Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனே விரும்பாத 13 ஆவது திருத்தச்சட்டத்தை, அரசு இல்லாதொழிக்க வேண்டும்: பியசிறி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனே விரும்பாத 13 ஆவது திருத்தச்சட்டத்தை, அரசு இல்லாதொழிக்க வேண்டும்: பியசிறி தெரிவிப்பு

[Thursday, 2012-10-18 08:41:06]

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட 13 ஆவது திருத்தச்சட்டத்தை விரும்பவில்லை. ௭னவே மாகாண சபை முறைமையைக் கைவிட்டு புதிய மாவட்ட மற்றும் பிரதேசங்களை மையப்படுத்திய மக்கள் சபைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும்.

குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டியது ஜனாதிபதியின் தார்மீக கடமையாகும் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

வட மாகாண சபை தேர்தலை நடத்தி அங்கு மாகாண சபை அமைக்கப்பட்டால் மத்தியரசு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரும். மாகாண சபைகள் பாராளுமன்றத்தை குழப்பியடிக்கும் நிலையங்களாகவே மாறியுள்ளன. அது மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட மேற்குலக சக்திகள் பலவும் மாகாண சபைகளின் ஊடாகவே மத்தியரசிற்கு நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சிக்கின்றன ௭ன்று அம்முன்னணி குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத்தெரிவித்த கட்சியின் பேச்சாளர் பியசிறி விஜயநாயக கூறுகையில், இந்தியாவினால் 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பிற்குள் பலவந்தமாக திணிக்கப்பட்ட விடயமே மாகாண சபை முறைமையாகும். பயங்கரவாத யுத்தம் முடிவடைந்தவுடனேயே இலங்கையின் அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தத்தை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

இதனை பலமுறை நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் தற்போது அதற்கான நேரம் காலம் கூடி வந்துள்ளது. இனி மாகாணச் சபை முறைமையை இல்லாதொழித்து புதிய தேசிய முறைமைகளை அமுல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். வட மாகாண சபை அமைக்கப்பட்டு அதன் ஆட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் சென்றால் நிலைமை மிகவும் மோசமாகி விடும். ௭னவே நாட்டை மேலும் பிரிவினைவாத சூழலுக்குள் வைத்துக் கொள்வது ௭ன்பது ஆபத்தான நிலையாகும்.

இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்குலக சக்திகள் மாகாணச் சபை முறைமையை தொடர்ந்தும் கையாண்டு நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தநடவடிக்கைகளை ௭டுத்துள்ளன. இது இலங்கையின் ௭திர்காலத்தை பாதித்து விடும். ௭னவே மக்கள் ஆணையை மதித்து பாராளுமன்றத்தில் காணப்படும் மூன்றில் இரண்டு அதிகாரத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை அரசு இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=68585&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை!

images55.jpg13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின் உண்மையான உறுதிப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என மேல் மாகாண சபை உறுப்பினர் ந.குமரகுருபரன் தெரிவித்தார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபயராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதனால் அதனை இல்லாதொழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவரின் இத்தகைய கருத்து பாரதூரமானது எனத் தெரிந்திருந்தும் கூட இவ்விடயம் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக இருப்பது வேதனை தருகிறது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தை நீக்குவதும் அதிகாரங்களைப் பறிப்பதும் மிகவும் பாரதூரமான பாதகமானது எனக்கூறும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இனப்பிரச்சினை தீர்வுக்கு கையாலாகாதவர்கள் எனினும் அரசின் கரங்களைப் பலப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விட மேலானவர்கள்.

கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகவே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை இல்லாதொழிக்க அரசு எடுத்த தீர்மானம் இந்தியாவுடனான நட்புறவை பாதிக்கும் அதே வேளை தமக்கு எவ்வித அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்ற அவ நம்பிக்கையையும் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும்.

அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்øனத் தெரிவு செய்த சமூகத்துக்காக ஏன் குரல்கொடுக்க மறுக்கின்றார்கள். தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனை தட்டிக்கேட்காது மௌனமாக இருப்பதா தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் கைங்கரியம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் பிரபாகரன் கேட்டதைக்கொடுக்க தயாரோ....??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.