Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழினத்தைக் காக்க சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை அவசியம்: கனேடிய எதிர்கட்சிப் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Transitional_150news.jpg

முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இன்றைய இலங்கைத் தீவின் சூழலில் ஈழத்தமிழர்களின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென கனேடிய எதிர்கட்சிப் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிட்சபைஈசன் பிரதான எதிக்கட்சியான NDP கட்சியின் வெளிவிவகார விமர்சகர் Paul Dewar மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Dan Harris MP for Sc. Southwest- NDP ஆகியோர் கனேடியத் தமிழர் அமைப்புகளுடனான சந்திபொன்றினை நடத்தியிருந்தனர்.

natham-news-161012-001.jpg

இச்சந்திப்பில் பங்கெடுத்துக் கொண்ட பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மேற்குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கள அரசினால் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாக நில அபகரிப்பு மற்றும் மொழி கலாச்சாரச் சிதைப்பு இபொருளாதார வளச் சுரண்டல்கள் உட்பட்ட இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இசந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபையின் தலைவி உஷா சிறீஸ்கந்தராஜா மற்றும் தமிழ்கலைகள் பாரம்பரிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வின் மகாலிங்கம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

சிறிலங்காவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் சர்வதேச மாநாட்டினை புறக்கணிப்பது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த மாநாட்டினை புறக்கணிப்பதற்கு கனேடிய அனைத்துகட்சிகளது ஒப்புதலையும் பெறச்செயலாற்றல் சிறிலங்கா தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையினை நடைபெறுவதற்கான அழுத்தத்தினை பிரயோகித்தல் மற்றும் ஈழத்தமிழினத்தின் சமூக அரசியல் பண்பாட்டு பொருளாதார ஆகியவற்றின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை உருவாக்க உதவுதல் போன்ற வியடங்களுக்கு கனடாவின் கட்சியின் முழுமையான பங்களிப்பினை எதிர்பார்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் வலியுறுத்துப்பட்டுள்ளது.

இன அழிப்பைத் தடுப்பதற்கும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்குமான கனேடிய சர்வகட்சிக் குழுவினரை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு நா.த.அரசாங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கபட்ட கோரிக்கை இசந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகவுள்ளது.

இசந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நா.த.அரசாங்கத்தினை துணை அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்கள் மூன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக ஆர்வமாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை செவிடுத்தமை மிகுந்த நம்பிக்கையினை தந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு இவ்வாறான சந்திப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.