Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க..தலைவர் மு.கருணாநிதியுடன் ஈழதேசம் சிறப்பு நேர்காணல்..!

Featured Replies

தி.மு.க..தலைவர் மு.கருணாநிதியுடன் ஈழதேசம் சிறப்பு நேர்காணல்..!

ஈழதேசம் : அய்யா வணக்கம்..! தமிழ் வாழ்க..!

மு.க. : ம்ம்.. ம்ம்..! பரவாயில்லையே தமிழ் வாழ்க என்று கூறுகிறாய்..! யார் நீ..? தமிழனா, திராவிடனா..?

ஈழதேசம் : போன ஆட்சியில் நீங்கள் முதல்வராக இருக்கும் பொழுது உலகத் தமிழர் மாநாடு நடத்தினீர்களே..? அப்பொழுது எல்லா அரசு கட்டிடத்திலேயும் எழுத சொல்லி உத்தரவு போட்டீர்களே..? அந்த பில்டிங்குகளை காணும் பொழுதெல்லாம் 'தமிழ் வாழ்க' என்று படிப்பேன் அய்யா..!

மு.க. : நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே தம்பீ..?

ஈழதேசம் : நான் பதில் சொன்னால் நீங்கள் பேட்டி, கீட்டி... எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அய்யா..!

மு.க.. : ஆகட்டும்..! உன்னை போல் வேலை வெட்டி இல்லாதவன் என்று நினைத்தாயோ..? பேட்டி கொடுக்கும் கலாச்சாரத்தையே மாற்றிக் காட்டியவன் நான் என்று தெரியுமா உனக்கு..? ஈழம் என்று சொல்லுகிறாய், அதனால் உனக்கு பேட்டி அளிக்க சம்மதிக்கிறேன், சீக்கிரம் கேள்விகளை கேள், கொஞ்சமாக கேட்க வேண்டும். புரிகிறதா..?

ஈழதேசம் : உங்களின் டெசோ வெற்றி மாநாட்டை தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் சிலர் ஏமாற்று வேலை என்றும், தன் சுயலாபத்திற்குமே உதவும் என்று கூறுகிறார்களே அய்யா..?

மு.க. : யார் தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள்..? இப்பொழுது இவ்வாறு பேசி தமிழ் மக்களை குழப்புவர்களை எனது அரசு கண்டித்துள்ளது. எனது அரசின் சட்டம் தனது கடைமையை ஆற்றியுள்ளது என்று இவ்வாறு பேசுபவர்களுக்கும் தெரியும். இவர்கள் எல்லாம்... நான் விடுதலையில் உதவி ஆசிரியராக செம்மையாக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது எங்கே போனார்கள்....? என்று உன்னால் கூற முடியுமா...?

ஈழதேசம் : அய்யா..அதுவந்து..தற்பொழுது தமிழ் தேசிய தலைவர்கள், அமைப்புகள் கட்சிகள் என்று இருக்கிறது அல்லவா..?

மு.க. : எனது நாளாந்த அறிக்கைகளை பத்திரிக்கைகளில் வெளியிட்டு வருகிறேன், முரசொலியில் உடன் பிறப்புகளுக்கு கழக கண்மணிகளுக்கு தெளிவுபடுத்தி வருகிறேன். டெசோ மாநாடு வெற்றியடா..! ஐ.நா.வில் தீர்மானத்தை கொடுப்பதற்கு நாள் குறித்து விட்டோம், கட்சியின் பொருளாளர் திரு.மு.க..ஸ்டாலின் மற்றும் கழக எம்.பி.க்களுடன் சென்று கையளிப்பார்கள் என்றெல்லாம் செய்திகள் ஏடுகளில் எல்லாம் தினசரி வந்த பொழுதாக இருக்கையில், அறியாதவன் செய்தி தாள்களையே பார்த்திராதவன் கேட்பதைப் போல இருக்கிறதடா தம்பீ..! இதற்குத் தான் அறியாச் சிறுவர்களை மற்றும் அறியாச் செய்தியாளர்களை நான் சந்திப்பதே இல்லை. அறிக்கைகளை கொடுத்து விடுவேன், அவர்களும் அதைப் படிக்காமலேயே அவர்களின் ஆசிரியரிடம் கொடுத்து நல்ல பெயரை வாங்கிக்கொண்டு சம்பள உயர்வும் அடைந்து பலனை பெற்று விடுவார்கள்.

ஈழதேசம் : அய்யா... அந்த டெசோ மாநாடு குறித்து..?

மு.க. : இப்பொழுது எதிர்த்தவர்கள் அப்பொழுது ஆதரித்தார்கள் என்று தெரியுமா உனக்கு..? இதே நெடுமரங்கள் போன்றவர்கள் அன்றைய டெசோவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். இதே நெடுமரங்கள் தான் எனக்கு ஒரு கடிதம் எழுதி, டெசோ மாநாடு மாதிரி ஒரு உற்ற தோழன் ஈழ விடுதலைக்கு கிடையாது என்று சொன்னவர்களின் வாய் தான் இன்று குளறி பேசுகிறது. 1985 - ல் ஆகஸ்ட் மாதம் செல்வாவின் மகன் சந்திரகாசன் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம்....,( இடையே குறிக்கிட்ட ஈழதேசம்.)

ஈழதேசம் :.அய்யா..! நிறுத்துங்கள் உங்கள் புள்ளி விபரங்களை...! நான் கேட்ட கேள்வி வேறு, நீங்கள் சொல்லும் பதில் வேறாக இருக்கிறதே..? ஒரு பேச்சுக்கு இந்த புள்ளி விபர கணக்கு எல்லாம் மிகச் சரியானது என்றால், இந்த 2 G விவகாரத்தில் இந்திய தணிக்கை அதிகாரி, சுமார் 2,65,000 மற்றும் சில்லறை கோடிகளில் ஊழல் நடைபெற்றதாக புள்ளி விபரம் கொடுத்தபொழுது நீங்கள் அதை மறுத்தீர்களே..? சுமார் இந்தியா முழுதும் அந்த கணக்கெடுப்பு துறையில் லட்சக்கணக்கில் வேலை செய்தவர்கள் கொடுத்த அறிக்கை தான் அந்த துல்லியமான புள்ளி விபரம் அல்லவா..? இந்த புள்ளி விபர கணக்கையே நீங்கள் மறுத்த நாள் முதல், நானும் எந்த புள்ளி விபர கணக்குகளையும் மதிப்பதில்லை அய்யா..! மேலும் அவர்களோ லட்சக்கன்கானோர் படித்து பட்டம் பெற்று கணக்கெடுக்கும் வேலை மட்டும் செய்து கொண்டு சொல்கிறார்கள். மாறாக நீங்கள் ஒருவர் மட்டுமே கொடுக்கும் புள்ளி விபர கணக்குகளை விபரங்களை நாங்கள் எப்படி அய்யா நம்ப முடியும்..?

மு.க. : நீ ஜெயா டி.வி. யின் ஆளா..? அ.தி.மு.க., காரனா..என்ன தெரியும் உனக்கு..என்றார் கோபமாக.

ஈழதேசம் : நீங்கள் தி.க.வின் விடுதலையில் சேர்ந்தது முதல் நாளொரு தினமும் டைரி குறிப்பை எழுதி வைத்துள்ளீர்கள், ஏனென்றால் அப்பொழுதே நீங்கள் தீட்டிய திட்டம் தான் இந்த கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் பதவிகள். எனவே குறித்து வைத்துள்ள முக்கிய சம்பவங்களின் தொகுப்பை தற்பொழுது அள்ளி விடுகிறீர்கள். குறிப்புகளில் இருக்கும் சம்பவங்களில் உங்களின் பங்கு, நேர்மை மற்றும் கடைசி வரை நாம் எந்த கோணத்தில் இருந்தோம் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, வெறும் டைரி குறிப்புகளை சொல்லி ஏமாற்றினீர்கள்..? உங்களால் அனுகூலம் பெற்றவர்கள் எதிர்க்க திராணியற்று, உங்களின் இந்த டைரி குறிப்பை அதில் உள்ள புள்ளி விபரங்களை கண்டு அதிசயித்து உங்களை பெரும் தலைவர் என்று கருதினார்கள்.

ஆனால் என்று லட்சக்கணக்கான மக்களை புல்டவுசர்களும், பீரங்கிகளும்,பாஸ்பரஸ் குண்டுகள் பொழிந்தும் படுகொலை செய்தார்களோ..? அன்றே, உங்களின் சுயரூபவதை அறிந்து கொண்டு விட்டனர், மேலும் நடந்து முடிந்து விட்ட படுகொலைகளுக்கு நீங்கள் எந்த விளக்கம் கொடுத்தாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். போதாக்குறைக்கு உலக நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள் கூட இந்த அளவிற்கு லட்சம் கோடிகளில் ஊழல் செய்ததில்லை. இது போன்ற உங்களின் பிழைப்புவாத, இன துரோக குணாதிசியங்களை இன்றைய தமிழ் உணர்வாளர்களும், புலம் பெயர் இளைஞர்களும் கண்டு கொண்டு விட்டனர்.

இத்துடன் பேட்டி முடிந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும், எனவே அடுத்த சிறப்பு பேட்டி தொடர்ச்சியாக வரும் என்று கருதலாம் வாசகர்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.