Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்​துங்கள்: அநுராதபுர தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்.

Featured Replies

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தங்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், மனித உரிமை அமைப்புகள், மக்கள் கண்கானிப்பு அமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.ம உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தெடர்பானது அநுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 65 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அரசியல் கைதிகளுக்கென ‘உயர் பாதுகாப்பு பகுதி’ என்ற விசேடமான விடுதி வழங்கப்பட்டு அதிலேயே அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தற்பேது அந்நிலை முற்றிலும் மாறியுளளது. அதாவது வழக்கு முடிவடைந்து நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் அத்துடன் வேறு சிறைச்சாலைகளில் இருந்து வழக்கு மற்றும் ஏனைய விடயங்களிற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளும் எந்த விதமான அடிப்படை காரணங்களுமின்றி முற்றிலும் பாதுகாப்பற்ற விடுதிகளில் பலவந்தமாக அடைக்கப்படுகின்றனர்.

அதாவது பல்வேறுபட்ட குற்றச் செயல்களுடன் தெடர்புபட்ட சிங்கள கைதிகள் இருக்கும் விடுதிகளில் நடைமுறைக்கு மாறாக அடைக்கப்படுவதுடன், சிறைக்காவலர்களும் ஏனைய கைதிகளும் அடிப்படை விடயங்களில் கூட பாரபட்சமாக நேக்கப்பட்டு மிக மோசமான ரீதியில் சொல், மற்றும் செயற்பாடுகளாளும் துன்புறுத்தப் படுகின்றனர்,

அத்துடன் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், சிங்களக் கைதிகள் தமது பழிதீர்க்கும் படலத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

அதனால் எந்த வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்துடனேயே கம்பிக் கூண்டுக்குள் தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்து வருகிறேம்.

இதே பேன்றதொரு செயற்பாட்டின் விளைவாகவே கடந்த ஜீலை மாதம் வவுனியா சிறைச்சாலையில் இருந்து வழக்கொன்றிற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு அரசியல் கைதி, சிங்கள கைதிகள் விடுதிக்குள் தனியாக அடைக்கப்பட் நிலையில் ஏனைய கைதிகளால் ‘மலசலத்’ தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சிறையதிகாரிகளும் அதற்கு உடந்தையாக இருந்து அதனை ஆமோதிப்பதாக நடந்து கொண்டனர்.

இதன் ஒரு எதிரொலியாகத்தான் அரசியல் கைதிகள் வவுனியா சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கெதிராக செயற்பட வைத்தது என்பதும் ஒரு காரணம். வவுனியா அசம்பாவிதத்தை அடுத்து ஏனைய அரசியல் கைதிகளையும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றியதன் பின், அநுராதபுர சிறை அதிகாரிகளால் மிக மோசமாகவும், கண்மூடித்தனமாகவும் கம்பிகள் பொல்லுகளால் தாக்கப்பட்டதை மறைந்திருந்து நாம் கவனித்தோம்.

இது போன்ற தவறுகளாலேயே தமிழ் அரசியல் கைதாகளான நிமலருபன், டில்ருக்க்ஷன் ஆகியேரின் உயிர்களும் பறிக்கப்பட்டது என்ற கொடுமையான குறிப்பினை இவ்விடத்தில் நினைவு படுத்துகிறேம்.

இவ்வாறான விடயங்கள் அநுராதபுரம் சிறைச்சாலை மட்டுமின்றி இலங்கையின் பல சிறைச்சாலைகளிலும் அண்மை காலமாக நடந்து வருகின்றமையும் இது தொடர்பில் அந்தந்த சிறைச்சாலை அத்தியட்சகர்களிடம் பல முறை எடுத்துக் கூறியும் அதனை பொருட்படுத்தாமலிருப்பது கவலையழிக்கிறது.

அநுராதபுரம் சிறைச்சாலை உட்பட ஏனைய சிறைச்சாலைகளிளும் இவ்வாறான நிலமைகளின் போது கடந்த காலங்களில் தமிழ் அரசியல கைதிகள் – சிங்களக் கைதிகளுக்கிடையில் கலவரங்கள் தூண்டி விடப்பட்டு பல உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

இச் செயற்பாடுகளை ஆழமாக நோக்குமிடத்து இதன் பின்னனியில் மீண்டுமொரு தமிழ் – சிங்கள இன மோதல்களை சிறைச்சாலைகளில் ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் உள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட துறை சார் அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டு தகுந்த தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=32432

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.