Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலை ஒட்டுக்குழுவின் கையில் - மீண்டும் தமிழன் தலை நிமிர்வுக்கு புலம்பெயர்ந்தவர்கள் துணை புரிய வேண்டும்.

Featured Replies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்போது சிற்றூழியர்களுக்கும் கணனி உதவியாளர்களுக்குமான நேர்முகப்பரீட்சை நடந்து முடிந்துள்ளது. அதில் 156 பேர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வழமையில் நேர்முகப்பரீட்சைக்காக பல்கலைக்கழக பேரவை ஆட்களை நியமிக்கும். அவர்கள் நிர்வாக பொறுப்புக்களில் உள்ளவர்களும் கல்விப்புலத்தில் உள்ளவர்களும் பேரவை, மூதவை உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வழமை. இந்த நேர்முகப்பரீட்சைக்கு பீடாதிபதிகளான பேராசிரியர் வி.பி.சிவநாதன்,பேராசிரியர் வேல்நம்பி,பேராசிரியர் கந்தசாமி போன்ற பலர் நியமிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிவடைந்திருந்தது. இவர்கள் தெரிவு செய்த 34 பேரின் பெயர்களும் பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வருவது வழமை. வழமையாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பெயர் பட்டியல் நேர்முகத்தேர்வு முடிவடைந்ததும் வரும் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதே வழமை. ஆனால் இந்த முறை அவ்வாறு நடைபெறவில்லை. இதனை சமர்ப்பிக்க வேண்டிய பதிவாளர் அதனைச் செய்யவில்லை. இதனால் கடுப்பான பேராசிரியர்கள் தமது கண்டணத்தை தெரிவிக்க, பதிவாளர் குட்டை அவிட்டு விட்டார்.

அதாவது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தான் இந்தப் பட்டியலை பேரவையில் போட வேண்டாம் என்று சொன்னதாக பதிவாளர் அவிட்டு விட்டதும். இதனை சற்றும் எதிர்பாராத துணைவேந்தர் தன்னுடன் எதுவும் கதைக்கப்படவில்லையே என்று தனது நடுநிலைமையை நிரூபிக்க அமைச்சருக்கு பேரவைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போன் செய்து கேட்டிருக்கிறார்.

அமைச்சர் தான் மூக்கை நுழைத்ததை உறிதிப்படுத்த பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொண்டார். இதற்கிடையில் பேரவைக்கு டக்ளஸ் தேவானந்தாவால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர் சிறீபதி கடுப்பாகி பீடாதிபதிகளை கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார். ஏன் இவர் இப்படி கடுப்பானார் என்று விழித்துக்கொண்ட போது மேலும் பல விடயங்கள் வெளிவந்தன, தனது மகளுக்கு கணனி உதவியாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் டக்ளஸிடம் போட்டுக் கொடுத்து ஏனையவர்களின் நியமனத்துக்கான அங்கீகாரத்தையும் தடுத்தவர் இவர் தான் என்று அறியக்கிடைத்தது. இதன் பின் துணைவேந்தரையும் கெட்டவார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.

இதன் பின் உபவேந்தரின் வேண்டுதலுக்கு அமைய பீடாதிபதிகள் எல்லோருமாக ஈ.பி.டி.பி கட்சியின் அலுவலகத்துக்கு சென்று தங்களின் தெரிவு முறை சரியானது என்று விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு சிறீபதி பற்றியும் முறையிட்டுள்ளார்கள். இவை எவற்றையும் செவிடன் காதில் ஊதிய சங்காக டக்லஸ், சந்திரகுமார் ஒருவருக்கும் கேட்கவில்லை. அவர்களின் பிரச்சினையெல்லாம் சிறீபதியின் மகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் தாம் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு (அவர்கள் தகுதியானவர்களாக இல்லையென்றாலும்) அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இதில் இன்னொரு பிரச்னையென்னவென்றால் துணைவேந்தர் 34 பேருக்கான வெற்றிடம் இருக்கு என்று சொல்லவில்லை என்பதாகும். முதலில் 14 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்ததால் ஈ.பி.டி.பி 12 பேரின் பெயர்களைக் கொடுத்துள்ளது. மீதி இரண்டு பேரை நியமிக்கும் அதிகாரத்தை மட்டுமே துணை வேந்தருக்கு வழங்கியிருந்தது. ஆனால் துணை வேந்தர் மொத்தமாக இருந்த 34 பேருக்கான வெற்றிடத்தையும் நிரப்பியது தான் தற்போது அமைச்சருக்கு கடுப்பாகியுள்ளது. 34 வெற்றிடமிருந்தது என்று சொல்லியிருந்தால் தனது பட்டியலாக 30 தந்திருக்கலாமே என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் துணை வேந்தரை கடிந்து கொண்டாராம்.

இப்போ இங்கே எழுகின்ற விடயமென்னவென்றால். சுதந்திரமான செயற்பாட்டு கட்டமைப்புள்ள ஒரு உயர்கல்வி நிறுவனம் எவ்வாறு ஒரு அரசியல் கட்சியால் சீரழிக்கப்படுகிறது என்பதாகும். தம்மிடமுள்ள ஆயுதங்களால் கல்வியாளர்களை மிரட்டி அடிபணியவைத்து கீழ்த்தரமான அரசியலை சிறீபதி போன்றவர்களை வைத்து செய்து தமிழர்களுக்கு என்று இருக்கின்ற ஒரே கல்விச்சொத்தை சீரழிக்கிறார்கள். இதனை உலகத்தமிழர்கள் தடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களைவிட மிக மோசமான அரசியல் தலையீடு யாழ் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு என்ன காரணம்?

1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் மிகப்பெரிய இடம்பெயர்வைச் சந்தித்தது. அப்போது பேராசிரியர் குணரட்ணம் துணைவேந்தராக இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தையும் இடம்பெயர்த்தி கிளிநொச்சிக்கு கொண்டு சென்று அங்கு அதை இயக்கினார். இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு கொடியேற்ற வந்த அனுருத்த ரத்வத்தையிடமும் தேவானந்தாவையும் பிடித்து பாலசுந்தரம்பிள்ளை தற்காலிக துணைவேந்தராக வருகிறார்.பின்னர் நிரந்தர துணை வேந்தராக வந்து இரண்டு தடவைகள(06வருடங்கள்) நீடிச்சார். இவரது காலத்தில் தான் பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் வரத்தொடங்கியது.

இதன் பின் பேராசிரியர் சண்முகலிங்கத்தை டக்ளஸிடம் கொண்டு சென்று காலில்விழுந்து கும்பிடச்சொல்லி அவருக்கு துணைவேந்தர் பதவியை வாங்கிக்கொடுக்கிறார் பாலசுந்தரம் பிள்ளை. இதற்கு பின்னர் ரட்ண ஜீவன்கூல் துணைவேந்தராக மகிந்தவால் நியமிக்கப்பட போகிறார் என்று எதிர்பார்த்த போது பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை டக்ளஸின் காலில் விழவைத்து மகிந்தரின் மனதை மாத்துவதற்கு ஒரு குழுவை தயார் செய்து அவரிடம் அனுப்பி நீண்ட கஷ்டத்துக்குப்பிறகு பேராசிரியர் சண்முகலிங்கத்திற்கும் ரட்ணஜீவன்கூலுக்கும் பதவி போகாது தடுத்து பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்கு அந்தப்பதவியை டக்ளஸ் வாங்கிக் கொடுத்தார்.

கொழுப்பில் எந்தச் சொல்வாக்கும் இல்லாத வசந்தி அரசரட்ணம் டக்ளஸே தஞ்சமென்று இருந்து பதவியைப்பெற்றதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கட்சி அலுவலகமாக மாற்றமடையத் தொடங்கியது. அவ்வப்போது டக்ளஸடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு ஏற்ப நிர்வாகம் நடத்துபவராக அம்மையார் திகழ்கிறார். டக்ளஸ் தன்னால் முடிந்தவரை பெண்துணை வேந்தரை அவ்வப்போது மிரட்டி தனது கட்சி உறுப்பினர்களை, தகுதியில்லாதவர்களை பல்கலைக்கழக காவலாளிகளாகவும்,சிற்றூழியர்களாகவும் நியமிக்க ஆரம்பித்தார். இந்த விடயங்கள் மானிய ஆணைக்குழுவுக்கு போனால் சமாளிப்பதற்காக அவ்வப்போது எஸ.பி.திசநாயக்காவை வசந்தி அரசரட்ணத்தைக் கொண்டு யாழ்ப்பாணம் அழைத்து கவனிப்பது போல் கவனித்து அனுப்புகிறார்.

அதில் எஸ்.பி குளிர்ந்து எது நடந்தாலும் கண்டு கொள்வதில்லை. இதனால் சிறிபதியை தினமும் ஈ.பி.டி.பி வாகனத்தில் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி துணைவேந்தரை மூளைச்சலவை செய்கிறார்கள். எப்போதும் சிறிபதி துணைவேந்தர் அலுவலகத்தில் அமர்ந்திருந்து அங்கு வரும் பேராசிரியர்களை எள்ளி நகையாடுவது நடக்கிறது. இதனால் பேராசிரியர்கள் ,உத்தியோகஸ்தர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

சிறீபதிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டப்பெயர் `பன்னாடை’ என்பதாகும் .பன்னாடை எப்போதும் நல்லதை விட்டுவிட்டு கூடாததுகளை மட்டும் தாங்கி வைச்சிருக்கும். அதே போலத்தான் சிறீபதியும் நல்லதுகளை விட்டுட்டு கூடாததுகளை மட்டுமே கதைத்துக் கொண்டிருப்பதால் இந்த செல்லப்பபெயர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தில் சிறீபதிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை வேட்டியுடன் வரும் இவர் மிக மோசமான வேலையை செய்வதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விசனப்பட்டுக் கொள்கிறார்கள். துணைவேந்தருக்கு சிறீபதி கெட்ட வார்த்தைகளால் திட்டியதற்கு பீடாதிபதிகள் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சில பீடாதிபதிகள் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தமது பதவியை ராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது ஈ.பி.டி.பி தலையீடு காரணமாக பல்பலைக்கழகத்தை அதனது சுதந்திரத்துடன் இயக்க முடியவில்லை. ஒவ்வொரு விடயத்துக்கும் அவரின் அனுமதி பெறவேண்டும். பேரவை உறுப்பினர்கள் 13 பேர் டக்ளஸால் மூன்று வருடத்துக்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் மாதாந்தம் நடைபெறும் பேரவைக்கூட்டத்துக்கு முன் ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தில் கூட்டம் வைத்து என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் சொன்னது தொடர்பாகவே பேரவையில் முடிவுகள் எடுக்கப்படுகிறது.

சுயசிந்தனையுள்ள கல்வியாளர்கள் சுயமாக சிந்திக்க வேண்டிய விடயத்தை கல்வியறிவற்ற ஒரு அரசியல்வாதி தீர்மானிக்கின்ற கேடுகெட்ட நிலைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வந்துள்ளது. உலகம் போற்றிய பொறியியலாளரான துரைராஜா, பேராசிரியர் கைலாசபதி,பேராசிரியர் வித்தியானந்தன், ஆகியோர் துணை வேந்தர்களாக இருந்து தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த பல்கலைக் கழகம் இன்று ஒரு அரசியல் கட்சியின் ஆட்டத்துக்கு ஆடுவது மிகவும் கவலையானது.

இந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் தமிழன் தலை நிமிர்வுக்கானதாக மாற்றியமைக்க புலம்பெயர்ந்தவர்கள் துணை புரிய வேண்டும். தற்போது சிறீபதி தன்னை நிரந்தரமான பேரவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நச்சரிப்பதாகவும் இதற்கு அவர் ஆமா சொல்லியிருப்பதாகவும் அறியமுடிகிறது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முதலாவது பெண் துணைவேந்தர் என்ற பட்டத்தையும் முதலாவது முதுகெலும்பில்லாத துணை வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்று சீரழிந்த நிர்வாகத்தை நடத்திவருகின்றார். இதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு கீழ்தரமான அரசியலுக்கு பல்கலைக்கழகத்தை இட்டுச்செல்லாமல் தடுக்க வேண்டும் என்று சமூக அக்கறையாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

-அகிலன் செல்லத்துரை-

http://thaaitamil.com/?p=34470

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.