Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரகமுவை மாகாணத்தில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள்

Featured Replies

[size=4]இலங்கையில் சபரகமுவை மாகாணசபைக்கான தேர்தலில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி வென்றுள்ளது.[/size]

[size=3][size=4]இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி கே. இராமச்சந்திரன் மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரன் ஆகிய இருவரும் சபரகமுவை மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]மலையகத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வெளியே கணிசமான தமிழ் வாக்காளர்கள், பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிதறி வாழ்வதால் அவர்களால் தேசிய அரசியலில் மட்டுமன்றி உள்ளூராட்சி நிர்வாகங்களில் கூட போதுமான அரசியல் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கின்றமை நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.[/size][/size]

[size=3][size=4]மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றமையாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாகவும் தமிழ்ப் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் போவதாக பலரும் சுட்டிக்காட்டிவந்தனர்.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலைமையிலேயே, சபரகமுவை மாகாணம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மலையகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் அந்த மாகாணத்தின் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை மலையக சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்திருந்தார்கள்.[/size][/size]

[size=3][size=4]அதனையடுத்தே, அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் தற்போது எதிரணி அரசியலில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் கூட்டணி அமைத்து சபரகமுவை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது.[/size][/size]

[size=3][size=4]அதன்பலனாக, சபரகமுவை மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதி வீதம் இரண்டு உறுப்பினர்களை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முதல்தடவையாக வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3][size=4]சபரகமுவை மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120909_sabaragamuwa.shtml

  • தொடங்கியவர்

[size=4]இலங்கையில் சனிக்கிழமை நடந்த சபரகமுவை மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைத்துப் போட்டியிட்ட மலையகத் தமிழ்க் கட்சிகள் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.[/size]

[size=4]முதல்தடவையாக கிடைத்துள்ள இந்த வெற்றி பற்றி பிபிசி தமிழோசைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முதல்தடவையாக கேகாலை மாவட்டத்திலிருந்து தமிழ்க் கட்சி சார்பில் தெரிவான அண்ணாமலை பாஸ்கரன் ஆகியோர் அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.[/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120909_thondacut.shtml

[size=6]சபரகமுவை மாகாணம்.[/size]

120909162416_sabaragamuwa_province_sri_lanka__144x81_bbc_nocredit.jpg

120909162828_sabaragamuwa_province_sri_lanka_tamils_304x171_bbc_nocredit.jpg[size=2]

[size=5]மத்திய மாகாணத்துக்கு வெளியே உள்ள ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் போதிய அரசியல் பிரதிநிதித்துவம் இன்றி உள்ளனர்[/size][/size]

மனோகனேசனுக்கும் மலைய மக்களுக்கும் வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.