Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது திருத்தத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள போர்! (சமகால அரசியல்)

Featured Replies

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய உடனடியாகவே அதிரடியான சில நகர்வுகளை கொழும்பு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலின் மூலம் தமிழர்களுக்கு எதனையும் வழங்க அரசாங்கம் தயாராகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவே இது நோக்கப்படுகின்றது.[/size]

[size=4]சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில், கோதாபாயவிடமிருந்து வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பு இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் நியாயமான சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. கோதாபாய ராஜபக்ஷ ஒரு அரசியல் தலைவரல்ல. அவர் ஒரு அதிகாரி. இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தகமை அவரிடமில்லை என யாரும் நினைக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் யார்த்தம் அதுவல்ல! தீர்மானங்களை எடுப்பதில் சக்திவாய்ந்தவர்களாக இலங்கை அரசிலுள்ள மூவரில் அவர் ஒருவர். அதனால், அவரது கருத்தை புறக்கணித்துவிட முடியாது. [/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இலங்கை தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் வரலாம் என்பதை எமது கடந்த கட்டுரையிலும் பார்த்தோம். இந்தியத் தரப்பின் அணுகுமுறையில் ஏற்படக்கூடிய மாற்றம் ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையில் புதிய திருப்பம் ஒன்றை பெற்றுத்தரும் வகையில் அமைந்திருக்காது என்றாலும் கூட, கூட்டமைப்பினருடனான சந்திப்பில் கொழும்புக்கான சில மறைமுகமான எச்சரிக்கைகளை டில்லி கொடுத்திருந்தது. "பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு" என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டிருப்பது இவ்விடயத்தில் கவனிக்கத்தக்கது. அதனைத்தான் தமக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக கூட்டமைப்பினர் காட்டிக்கொள்கின்றார்கள். [/size]

[size=4]தமிழர்களுக்கு கௌரவமான முறையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது வலியுறுத்தியிருந்த மன்மோகன் சிங், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இந்தியா செயற்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதேவேளையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வதற்கான அழுத்தத்தையே புதுடில்லி கொடுக்கும் எனவும், கொழும்பு திரும்பும் போது தெரிவுக்குழுவுக்குச் செல்வதற்கான தயார் நிலையிலேயே கூட்டமைப்பு வரும் எனவும்தான் மகிந்த அரசு எதிர்பார்த்தது. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவற்றைச் சமாளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் மகிந்த தரப்பினர் கணக்குப் போட்டிருந்தார்கள். இருந்தபோதிலும், இந்த நிலைமைகள் முற்றாக மாற்றமடைந்திருந்தமையும் கொழும்புக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. [/size]

[size=4]அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாதொழிக்க வேண்டும் என கோதாபாய ராஜபக்ஷ அதிரடியாக அறிவித்திருந்தமையின் பின்னணி இதுதான். 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான போரை கோதாபாய இப்போது ஆரம்பித்திருப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. [/size]

[size=4]அதிகாரப்பரவலாக்கலைப் பொறுத்தவரையில் அதற்காக இன்றுள்ள ஒரேயொரு அடிப்படை 13 ஆவது திருத்தச்சட்டமூலம்தான். இனநெருக்கடிக்கான ஒரு முழுமையான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தமிழர் தரப்பு ஏற்றுக்கொண்டிருக்கவில்லையென்ற போதிலும், அதனை முழுமையாக நிராகரிக்கவும் அவர்கள் தயாராகவில்லை. இனநெருக்கடித் தீர்வுக்கான சில அடிப்படைகளை அது கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம். அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற கருத்தே தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது. [/size]

[size=4]கோதாபாய ராஜபக்ஷ மட்டுமன்றி ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற சிங்களத் தேசியவாதக் கட்சிகள் கூட மாகாண சபை முறையும், அதற்குக் காரணமாக இருந்த 13 ஆவது திருத்தச் சட்டமூலமும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் பெற்றுக்கொள்ள முயன்றதை இந்தச் சட்டமூலம் சும்மா பெற்றுக்கொடுத்துவிடும் எனவும் ஹெல உறுமய தெரிவித்துவருகின்றது. இதன்மூலம் நாடு பிரிவினையை நோக்கிச் செல்லக்கூடிய அபாயம் உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய பிரச்சாரம் செய்து வருவதுடன், இதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் தீர்மானித்திருக்கின்றது. [/size]

[size=4]இதனைவிட அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மாகாண சபைத் திட்டம் நாட்டுக்கு ஆபத்தானது என்பதை விளக்கும் முகமாக தேசிய ரீதியில் 'அறிவூட்டும்" திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன அரசாங்கத்தில் இணைந்திருக்கும் கட்சிகள் என்பதுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய கட்சிகளாகவும் உள்ளன. மாகாண சபைத் திட்டம் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால் அதனை இல்லாதொழிக்க வேண்டும் என இவர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்களுக்கு அரசாங்கத்தின் உயர் மட்ட ஆதரவு உள்ளது. [/size]

[size=4]தமிழ்ப் போராளிகளின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்துக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டதுதான் மாகாண சபைத் திட்டமாகும். அதாவது, பிரிவினைக்கான மாற்றுத்திட்டமாக இது முன்வைக்கப்பட்டது என்பதுடன், அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றுக்கான அடிப்படையாகவும் இதுவே உள்ளது. ஆனால், இந்தத் தீர்வையே பிரிவினைக்கு வழிவகுத்துவிடும் எனக் கூறி இல்லாதொழிக்க முற்படும் இனவாதிகளிடமிருந்து நாம் எவ்வாறான ஒரு தர்வை எதிர்பார்க்க முடியும்? [/size]

[size=4]போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்குவதற்கு இருக்கக்கூடிய வழிகள் அனைத்தையும் மூடிவிடுவதற்கு இனவாத சக்திகள் முற்பட்டிருப்பதைத்தான் இதன் மூலமாக உணரக்கூடியதாக இருக்கின்றது. [/size]

[size=4]13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டமைக்கு மற்றொரு காரணமும் உள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசாங்கத்தினால் விரும்பிக்கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் இந்தியாவின் அழுத்தங்களால் கொண்டுவரப்பட்டதுதான் இது. இது நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்தே இதனை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளைத்தான் அரசு முன்னெடுத்தது. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டன. கிழக்கில் தமக்கு சார்பான பொம்மை அரசு ஒன்றை அமைப்பதில் ஆட்சியாளர்கள் வெற்றிபெற்றார்கள். மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் போன்ற அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் மறைமுகமான தடைகள் போடப்பட்டன. [/size]

[size=4]இவை அனைத்துக்கும் மேலாக திவிநெகும என்ற சட்டமூலத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய நிதி தொடர்பான அதிகாரங்களைப் பறித் தெடுப்பதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. [/size]

[size=4]வடமாகாணத்துக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் நிலையில்தான் மாகாண சபை முறையை ஒழித்தல், அல்லது அவற்றைச் செல்லாக்காசாக்குதல் என்ற வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது. போர் முடிவடைந்த பின்னரும் மூன்றரை வருட காலமாக வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்துவதில் அரசாங்கம் வெற்றி பெற்றது. இனிமேலும் காலம்கடத்த முடியாது என்ற நிலையில்தான் இப்போது மாகாண சபைக்கு எதிரான போரை அரசு தீவிரப்படுத்தியிருக்கின்றது. [/size]

[size=4]வடமாகாணத்தில் நடைபெறக்கூடிய தேர்தல் ஒன்றில் தம்மால் வெற்றிபெற முடியாது என்பது அரசுக்குத் தெரியும். ஏனைய மாகாணங்களைப் போல ஒரு பொம்மை அரசாங்கத்தை அங்கு அமைக்க முடியாது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். வடக்கில் அமையக்கூடிய ஒரு மாகாண சபை தமக்கு தலையிடியாக அமையும் என்ற அச்சம் அரசுக்கு உள்ளது. அதனால், வடக்கு மாகாண சபை அமைக்கப்பட முன்னர் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க வேண்டும் அல்லது மாகாணசபையை செல்லாக்காசாக்கிவிட வேண்டும் என்ற வகையில் அரசு செயற்படத் தொடங்கியிருக்கின்றது.[/size]

[size=4]13 ஆவது திருத்தம் தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் புதுடில்லிக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இராஜதந்திர நடைமுறைகளில் இந்தியா தன்னுடைய சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது இந்தியா மற்றும் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுப்பதாக அமையும்.[/size]

[size=4]- கொழும்பிலிருந்து தமிழ் லீடருக்காக பார்த்தீபன்.[/size]

http://www.tamilleader.com/mukiaya/6964-13-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.