Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுக்கப்பட்ட அறிவு

Featured Replies

[size=2]

[size=4]பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன் வைத்தியன்.[/size][/size]

[size=2]

[size=4]கோவாவில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் இருந்த சுமார் 750 வகைத் தாவரங்களைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் அதில் இடம்பெற்றிருந்தன. இந்தியத் தாவரங்களைப் பற்றிய தகவல் திரட்டுக்கு இந்தியர்கள் உதவி செய்ததில் பெருமைப்பட ஒன்றும் இல்லைதான். ஆனால், இந்தியாவில் அப்படியான பகுப்பு முறை முன்னரே இருந்ததால்தான் அந்தப் பணியை எளிதில் முடிக்க முடிந்தது. ஆயுர்வேதத்திலும் அதற்கு முன்பாகப் பின்பற்றப்பட்ட மருத்துவ முறையிலும் ஏராளமான மூலிகைகளைப் பற்றிய குறிப்புகளும் அவற்றின் குணங்களும் மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தன.[/size][/size]

[size=2]

[size=4]அதுபோல், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்துமே மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, கலப்பை. மண்ணைக் கிளறி விதைப்பது உலகில் எல்லா சமூகங்களிலும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயம்தான். ஆனால், இந்திய கலப்பை போன்ற செயல் திறம் மிகுந்த ஒரு கருவி உலகில் வேறு எங்கும் இருந்திருக்கவில்லை. இந்தியாவில் அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து அந்த காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்த மருந்துகளைவிட செயல்திறம் மிகுந்ததாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தடுப்பு மருந்தைவிட இந்திய பாரம்பரியத் தடுப்பு மருந்து அதிக நோய்ப் பாதுகாப்பைத் தந்திருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பு உயர் தரமானதாக இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 10,000 இரும்பு உலைகள் இருந்ததாகவும் ஒரு உலையில் வாரத்துக்கு அரை டன் இரும்பு உருக்கித் தயாரிக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 35-40 வாரங்கள் இயங்கியதாக வைத்துக்கொண்டால் ஆண்டொன்றுக்கு ஓர் உலை மூலம் சுமார் 20 டன் இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கும். உலகின் வேறு எந்தப் பகுதியை விடவும் இது அதிகமான அளவுதான். அதோடு அந்த இரும்பின் தரமானது ஸ்வீடனின் மிகச் சிறந்த இரும்பைவிடவும் சிறப்பாக இருந்ததாக அயர்ன் வொர்க்ஸ் இன் ராமநாயக்க(ன்)பேட்டை என்ற தலைப்பில் 1795-ல் எழுதிய கட்டுரையில் டாக்டர் பெஞ்சமின் ஹைன் குறிப்பிட்டிருக்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]இவை எல்லாவற்றையும்விட மருத்துவத்தில் இந்தியா எட்டியிருந்த உயரம்தான் பிரிட்டிஷாரை மலைக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி இன்று உலகில் வெகுவாக முன்னேறி இருக்கும் மருத்துவப் பிரிவு. அதன் வேர்கள் இந்தியாவில்தான் இருந்திருக்கிறது என்பது அன்றைய பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல இன்றைய இந்தியர்களுக்குக்கூட நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கும். ஐரோப்பியர்கள் நீராவியில் இருந்து ரயில் எஞ்சினைக் கண்டுபிடித்தார்கள். நாம் இட்லி சுட்டோம் என்று நம்மை நாமே கேலிச் சித்திரமாக ஆக்கிக் கொள்வதில்தான் நமக்கு மிகவும் பெருமிதம்.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவின் கடந்த காலம் பிற நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என்ற உண்மையை இந்தியர்களே மறுப்பதற்கான காரணம் வெகு எளிது. இந்தியாவின் கடந்த காலத்தை வைதிக-பிராமண ஆதிக்கம் மிகுந்த காலமாக அடையாளப்படுத்தியே அவர்களுடைய அரசியல் ஆசான்கள் வகுப்பு எடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் சிறப்பு என்று எதையாவது சொன்னால் அது பிராமணர்களைப் புகழ்ந்ததாக ஆகிவிடும். பிராமணர்களை தீமையின் பேருருவமாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். இதற்கு எந்தவித ஆதாரங்களும் தேவையில்லை. அது அப்படித்தான் என்று அடித்துச் சொன்னாலே போதும் என்ற எளிய சூத்திரத்தால் முடுக்கிவிடப்பட்டுதான் இன்றைய இந்திய சிந்தனை நதி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]உலகின் எல்லா இடங்களையும் போலவே இங்கும் வேலைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன; அகமண முறை நிலவியிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பிராமணர்களின் கண்டுபிடிப்பாக சொல்லப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றன. மனு ஸ்மிருதி என்பது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் இந்த அளவுக்கான முக்கியத்துவத்தையே பெற்றது. அவர்களால்தான் அது தொகுக்கவும்பட்டது. அதில் என்னென்ன இடைச்செருகல் என எந்த ஆய்வும் எங்கும் செய்யப்பட்டதே இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ‘பிற்படுத்தப்பட்ட சாதிகளையும்’, ‘தாழ்த்தப்பட்ட சாதிகளையும்’ அங்கமாகக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள்தான் கடந்த ஐம்பது ஆண்டுக்கு முன்புவரை நீதிமன்றமாக இருந்துவந்திருக்கின்றன. இன்றும் தமக்குள்ளாகவே பேசித் தீர்த்துக் கொள்ளும் பஞ்சாயத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்றும் மனித மலத்தை மனிதரே அள்ளுகிறாரா… மனுதான் காரணம். [/size][/size]

[size=2]

[size=4]தலித்கள் பிற்படுத்தப்பட்டவர்களால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறார்களா… ஆரிய, பிராமணர்கள்தான் காரணம் என கிளிப் பிள்ளைகள்கூட சொல்லக் கூசும் அளவுக்கு விஷயத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள மறுத்து மட்டையடி அடிப்பதே இங்கு போராளிக்குணமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.[/size][/size][size=2]

[size=4]இந்தியாவைப் புகழ்ந்தால் பிராமணர்களைப் புகழ்ந்ததாகிவிடும். பிராமணர்களைப் பழிக்க வேண்டுமா… இந்தியாவின் கடந்த காலத்தைப் பழித்தால் போதும் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்தியாவின் பல்வேறு சாதிக் குழுக்களில் பிராமணர்களும் ஒரு பிரிவினர். ஒவ்வொரு சாதியினரும் தத்தமது தொழில்களை எந்த அளவுக்கு மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களோ அதைவிடக் கூடுதலாக பிராமணர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொண்டதன் மூலம் சமூக மேலாண்மையை அடைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கீகாரத்தோடு அவர்கள் தங்கள் நிலையைத் தக்கவைத்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [/size][/size]

[size=2]

[size=4]மேலும் இந்தியாவின் கட்டடக்கலையில் ஆரம்பித்து மருத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என ஏராளமானவற்றில் பிராமணர்களுக்கு இணையாக பிற சாதியினரும் கணிசமாக பங்களித்திருக்கிறார்கள். இந்தியா என்பது வெறும் பிராமண பூமி மட்டுமே அல்ல. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் மருத்துவத் தொழில் நுட்பமானது எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களால் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும். மண் பானை, செங்கற்கள் செய்யும் குயவர்கள்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]திப்பு சுல்தானுடனான போரில் பிரிட்டிஷாரின் படையில் இருந்த ஒருவருடைய மூக்கு அறுபட்டுவிட்டது. ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் காளை வண்டியின் ஓட்டுநராக இருந்த அவர் பல மாதங்கள் சிதைந்த மூக்குடனே வசித்து வந்திருக்கிறார். அவருக்கு மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த குமார் என்ற ஒருவர் செயற்கை முறையில் மூக்கை ஒட்ட வைத்திருக்கிறார். அந்த அறுவை சிகிச்சையை அருகில் இருந்து பார்த்த பிரிட்டிஷ் மருத்துவர்கள் தாமஸ் க்ருஸ், ஜேம்ஸ் ஃபிண்ட்லே விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். உடைந்த சிலை அல்லது பானையின் பாகத்தை களி மண் பூசி ஒட்ட வைப்பதுபோல் வெகு அழகாக அவர்கள் ஒட்ட வைத்திருக்கிறார்கள். இந்தப் பாணியைப் பின்பற்றித்தான் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என்று உலகம் இன்று கொண்டாடும் ஜே.சி.கார்ப்யூ (J.C. Carpue, FRS) தன் முதல் அறுவை சிகிச்சையை 1815-ல் பிரிட்டனில் செய்திருக்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]மூக்குக்குத் தேவையான தோல் மற்றும் சதைப்பகுதியை நெற்றியில் இருந்து குயவர்கள் எடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு என மருத்துவ உலகம் இன்றும் கொண்டாடுகிறது. பொதுவாக சதை அதிகமாக இருக்கும் கால் அல்லது பிற பகுதியில் இருந்து எடுப்பதுதான் எளிது என்று தோன்றும். அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஷ்ருதர் கூட கன்னத்தில் இருந்து தோலை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறார். ஆனால், மூக்குக்குத் தேவையான தோலை நெற்றிப் பகுதியில் இருந்து எடுப்பதில் நிறத்தில் ஆரம்பித்து பல ஆதாயங்கள் இருப்பதை இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கண்டடைந்திருக்கிறது. அதுவோ இந்தியாவில் மிகவும் சர்வ சாதாரணமான பிரிவைச் சேர்ந்தவர்களால் எளிதில் கண்டடையப்பட்டிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]முதலில் அடிபட்ட மூக்கின் மேல் மெழுகால் ஆன மூக்கு ஒன்றை ஒட்ட வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அதன் விளிம்புகளை நெற்றி வரை பூசி மொழுகியிருக்கிறார்கள். பிறகு நெற்றியில் இருந்து தோலைப் பிய்த்து எடுக்காமல் கீழே இழுத்துக் கொண்டு வந்து மூக்கின் நடுவே சுவாசத்துக்கு மட்டும் இடைவெளி இருக்கும் வகையில் மூக்கின் மேலே பொருத்தியிருக்கிறார்கள். புதிய தோலானது பழைய தோலுடன் நன்கு ஒட்டும் வகையில் ஐந்தாறு இடங்களில் டெரா ஜபானிகா எனப்படும் பிசின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மருந்துகளும் போடப்படவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அந்த பிசின் நீக்கப்பட்டு நெய் தடவிய துணி போர்த்தப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து நீட்டிக் கொண்டிருக்கும் தோல் பகுதிகள் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாறு நாட்கள் நோயாளி படுத்த படுக்கையாகவே வைக்கப்படுகிறார். அதன் பிறகு, மூக்கில் துவாரம் சரியாக இருப்பதற்காக துணிச் சுருள்கள் வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் நெற்றியில் இருந்த தழும்பு காலப்போக்கில் மறைந்துபோய்விடுவதாகவும் ஜே.சி.கார்ப்யூ வியந்து பாராட்டியிருக்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாத பலசாலி ஒருவனை அவனுடைய எதிரிகள் வீழ்த்திய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன உடம்புக்கு முடியவில்லையா, மிகவும் சோர்வாக இருக்கிறீர்களே, முன்பு போல் கம்பீரம் இல்லையே என்று சொல்லிச் சொல்லியே அவனை உளவியல் ரீதியில் கலக்கமடைய வைத்து அதன் மூலம் அவனை நோய்க்குள் தள்ளிவிட்டார்களாம். இந்தியா அப்படியான ஒரு நிலையில்தான் இப்போது இருக்கிறது. செவி வழிச் செய்திகளாக, பாடல்களாக தலை முறை தலைமுறையாகக் கடந்து வந்திருக்கும் ஒரு அறிவானது அடுத்த தலைமுறைக்குப் போக முடியாதபடி தடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.[/size][/size]

[size=2]

http://www.tamilpaper.net/?p=6836[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.