Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைவிடப்படுகிறது அல்லைப்பிட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அல்லைப்பிட்டி மக்கள் தமது ஊரிலிருந்து இடம்பெயர்ந்து 15 பாரவுூர்திகளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இவ்வாறு பாரவுூர்திகளில் இடம்பெயரும் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் அவர்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான UNICEF,UNHCR GTZ ,கரித்தாஸ், ஆகியனவும் வழித்துணை வழங்கியிருக்கின்றனர்.

இடம் பெயரும் மக்களை வழிமறித்த ஊர்காவற்துறைப்பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள 512 வது படைப்பிரிவிற்கு இந்த இடப்பெயர்வு குறித்து அறிவித்ததை அடுத்து அங்கு வந்த நு}ற்றுக்கணக்கான இராணுவத்தினர் இடம்பெயரும் மக்கள் மீது விசாரணைகளையும், சோதனைக் கெடுபிடிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த இடப்பெயர்வு குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தகவல்:சங்கதி

20.51allapiddy.jpg

20.52allapiddy.jpg

20.53allapiddy.jpg

20.54allapiddy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாவந்துறையில் தரித்து நிற்கும் அல்லைப்பிட்டி மக்கள்.

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியிலிருந்து இன்று இடம்பெயர்ந்த மக்கள் தமது பாதுகாப்புக் கருதி வன்னிப்பகுதிக்கே செல்லப்போவதாக சிறீலங்காப் படையினருக்கும் பொலீஸாருக்கும் தெரிவி;த்திருக்கிறார்கள்.

ஊர்காவற்துறை, யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்திலிருந்து வந்திருந்த 30 வரையான சிறீலங்கா பொலீஸார் மக்கள் இடம்பெயர்வதையும், வன்னிக்கு செல்வதை தடுப்பதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போதே அவர்களுக்கு அல்லைப்பிட்டி மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

15 பாரவுூர்திகளில் தமது உடமைகளுடன் இடம்பெயர்ந்த 80 குடும்பங்களில் 42 குடும்பங்கள் நாவாந்துறை சென் நிக்கிளஸ் தேவாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியிருக்க மிகுதி 38 குடும்பங்களும் நேரடியாக வன்னிக்கே பயணிக்கிறார்கள்.

இவ்வாறு பயணித்த மக்களை யாழ் ஆஸ்பத்திரிவீதி வேம்படிச் சந்தியில் வழிமறித்த 512 வது படையனிப்படையினர் அவர்களை கொளுத்தும் வெய்யிலில் நிறுத்தி வைத்து பாரவுூர்திகளில் ஏற்பட்ட பொருட்களை இறக்கித்தீவிரமாகச் சேதனையிட்டனர் இதன்போது பெண்கள் குழந்தைகள் கூட நடுத்தெருவில் வெய்யிலில் நின்றதைக் காணக்கூடியாதாகவிருந்தது.

விடுதலைப்புலிகள் மீது ஜரோப்பிய நாடாளுமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானமும் குறித்து நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளுக்குப் பொறுப்பானவருமான எரிக்ஹொல்கெய்மும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப்கென்றிசனும் கவலை தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுக்களை தீவீரமாகப் பாதிக்ககூடியதும் இந்தத் தீர்மானமானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும் என எரிக்ஹொல்கெய்ம் கருத்துத் தெரிவித்துள்ளாh

-சங்கதி-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப்பிட்டியிலிருந்து நான் உட்பட அனைவரும் வெளியேறிவிட்டோம்" - பங்குத்தந்தை வண. அமல்ராஜ் அடிகளார்

அல்லைப்பிட்டிப் பங்கிலே பதியப்பட்டிருந்த 284 குடும்பங்களும் - நான் உட்பட - இன்று அல்லைப்பிட்டியில் இருந்து வெளியேறிவிட்டோம். அவர்களின் இலக்கு பாதுகாப்புத்தேடி வன்னிக்கு செல்வதாகும்” என அல்லைப்பிட்டி பங்குத்தந்தை வண. அமல்ராஜ் அடிகளார் சங்கதிக்குத் தெரிவித்தார்.

“இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள,; முகமாலைச்சோதனைச் சாவடியைச் சென்றடையப் போதுமான நேரம் இன்மையால் யாழ்ப்பாணத்தில் அடைக்கலமாதா ஆலயம், நாவாந்துறை புனித நிக்கிலஸ் தேவாயலம் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். நாளைக் காலை அவர்கள் வன்னிக்குச் செல்வதற்கான தமது பயணத்தைத் தொடரவுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

sankathi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லைப்பிட்டியிலிருந்து வன்னிக்கு நான்கைந்து பாரவூர்திகளில் மக்கள் வந்து சேர்ந்துள்ளார்கள். அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பொறுப்பேற்று தற்காலிகமாக கிளிநொச்சியில் தங்க வைத்துள்ளது. நாளை அம் மக்கள் விரும்பிய இடங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் குடியமர்த்தப்படவிருக்கிறார

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அல்லைப்பிட்டி மக்கள் மட்டுமல்ல, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது. ஒவ்வொரு ஊரிலும் இப்படியான கொலைகள் நடந்த பின்பு பாதுகாப்பைத் தேடலாம் என்று உயிர்களை இழக்காமல், இதையே பாடமாக வைத்து உங்களின் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.