடுத்து நரேன் கும்பலை பிடிக்க துவங்கும் நேரத்தில்தான் ஆயிரம் அனர்த்தங்கள்.. இதற்கு பின்புதான் முந்தைய மிஷ்கினின் படங்களைவிட இப்படம் திரைக்கதையில் அநியாயத்திற்கு நொண்டியடித்திருக்கிறது..!

நரேன் பணயக் கைதிகளை விடுவிக்க அரசுடன் பேரம் பேசும் திரைக்கதை இது மிஷ்கினின் படம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவிட்டது.. லாஜிக் பார்க்க முடியாதவைகள் நகைச்சுவை படங்களும் சிலவகை கமர்ஷியல் படங்களிலும். ஆனால் தமிழ்ச் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம்.. இதுதான் இந்த வரிசையில் முதல் படம் என்றெல்லாம் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட படத்தில் சொத்தையான லாஜிக் ஓட்டைகள் என்றால் எப்படி..?

கிரீஷ் கர்நாட் மற்றும் அவரது குரூப்பின் செயல்பாடுகள் என்ன..? கிரீஷ் கர்நாட்டின் அந்த ரோபோ மனிதன் எதற்காக அங்கே இருக்கிறான்..? பேட்மேன் உடையை போன்று பல உடைகள் அங்கே எதற்காக இருக்கின்றன..? அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் கோட்டையைவிட்டுவிட்டு, அவர்களை வைத்தே குழந்தைகள் தப்பிக்கிறார்கள் என்றெல்லாம் கொண்டு சென்றது சூப்பர் மொக்கைத்தனம்..!

ஒரு துணை கமிஷனர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டிருக்கிறார்.. பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டாமா..? தமிழ்நாடு போலீஸை சப்பையாக்க் காட்டி அந்த மருத்துவமனை சண்டைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் கொலை செய்ய ஆட்கள் வருவதை பார்த்தவுடன் ஒரு இன்ஸ்பெக்டர் ஹலோ என்று செல்போனில் பேசியபடியே விலகி ஓடுவது ஒன்றுதான் இதில் இருக்கும் யதார்த்தம்..!

கடலோர காவல் படையின் அதிகாரியைக் கடத்திச் சென்றால், மாநில அரசுதான் விடலாம். மத்திய அரசுமா சும்மா இருக்கும்..? சாதாரண செயின் திருடர்களுக்கே ஸ்கெட்ச் போடும் போலீஸ் இதுக்கெல்லாம் பயப்படுவார்கள்.? இந்திய எல்லைக்கு அப்பால போயிட்டா இவங்களை கண்டுபிடிக்க முடியாதாக்கும்..? சோமாலிய கடற் கொள்ளையர்களை அவர்களது கடற் பிரதேசத்திற்கே நமது இந்திய விமானப் படையை அனுப்பி குண்டு போட்டு பரலோகம அனுப்பியவர்கள் இவர்கள்.. இதெல்லாம் பிளஸ்டூ கிளாஸ்ல ஆத்திச்சூடி சொல்லித் தர்ற மாதிரி இருக்கு..! இன்னொரு மிகப் பெரிய முரண்பாடு.. அதுவரையிலும் பேட்மேன் தமிழகத்து மக்களுக்கு அப்படியென்ன நல்லது செஞ்சுட்டாருன்னு தெரியலை.. ஆனா நாசர் பேட்டி கொடுக்குறாரு.. “தமிழகமே கொண்டாடும் பேட்மேன்..” அப்படீன்னு..! என்னத்த சொல்றது..?

படத்தில் மொத்தமுள்ள 3 பாடல்களில் இடைவேளைக்கு முன்பே 2 பாடல்களை வைத்து நிரப்பிவிட்டார். துவக்கத்தில் வரும் அந்த நீண்ட ஷாட்.. அதைத் தொடர்ந்த ஈர்ப்பான நடனம்.. கண்ணதாசன் காரைக்குடி டைப்பில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது..! வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா பாடல் துவங்கும் காட்சியும் ரசனையானது.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. அக்காட்சியை படமாக்கியவிதமும் சூப்பர்தான்.. ஆனால் இதற்காக சுவிட்சர்லாந்து போயிருக்க வேண்டுமா என்றும் கேட்கத் தோன்றுகிறது..

3-வது பாடல் மருத்துவமனையில் நாசரை கொல்ல வரும் ஆட்களை ஜீவா தாக்கி திருப்பியனுப்பிய பின்பு பூஜாவின் லீட் காட்சியோடு வரும்.. அது அந்த இடத்தில் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்று சொல்லி நீக்கிவிட்டார்களாம்.. இது மட்டுமல்ல மொத்தம் 3 மணி நேர படமாக திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.. அந்த பாடல் காட்சியை வைத்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் டொக்குதான்..!

"இந்தப் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.. ஒரு பாட்டியோட கதையைத்தான் இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் கொடுத்திருக்கேன்.. இதில் எந்தக் காட்சியிலும் விரசமில்லை.. ஆபாசமில்லை.. தாராளமாக என்னை நம்பி வரலாம்..” என்று குரல் கொடுத்தார் மிஷ்கின்.. இப்படிச் சொல்லிவிட்டு, ஹீரோ ஒண்ணுக்கு போவதை ஹீரோயின் பார்த்து வெட்கப்பட்டு “பார்த்துட்டேன்” என்று குழந்தைகளிடம் சொல்லும் காட்சி ரொம்ப ஓவர்.. இதை நீக்கிவிட்டுத்தான் யு சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும்.. சரி போகுது விடுங்க.. ‘கந்தசாமி’யையும், ‘சிவாஜி’யையுமே ‘யு’ சர்டிபிகேட்ல பார்த்த ஜனங்க நாம..!

தமிழ்ச் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர்களில் மிஷ்கினும் ஒருவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், பக்தியும் உண்டு. இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே.. அந்த வகையில் இப்படம் எனக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்..

இந்த ‘முகமூடி’ தொடர்ச்சியான படங்களாக வரப் போகிறது என்று மிஷ்கினும், தயாரிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று ‘யு டிவியும்’ சொல்லியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்.. ஆனால் அடுத்த பாகத்திலாவ்து இந்த ‘பேட்மேன்’ ரசிகர்களைக் கவரும்வகையில் இருக்கட்டும்..!

முகமூடி - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!

Read more: http://truetamilans.blogspot.com/2012/09/blog-post.html#ixzz25NXXumrt

புரடியூசர் தான் இந்த விமர்சனத்தை எழுதி இருப்பாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.