Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம்

Featured Replies

மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம்

-யாழ்வரன்-

கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்டுள்ளது.

அரச படைகளினாலேயே அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதும் பின்னர் அவர்களுக்கு புலிச்சாயம் பூசி உண்மையை மூடி மறைப்பதும் தற்போது சர்வசாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன. ஒன்று, இரண்டாக நடைபெற்று வந்த தமிழ்த் தேசியப் பற்றாளர்களினதும் அப்பாவித் தமிழ் மக்களதும் கொலைகள் இப்போது ஐந்து எட்டு என ஒரேயடியாக வகை தொகையின்றி கொலை செய்யப்படுமளவிற்கு அதிகரித்துச் சென்றுள்ளது.

இவை தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் நிகழ்வாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் ஒரு தந்திரோபாயமாகவுமே கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி புத்தூர் கிழக்கு ஐயனார் கோவிலடிப் பகுதியில் அப்பாவி இளைஞர்கள் ஐவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைகளுக்குள் அவர்களது சடலங்கள் வீசப்பட்டிருந்தன. புத்தூர் ஐயனார் ஆலயத்துக்கருகிலுள்ள இராணுவ முகாமிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலேயே இந்தச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஐந்து இளைஞர்களில் சிலர், புத்தூர்ப் பகுதியில் வீடொன்றில் இரவுவேளை தனித்திருந்த பெண்ணொருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் பின்னணியிலேயே இவர்களின் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன என அப்பகுதியைச் சேர்ந்த பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று இம்மாதம் நான்காம் திகதி நண்பனின் விருந்துபசாரத்திற்கு சென்று கொண்டிருந்த கரவெட்டியைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் ஏழு பேர் நெல்லியடி நாவலர் மடம் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக வைத்து இராணுவத்தினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் புலிகள் எனவும் தம்மீது பெருமளவான ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்த முற்பட்டபோதே அவர்களை தாம் சுட்டுக் கொன்றதாகவும் வ ழமை போன்று இராணுவத் தரப்பு கதைவிட்டது.

ஆனால், இவர்கள் அனைவரும் துறைமுகப் பகுதியில் பணியாற்றி தமது வாழ்க்கையை நடத்தும் அப்பாவிகள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் பின்னணியையும் அவர்களது குடும்ப நிலையையும் அவர்கள் குடியிருக்கும் வானம் பார்க்கும் குடிசைகளையும் நேரில் சென்று பார்த்தவர்களுக்கு இவர்கள் அப்பாவிகளே என்பது ஒரு கணத்தில் புரியும்.

அனைத்துச் சம்பவங்களிலும் பயங்கரத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டதாக இளைஞர்கள் எட்டுப் பேர் தென்மராட்சி- மந்துவில் பகுதியில் தற்போது காணாமற் போயுள்ளமை குடாநாட்டையே உலுக்கியுள்ளது.

இவர்கள் அனைவரையும் இராணுவத்தினரே கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர் என்பதில் தமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என காணாமற்போன இளைஞர்களின் உறவினர் மற்றும் அக்கிராமவாசிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மந்துவில் கேரத்தம்மன் ஆலயத்திலிருந்து குறித்த எட்டு இளைஞர்களும் காணாமற்போன சம்பவதினம் அப்பகுதிக்கு இராணுவ பவள் கவச வாகனம் மற்றும் `டிரக்' ஆகியவற்றில் சென்றதை தாம் அவதானித்ததாகவும், எனவே, படையினரே இவர்களைக் கடத்திச் சென்றனர் எனவும் தமது முறைப்பாட்டில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் இரவுவேளை தங்கியிருந்து திருப்பணிவேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் அங்குவைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.