Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்ட வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு.

Featured Replies

குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்.ஆர்.பி.ஏ) பிரிவு 34 பற்றிய மேன்முறையீட்டு வழக்கு இன்று கனடிய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேற்படி வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு செய்தருந்தது:

இன்று அக்றேய்றா (Agraira) என்பவர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னேற்பாடு அமைச்சர் அவர்கட்கு எதிரான மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஒரு முக்கிய வழக்கு. இதில் தலையீடு செய்யும் தகுதியை உச்ச நீதிமன்றம் கனடிய தமிழர் பேரவை (கதபே-CTC) க்கு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்ஆர்பிஏ-IRPA) பிரிவு 34 பிரிவு பற்றியது. இது கனடிய தமிழர்களுக்கு முக்கியமானது. காரணம் பல தமிழர்கள் ஏதிலிகளாக கனடாவால் ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று காணப்பட்டுள்ளார்கள்.

இன்றுள்ள நிலையில் குடிவரவு மற்றம் ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 மிகவும் விசாலமானது. ‘உறுப்பினர்’ என்ற சொல்லின் கட்டுப்பாடற்ற பொருள்விளக்கம் எந்த வன்முறையிலும் ஈடுபடாத ஒருவரை அவர் ஏதாவதொரு சம்பவத்தில் எடுத்துக்காட்டாக பன்முகப்பட்ட அமைப்பின் மனிதாபிமான நடவடிக்கையில் அதன் கிளை ஒன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பின் அப்படிப்பட்டவர்களை அது உள்ளடக்குகிறது.

பிரிவு 34(2) அப்படிப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்தாலும் அமைச்சு மிக அரிதாகவே அப்படிப்பட்டவர்களுக்கு – அவர்கள் கனடாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் – விதி விலக்கு வழங்குகிறது. இதனால் ஒருவர் ‘பயங்கரவாதி’ என முத்திரை குத்தப்பட்டால் அதனை மாற்றுவதற்கு பயனுள்ள பொறிமுறை இல்லை.

எடுத்துக்காட்டாக மறைந்த யோசேப் பரராசசிங்கம் அவர்களுடைய ஏதிலிக் கோரிக்கை அவரது கணவர் வி.புலிகளோடு உறவு வைத்திருந்த ஒரு கட்சியின் உறுப்பினர் என்பதால் நிராகரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் கதபே இந்த மேன்முறையீட்டின் பெறுபேறு தொடர்பாக ஆழமான கரிசனை கொண்டுள்ளது. காரணம் அதன் பெறுபேறு கனடிய தமிழர்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

‘எமது சமூகத்தோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்ததன் பலனாக ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 தமிழர்களுக்குப் பயன்படுத்தும் போது அதன் பொருள்விளக்கம் மற்றும் அதன் பயன்படுத்தல் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கலாம்’ என கதபே இன் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் ‘குகுடிவரவு மற்றும் ஏதிலி முறைமைக்கு முகம் கொடுக்கும் தமிழர்கள் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்படுகிறார்கள். அதன் போது அந்த முத்திரையில் இருந்து தப்புவதற்கு உண்மையாகத் தகுதியுடையவர்களுக்கு விருப்புரிமை அடிப்படையில் விதிவிலக்குக் கிடையாது.

கதபே இன் சார்பாக பிரபல சட்டத்தரணி பாபரா யக்மன் (Barbara Jackman) மற்றும் ஹடயற் நசாமி (Hadayt Nazami) வாதாடுகிறார்கள்.

குடிவரவு மற்றம் ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 இன் கீழ் அமைச்சருக்கு இருக்கும் விருப்புரிமை மிக தாராளமான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாதவர்கள் தங்களது ஏதிலித் தகைமையை முறைப்படுத்தி அமைதியாக வாழ அனுமதிக்கப் பட வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

தொடர்பு: டேவிட் பூபாலபிள்ளை – கனடிய தமிழர் பேரவை 416 -240 0078.

http://thaaitamil.com/?p=35868

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.