Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெஜிங் வழக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தோல்வி

Featured Replies

60 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான ஹெஜிங் வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

[size=3][size=4]இது தொடர்பாக அமெரிக்க டொய்ஷ் வங்கிக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இதன் பிரகாரம் 60.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் வட்டி என்பவற்றை அந்த வங்கிக்கு செலுத்தவேண்டும் என்றும் வழக்குத் தீர்ப்பை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]ஹெஜின் உடன்படிக்கைக்கு அமைவாக 460 மில்லியின் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொடுப்பனவை செலுத்தாமை தொடர்பில் ஸ்டேன்டர்ட் சார்ட்டட், சிடி குரூப் மற்றும் டொய்ஷ் ஆகிய வங்கிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.[/size][/size]

http://newsfirst.lk/...amil/node/16836

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிராக மேன்முறையீடு:அரசாங்கம்[/size]

[size=4]டொச் வங்கிக்கு எதிரான ஹெஜிங் வழக்கு குறித்து அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந் தெரிவித்தார்.

மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை சட்ட மாஅதிபர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டொச் வங்கியுடனான ஹெஜிங் உடன்படிக்கை மீறப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் விசாரித்தது.

அந்த மத்தியஸ்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இலங்கைக்கு சார்பாகவும் மற்றைய இரண்டு நீதிபதிகளும் எதிராகவும் கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

இதற்கமைய வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை ஆட்சேபித்து மேற்முறையீடு செய்வதற்குரிய வழிவகைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டொச் வங்கிக்கு எதிராக ஹெஜிங் வழக்கில் அந்த வங்கிக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சி.பி.சி) 60 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டுமென அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்தியஸ்த நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

உரிய நேரத்தில் கடனை செலுத்தாமல் விட்டமைக்கான வட்டியுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அக்கடனை செலுத்தவேண்டியிருக்குமென அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை இது எங்களுக்கு எதிரான தீர்ப்பாகும் நாம், இந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றி யோசித்து வருகிறோம் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

2007 இல் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துகொண்டிருந்தபோது வங்கிகளிடம் இழப்பீடு பெறும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/51909-2012-11-04-08-32-56.html

  • தொடங்கியவர்

[size=6]மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு[/size]

[size=4]மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரமிட் கொடுக்கல் வாங்கல், ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல், கிரேக்க பிணப்பத்திரங்கள் கொள்வனவு, தி பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேசிய சேமிப்பு வங்கி கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுடன் மத்திய வங்கியின் ஆளுனருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அனைத்து மோசடிகளிலும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1452

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.