Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன ஆயுதக் கொள்வனவில் சிறிலங்கா கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகக் கடற்பிரதேசமான வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கடற்சமரில் 700 படைத்துருப்புக்கள் தப்பியதையடுத்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை தீவிரம் காட்டுவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

இஸ்ரேலிய தயாரிப்பான டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள்தான் சிறிலங்காவின் கடற்படையின் இரத்த நாளமாகும். கடற்பிரதேசங்களை எந்நேரமும் கண்காணித்து வருகிறது.

இதுதவிர எம்.வி.பேர்ள்குரூஸ் போன்ற பாரிய கப்பல்களில் படையினரை ஏற்றிச் செல்ல பாதுகாப்பாகவும் இப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சயூரா போன்ற பாரிய கப்பல்கள் ஆழ்கடல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

சிறிலங்கா கடற்படையின் வலுவானதாக டோரா தாக்குதல்கள் படகுகள் உள்ளன. ஆனால் சிறிலங்காவின் டோராப் படகுகள் பழைய தயாரிப்பாகவும் குறைந்தபட்ச ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடியதுமாக இருக்கின்றன.

கடற்புலிகளின் படகுகளில் ஆயுதங்கள் இருந்தபோதும் கடலில் இருதரப்புக்கும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ மோதல் நடந்தால் கடற்படைக்கே பாரிய சேதம் ஏற்படுகின்றது.

டோராப் படகுகளில் 23 எம்.எம். ஆயுதங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. 2000 மீற்றர் வரை தூரம் சென்று இலக்கை அடையக் கூடியது இது. தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட இதே வகையான ஆயுதங்களை தமது கடற்கலங்களில் பொருத்தியுள்ளனர்.

23 எம்.எம்., 25 எம்.எம். மற்றும் 30 எம்.எம். ஆயுதங்களைப் பொருத்துவதற்கான சாத்தியங்களையும் டோராப் படகில் நாம் அனுமதிக்க வேண்டும். மேலும் இலகு மற்றும் கனரக ஆயுதங்களையும் அதில் பொருத்த வேண்டும். மேலும் சூப்பர் டோராப் படகுகளில் ஏவுகணைகளைப் பொருத்தக் கூடியதாகவும் அமைக்கலாம்.

1997 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படைப் படகில் 23 எம்.எம். ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முன்னதாக கடற்படையின் டோராப் படகில் 20 எம்.எம். ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அது 1,400 மீற்றர் வரை சென்று தாக்கக் கூடியது.

1997 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் 23 எம்.எம். ஆயுதங்களைப் பொருத்தியதைத் தொடர்ந்து கடற்படையினரும் அதைப் பொருத்தினர்.

இருப்பினும் 23 எம்.எம். ஆயுதங்கள் போதுமானவை அல்ல என்பதால் அதிக தூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய கடற்படை தளபதி பரிந்துரைத்தார்.

ஆனால் அவர் ஓய்வு பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் அவரது பரிந்துரைகளை பின்னாளில் கடற்படை தளபதியாகப் பொறுப்பேற்ற தயா சந்தகிரி மறு ஆய்வு செய்தார்.

சிறிலங்காவின் முப்படைத் தளபதியாக தற்போதும் தயா சந்தகிரி உள்ளார். கடற்படைக்கு 25 ஆண்டுகள் பழமையான் 30 எம்.எம். ஆயுதங்களை இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான முன்தொகை கொடுத்து பெற்றது குறித்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு கடற்படை தளபதி வசந்த கரன்னகொட அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இது தொடர்பிலான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக நீதிபதி நிமால் காமினி அமரதுங்க நியமிக்கப்பட்டார். இந்த அறிக்கை எதிர்வரும் ஜுலை மாதம் தாக்கல் செய்யப்படக் கூடும்.

டோராப் படகு ஆயுதங்களின் தரம் குறித்த சர்ச்சைகளால் தற்போது 23 எம்.எம். ஆயுதங்களே பாவிக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அரச படைகளை குறிப்பாக கடற்படையினரை தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி வருகின்றனர்

30 எம்.எம். ஆயுதங்களைக் கொள்வனவு செய்யாத வரையில் சிறிலங்கா கடற்படைக்கு பாரிய இழப்புகள்தான் ஏற்படும் என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாலை கடற்பிரதேசத்தில் கடந்த வாரம் இதுவே நடந்தது.

சாலை கடற்பிரதேசத்தில் நடந்த மோதலின் போது சிறிலங்கா கடற்படையின் டோராப் படகில் 30 எம்.எம். ஆயுதங்கள் இருந்திருந்தால் அந்த சமர் 30 நிமிடத்துக்குள்ளாகவே முடிவடைந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருக்கும்.

ஒரு தனிநபரின் செயற்பாட்டால் இந்த நாட்டினது பாதுகாப்பு எப்படி சீர்குலைந்து உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் படிப்பினைகளுக்குப் பின்னரும் நாம் சரியான ஆயுதங்களக் கொள்வனவு செய்யாவிட்டால் கடற்படைக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

700 படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்திருந்தால் அதற்கான பொறுப்பாளர் யார்?

ஆயுதக் கொள்வனவில் ஏற்படுகிற தாமதங்களால் மூத்த கடற்படை அதிகாரிகள் கடும் விரக்தியில் உள்ளனர். கடற்படையினது தார்மீக மரியாதை சிதைக்கப்படுகிறது.

இதனிடையே கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா இராணுவத்துக்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தமை குறித்த விசாரணைக்கும் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணை ஆணையத்துக்கு நீதிபதி சிகிரானி திலகவர்த்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் நிசங்க உதலகம மற்றும் நிமல் ஈ. திசநாயக்க ஆகியோர் விசாரணைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற அரச அதிகாரி எட்மண்ட் ஜயசூர்ய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆணைக் குழுவின் அலுவலகம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நினைவு மண்டத்தில் அறை எண் 9 இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 எம்.எம். ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த 30 எம்.எம். ஆயுதங்களானது 3 ஆயிரம் மீற்றர் வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடியது. மிகவும் பாதுகாப்பான நிலையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகளை சிறிலங்கா கடற்படையினரால் தாக்குதல் நடத்த முடியும் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.