Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிச்சயமாகிவிட்ட நாலாம் கட்ட ஈழப்போர்

Featured Replies

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் அமைதிச் சூழல் ஓரளவு துளிவிட்டபோதும், உருப்படியான முன்னேற்றத்தை அது அடையவில்லை. இத்தகையதொரு சூழல் ரணில் ஆட்சிக் காலத்தில் நிலவியது. ரணில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் சந்திரிகா அம்மையாரின் கைகளிலிருந்தபோது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்காது போர் நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்துகின்ற அளவிற்குப் போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன.

அவை கைச்சாத்திடப்பட்டன. அவ்வாறான ஒரு நிலையில் அரச தரப்பு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை மட்டும் நடாத்தி விட்டு நியாயப்படுத்த முடியாது. மாறாக விடுதலைப்புலிகளும் தாக்குதல் நடத்தலாம்.

கடந்த வாரம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் கிளிநொச்சி சென்றிருந்த போது அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் இதனை தெளிவுபடுத்தியிருந்தார். எனவே, படைத் தரப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதை இது தெளிவாகக் கோடு காட்டுகிறது.

இது மாத்திரமின்றி கடந்த 11ம் திகதி வெற்றிலைக் கேணி தமிழீழ கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் தமிழீழ கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நிகழாது இருப்பதனால் கிழக்கிலிருந்து தென்தமிழீழ தளபதிகள் வன்னி செல்வதற்குரிய பயண ஒழுங்குகளைக் செய்து கொடுக்க வேண்டும்.

அது தவறுமிடத்து படையினரின் சுதந்திரமான நடமாட்டத்தை ஒருபோதும் விடுதலைப்புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் தமிழ்ச்செல்வன் கண்காணிப்புகுழுத் தலைவரிடம் தெளிவுபடுத்தியிருந்தார். அதேவேளை தமிழீழ கடற்படையின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் எதிர்காலத்தில் மிக உக்கிரமானதாக மாற இடமுண்டு. அவை போர்நிறுத்த உடன்பாடு இருக்கிறதா என்பதை கேள்விக் குறியாக்கும்.

போர்நிறுத்த உடன்பாட்டின் நோக்கம் அதனை அடிப்படையாக வைத்து தீர்வுகாணும் விடயங்கள் என்பன தொலை தூரத்துக்குச் சென்ற விடயமாகி விட்டது. சாதாரணமாக விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கான பயண ஏற்பாடுகளை வழங்குவதிலே குரோதப் போக்கைக் காட்டி வரும் சிறிலங்கா அரசுடன் தமிழ் மக்களின் உயிர்களை பறித்து இரத்தத்தை ருசிக்கும் சிங்கள இனவெறி அரச தலைமையுடன் சமாதானம், சமாதானம் எனப் பேசுவதால் எவ்வித பயனுமேற்படப் போவதில்லை என்பது உறுதியாக்கப்பட்ட நிலையில் நிச்சயம் நான்காம் கட்ட ஈழப் போரை எதிர் கொள்வது என்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது.

எனவே, விரைவாக நாலாம் கட்ட போர் மூளப்போகிறதா? என்ற கேள்விக்கு மூண்டு விட்டது என்பதுதான் கள நிலவரம் காட்டும் தெளிவான செய்தி

---------------------

மட்டக்களப்பு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.