Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்!

07 அக்டோபர் 2012

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ சென்.தோமஸ் வித்தியாலத்திற்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

குண்டர் கும்பல், மஞ்ஜுல திலகரத்னவைத் தாக்கிவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்னர்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த நாட்களில் அரசாங்க உயர்மட்டத் தரப்பினரின் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

நீதிச் சவை ஆணைக்குழுவின் பணிகளுக்கு அதிகாரத்திலுள்ள தரப்பினர் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அவர் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது. இதுவே அரசாங்கத்தரப்பினர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை விமர்சிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல்

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலளார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மஞ்சுல திலகரட்ன n;காழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இம்பெற்றுள்ளது.

தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அண்மைக்காலமாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் இடையில் பனிப்போர் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்வாறான ஓர் பின்னணியில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83910/language/ta-IN/article.aspx

[size=4]நீதி துறையை தாக்கும் சிங்கள அரசின் தீதி அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இந்த சாவு மணிக்கு துணைபோகின்றார்.[/size]

[size=4]இவர் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் போகவும் செய்வதுடன் தனது சொந்த மக்களையும் கூட ஏமாற்றுகின்றார்.[/size]

சாட்டுகள் வைத்து பதவி நீக்கினால் உபயோகம் கிடையாது. இதைத்தான் சரத் சில்வாவில் கண்டது. இதனால் சிராணியை கொண்டுவந்தும் பலன் ஒன்றும் இல்லை. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். இதை மலக்கா சில்வா இராணுவ மேயரை வைத்து நிரூபித்திருந்தார்.

Edited by மல்லையூரான்

மஞ்சுள திலகரத்ன தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து சட்டத்தரணிகளும் நாளை பணிப்பகிஷ்கரிப்பு; எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

uni%20.jpgநீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலாளர் மஞ்சுள திலகரத்ன தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து சட்டத்தரணிகளும் நாளை திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள மஞ்சுல திலகரத்ன தற்போது

மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர்

விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் குறிபிட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளை அடுத்து அவர் பெரும்பாலும் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்படுவார் என தெரிவித்த அவர், இன்று காலை 9 மணியளவில் கல்கிஸ்ஸ ஹோட்டல் வீதியில் இந்த

தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்

http://www.pathivu.com/news/22275/57//d,article_full.aspx

நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று முற்றாக செயலிழப்பு

36c837341b49f2fa2de7e0c8b3defee4.jpg

நாட்டின் சகல நீதவான்களும், சட்டத்தரணிகளும் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலை கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் நீதிமன்ற செயற்ப்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து சட்டத்தரணிகள் சங்கங்கள் பணிப் புறக்கணிப்பை நாளைய தினமும் தொடரத் தீர்மானித்துள்ளன.

கல்கிஸ்ஸ பகுதியில் வேனில் சென்ற ஆயுததாரிகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். எனினும், இதுவரையில் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, மஞ்சுள திலகரட்ன சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 15ம் விடுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஊடகவியலாளர்கள் மஞ்சுள திலகரட்னவை சந்திக்க அனுமதியளிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இதேவேளை புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன நேற்றைய தினம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Edited by மல்லையூரான்

cartoon-08.10.2012.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.