Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் இனப்பிரச்சனை - பெளத்தத்தின் ஆணிவேர்

Featured Replies

" என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர்.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான்.

இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை.

சிங்களவர்களின் மஹாவம்சம் கூறுவதை எடுத்துக் கொண்டால் விஜயனின் வழித் தோன்றல்கள் சிங்களவர்கள் ஆயினர் என்று குறிப்பிடுகின்றது. இந்தியாவின் கலிங்கா என்ற இடத்திலிருந்து அவனின் துஷ்ட குணத்தினால் நாட்டு மக்களின் சீற்றத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான விஜயன் அரசனான தந்தையால் நாடு கடத்தப்படுகின்றான்.

நாடு கடத்தப்பட்ட துட்டனான விஜயன் யக்கினிப் பெண்ணான குவேனியை மணந்து பின்னர் அவளை ஒதுக்கி தென்னிந்தியாவின் மதுரையை ஆண்ட பாண்டுவின் மகளை மணந்து இலங்கையை ஆண்டான் என்று மஹாவம்சம் கூறுகின்றது. விஜயன் பிறப்பால் ஒரு பெளத்தன் அல்ல. மணம் கொண்ட வகையிலும் அவன் பெளத்தத்துடன் தொடர்பு கொண்டவனும் அல்ல.

ஆனால் மஹாவம்சத்தை எழுதிய மஹாநாம என்ற பெளத்தபிக்கு "இலங்கைத் தீவு பெளத்தம் வளர்வதற்கும் நின்று நிலைப்பதற்கும் சாக்கிய முனியால் ஆசீர்வதிக்கப்பட்டதென்றும். அதனால் விஜயனும் அவன் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள் "என்று தேர வாதப் பெளத்தத்தின் மத அடிப்படை வாதத்தை அழகாகப் புகுத்தி விடுகின்றார். தந்தையால் நாடு கடத்தப்பட்ட துட்டனான ஒருவனுக்கு கடவுளின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவது என்பது தர்மத்துக்கும் இறை அன்புக்கும் எதிரானது. ஆனாலும் இங்கு இலங்கையில் பெளத்தத்தை வளர்ப்பதற்கு மிகவும் பாடுபட்டவர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்கள் இந்தியாவின் வடக்கிலிருந்து வந்திருந்த பெளத்தத் துறவிகளாகும். திராவிட கிரந்த எழுத்துக்கள் பாவனையில் இருந்த இலங்கையில் ஆரிய கிரந்த எழுத்துக்களை பிரதியீடு செய்ததிலும் பாளி மற்றும் ஒலு மொழிகளின் கலப்பிலான புதிய மொழியான சிங்களத்தின் உருவாக்கத்திலும் இவர்களின் பங்கு அளப்பரியது. மற்றும் அவர்கள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் தென்னிந்தியாவின் தாக்கம் அதிகம் இருந்த இலங்கையில் வட இந்திய மதமான பெளத்தத்தின் பரம்புதலை ஊக்கப் படுத்தவும் அவர்கள் கையிலெடுத்த பிரமாஸ்திரமே மேலாண்மைச்சமூக மனப்பான்மையின் கூறான ஆரிய இனத் தோன்றலான விஜயனின் கதையும் வரலாறும்.

இத்தனைக்கும் மஹாவம்சம் எழுதப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. கி.மு 161ஆம் ஆண்டு தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து துட்டகெமுனு ஆட்சி பீடமேறிய 700 வருடங்களின் பின்னால் எழுதப்பட்ட மஹாவம்சத்தில் துட்ட கெமுனுவை சிங்களத்தின் காவலனாகவும் காவிய நாயகனாகவும் வரித்துக் கொண்டு எழுதப்பட்ட காவியமே மகாவம்சமாகும். அதற்கு முதல் எழுதப்பட்ட தீபவம்சம் அதன் பின் எழுதப்பட்ட சூள வம்சம் ராஜவாளிய அனைத்தும் சிங்கள அடையாளத்தின் ஊற்று மூலமாகவும் பெளத்த மேலாண்மையின் வெளிப்பாடாகவும் இயற்றப் பட்டவையே ஆகும்.

தேரவாதப் பெளத்தம் இல்லாது சிங்களம் என்ற இனத்தின் கலை கலாச்சார சமுகவியல் கூறுகள் தனித்து இயங்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

ஆனால் தமிழ்த் தேசியம் என்பது இந்து சமயம் என்பதற்கு அப்பாலும் தனித்து இயங்கக் கூடியது. சைவம் சமணம் சாக்கியம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்று தமிழ்த் தேசியத்தில் பல மதங்கள் செழித்து வளர்ந்திருந்தன. மதமே இல்லையென்ற ஈ.வெ ரா பெரியாரும் கிறிஸ்தவரான தந்தை செல்வாவும் தலைவர்களாக இருப்பதில் தமிழ்த் தேசியத்தில் எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை என்பது தமிழ்த் தேசியத்தின் விசால மனப்பாங்கிற்கு எடுத்துக் காட்டாகும்.

ஆனால் பிறப்பால் கிறிஸ்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா பெளத்தராக மதம் மாறிய பின்னர் தான் இலங்கையின் பிரதமராகலாம் என்பது தான் சிங்கள தேசிய இனத்தில் தேரவாதப் பெளத்தம் கொண்டிருக்கும் மேலாண்மைக்கு உதாரணமாகும்.

அரசு இயந்திரத்தில் அங்கம் வகிப்பவர்களிடம் மட்டுமல்ல அடிமட்டத்தில் இருக்கும் சிங்கள மக்களிடமும் ஆழ வேரூன்றியிருக்கும் தேர வாதப் பெளத்தம் எற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பதுவே இலங்கை இனப் பிரச்சனையில் மிகவும் சிக்கலை உருவாக்கும் அடிப்படைக் காரணியாகும்.

அரசு இயந்திரத்தின் உறுஞ்சுதலுக்கும் இனப்பிரச்சினையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் அடிமட்ட சிங்கள மக்கள் கூட அடிப்படையான சில உரிமைகளைக் கூட தமிழ் மக்களுக்கு வழங்கச் சம்மதியாது முகம் திருப்பிக் கொள்வதும் தமிழருக்கு எதிரான அனைத்துப் பிரச்சனையிலும் அரசு இயந்திரத்தின் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஆதரவு கொடுப்பதற்கும் இதுவே முதன்மைக் காரணமாகும்.

அடக்கப்படும் அடிமட்டச் சிங்கள மக்களுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவது இனப்பிரச்சினைக்கும் சமூக பொருளாதாரப் பிரச்சினைக்கும் உவப்பான தீர்வு என்று சொல்பவர்கள் சிங்கள மக்களின் மீதான தேர வாதப் பெளத்ததின் ஆதிக்கத்தன்மையை கருத்துக் கெடுக்கத் தவறுகின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

2000 ஆண்டுகளாக கவனமாக ஊட்டப்பட்டு வரும் தேரவாதப் பெளத்தத்தின் இருப்புக்கான ஆதிக்க மனப்பான்மை என்னும் ஆணி வேரை அசைப்பதிலேயே தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான வழி இருக்கின்றது.

thankes>http://ilanthirayan.blogspot.com/2006/05/blog-post_05.html

  • 3 weeks later...

சிங்களவரின் அரசியல் என்பது மதம் சார்ந்ததாக இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டாக்கனியே...

சுதந்திரத்தின் முன்னான ,பின்னான சிங்களவரின் அரசியல் மஹாவம்சத்தின் வழிநடாத்துதலில் துட்ட கெமுனுவை தலைவனாகக் கொண்ட ஒரு துன்மார்க்கத்தில் தான் நடாத்தப்படுகின்றது.

சிங்களவரைப் பொறுத்தளவில் தமிழர்கள் எதிரிகள்... ஒரேயொரு எதிரிகள். நீண்ட கால எதிரிகள். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல.... சாதாரணக் குடிமக்களும் ஆழமாக நம்பும் உண்மை அது.... இன்றைய இனப்பிரச்சனை இவ்வளவு தூரம் ஆழமாகிப் போயிருப்பதற்கு காரணம் இதுதான்.

இரைமீட்டலுடன் -எல்லாள மஹாராஜா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.