Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்போம் - உலகளாவிய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு!

Featured Replies

தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது.

பரந்துவிரிந்த உபகண்டமாக விளங்கும் பாரத தேசத்தில் பல்வேறு பாலைவனப் பரப்புக்கள் இருக்கும் பொழுது அங்கு அணு உலைகளை நிர்மாணிக்காது தமிழகத்தில் மட்டும் அணு உலைகளை நிறுவுவதற்கு டில்லி அதிகார வர்க்கம் முடிவு செய்தது என்பது தற்செயலாக நிகழ்ந்தேறிய விடயம் அன்று. அன்றொரு காலத்தில் தென்னாசியா முழுவதையும் ஆட்சி செய்து இமயத்தில் புலிக்கொடி பொறித்த சோழர் வழிவந்த தமிழினத்தை சிறுமைப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரும் ஆரிய அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியின் ஓரங்கமாகவே இவ் அணு உலைகள் தமிழகத்தில் நிறுவப்பட்டதாகவே நாம் பார்க்க வேண்டும்.

இன்று கூடங்குளத்திலும் அதனை அண்டிய கடலோரப் பகுதிகளிலும் அணுக்கதிர் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் எமது தமிழக உறவுகள், சிங்களக் கடற்படையின் கொடூரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். தமிழீழ தேசத்தின் மீது கடந்த மூன்று தசாப்த காலப் பகுதியில் சிங்களம் விதித்த பொருண்மிய தடைகளை நாம் உடைத்தெறிவதற்கு முதுகெலும்பாக விளங்கியவர்கள் தமிழகத்தின் கடலோர மக்களே.

இவ்வாறு எமக்காக பல துன்பங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமந்த எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் நாம் வாளாவிருக்க முடியாது. எமது தமிழக தொப்புள்கொடி உறவுகளின் உயிர்காப்பதற்கு உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாம் உடனடியாக அணிதிரண்டு கூடங்குளத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எமது உறவுகளுக்கு உறுதுணை நிற்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் எம்மீது இனவழிப்புப் போரை சிங்களம் கட்டவிழ்த்து விட்ட பொழுது தீக்குளித்தும், வீதிகளில் இறங்கிப் போராடியும் எமக்காகக் குரல்கொடுத்தவர்கள் எமது தமிழக உறவுகள். இன்று தாய்த்தமிழகத்தில் எமது இனம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் பொழுது நாம் வாளாவிருக்க முடியாது.

எமது அன்பார்ந்த மக்களே,

உலகின் எந்த மூலையில் தமிழருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு ஈழத்தமிழர்கள் இடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை இந்திய வல்லாதிக்கத்திற்கும், சிங்கள தேசத்திற்கு இடித்துரைப்பது எமது கடப்பாடாகும். நாடற்றவர்களாக நாம் விளங்கினாலும் நாதியற்றவர்கள் அல்ல என்பதை வல்லாதிக்க சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். யூதர்களுடன் எம்மை உவமைப்படுத்தும் நாம், தமிழகத்தில் எமது உறவுகளின் உயிர் காப்பதற்கு உடனடியாக உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு அறவழியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இது விடயத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் வாளாவிருப்பதும், அசட்டைப் போக்குடன் நடந்து கொள்வதும், இராஜதந்திரம் என்ற போர்வையில் ஒதுங்கிக் கொள்ள முற்படுவதும் எமது தமிழக உறவுகளுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகவே அமையும்.

இதனை உணர்ந்து கொண்டு தமிழக உறவுகளின் உயிர் காப்பதற்கு உலகளாவிய ரீதியில் அறவழியிலான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு புலம்பெயர்வாழ் தமிழ் அமைப்புக்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்று உரிமையுடன் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

ஜெனீவாவில் நிகழப் போகும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் எமது தாயக பூமியில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தன்னாட்சியுரிமையை நாம் முன்னிறுத்தும் அதேவேளை தமிழக உறவுகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும்.

இதுவே எமது தமிழகத் தொப்புள்கொடி உறவுகளுக்கு நாம் ஆற்றக்கூடிய தார்மீகக் கடமையாகும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை’’

http://www.sankathi24.com/

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இது புச்சா கீது

மூதேவி தன்னைக் கொண்டு நடக்க வழியில்லை இதுக்கு விளக்குமாத்தையும் தூக்கி கொண்டு என்ற பழமொழிதான் யாபகத்துக்கு வருது.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இது புச்சா கீது

இரிக்கிறது போதாது நைனா

அணுக்கசிவு ஏற்பட்டால் பாதிப்பது தமிழ் நாடு மட்டுமல்ல.கேரளா மற்றும் இலங்கையும் தான் இதில் என்ன சந்தேகம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.