Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களை சீர்குலைக்கும் ஒட்டுண்ணிகள்! - கந்தரதன்

Featured Replies

தமிழ் மக்களைச் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் சிங்களம், ஆரம்ப காலத்தில் தரப்படுத்தல் என்ற கொடுமையை திட்டமிட்டு புகுத்தி தமிழ் மாணவர்களை வதைத்தது. இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் நன்கு சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிகளவில் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர்.

இதைக் கண்டு பொறுக்காத சிங்கள ஆட்சியாளர்கள், இதை சீரற்ற ஒரு நிலையாகக் கருதினர். தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்றுவதற்கு திட்டம் தீட்டினர். இதற்கு தமது ஆட்சிப்பலத்தை, சிறுபான்மையினத்தவர்களிடம் பிரயோகிக்க முற்பட்டனர். இதற்கென திட்டமிட்டு கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்தச் சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன. இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தச் சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை தட்டிப்பறித்துச் சென்றனர். இது தமிழ் மக்களை கொதித்தெழவைத்தது. அன்று தமிழ் மாணவர்களின் கல்வியோடு விளையாடிய சிங்களம் இன்றும் தொடர்ந்தும் அதையே செய்கின்றது: செய்து வருகின்றது.

அந்தவகையில் தமிழ் மாணவர்களின் கல்வி உடமைகளை திட்டமிட்டு அபகரித்து வைத்திருக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. முசலி முள்ளிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கடந்த 5 வருடங்களின் பின் மீண்டும் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டபோது கடற்படையினர் குறித்த பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பலவந்தமாக வெளியேற்றிய சம்பவம் சிங்களத்தின் திட்டமிட்ட வன்பறிப்புகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

யுத்தத்தின் போது முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007ம் ஆண்டு தமது கிராமங்களை விட்டு இடம்

பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். மீண்டும் 2012ம் ஆண்டு மீள் குடியேறியபோது முள்ளிக்குளம் மக்கள் அந்த கிராமத்தில் மீள் குடியேற அனுமதி மறுக்கப்பட்டனர். முள்ளிக்குளம் மக்களுடைய வீடுகள் கொண்ட பெரும் பகுதி கடற்படையினரால் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் குடியிருப்புக்களில் கடற்படையினர் தமது குடும்பத்தினரை தங்க வைத்துள்ளமை காலப்போக்கில் தெரிய வந்துள்ளது. கடற்படையினரது 45 குடும்பங்கள் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள குறித்த பாடசாலையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளருடன் இவ்விடயம் தொடர்பில் பேசியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பாடசாலையினை 3 ஆம் தவணையில் இருந்து ஆரம்பிப்பதற்கு கல்விப்பணிப்பாளர் அனுமதியளித்துள்ளார். இதேவேளை கடந்த வாரம் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளும் 3 ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட போது, 5 வருடங்களின் பின் முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

தரம் 01 தொடக்கம் தரம் 09 வரை வகுப்புக்களைக் கொண்ட குறித்த பாடசாலை 5 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது 25 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் சமுகமளித்திருந்தனர். இதன்போது மதச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் பாடங்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது குறித்த பாடசாலையினுள் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உடனடியாக அனைவரையும் வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கமைவாக அனைவரும் குறித்த பாடசாலையில் இருந்து வெளியேறினர். இவ்விடயம் தொடர்பிலும் கடற்படையினரின் குறித்த செயற்பாடுகள் குறித்தும் குறித்த கிராம மக்கள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் ஆட்சியே நடைபெறுகின்றது என்பது இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரை இடமாற்றியதை எதிர்த்து கடந்தவாரம் புதன்

கிழமை மேற்படி பாடசாலை மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தினை பாடசாலை நிர்வாகத்தினர் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர், புலனாய்வாளர்களைக் கொண்டு அடக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

மேற்படி பாடசாலை வளாகத்திற்குள்ளும் வெளியிலும் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை வளாகத்திற்குள் காவல்துறையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். பாடசாலை வாளகத்தினை விட்டு வெளியேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தாயாராகிக் கொண்

டிருந்த மாணவர்கள் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த புலனாய்வாளர்களைக் கூட்டிச் சென்ற யாழ். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் மேற்படி புலனாய்வாளர்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனால் மாணவர்களிடம் சகஜமாக உரையாடிய புலனாய்வாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்னிற்கும் மாணவர்களுடைய விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினையும் பெற்றுள்ளனர். இதன் பின்னர் தாம் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் தமது அடையாள அட்டையினையும் காண்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்படி விபரங்கள் பெறப்பட்ட மாணவர்களை உடுவில் இராணுவ முகாமிற்கு 3 மணியளவில் விசாரணைக்காக வரவேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இயங்கும் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாண

வர்களுடைய கல்விச் செயற்பாடுகளை திட்டமிட்டு முடக்கும் செயற்பாடாகவே இதுவும் இடம்பெற்றுள்ளது. யாழ்.

கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் மாற்றத்தின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடி ஒட்டுக்

குழுவினராகிய ஈ.பி.டி.பி கட்சித் தொண்டர்கள் இருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

இவர்களே இன்று சிங்களத்தின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் மத்தியில் ஊடுருவி அவர்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். சிங்களத்தின் இவ்வாறான வன்கொடுமைகளை வரும் செப்டெம்பர் 22 ஆம் நாள் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. சபையின் 21 ஆவது கூட்டத்தொடரில் எடுத்துரைத்து நீதி கேட்போம் வாரீர்!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.