Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் 99 நாடுகளில் 80 வீதமானவை எமக்கே ஆதரவு: சமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் தொடர்பாக ஜெனிவாவில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 99 நாடுகளில் 80 சதவீதமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளோம்.

30 வருட காலம் நெருக்கடியை சந்தித்த இலங்கை ஒரே நாளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனினும் நாம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரும் ஐ.நா.வுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான 14 ஆவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பல்வேறு விதந்துரைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு மிகவும் சாதகமான சூழலே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=1436

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்

america.jpg

உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக இணைந்து கடும் தாக்குதல் நடத்தியதால் நேற்றைய ஜெனிவா தொடர் அரசுக்கு அக்கினிப்பரீட்சையாக அமைந்தது.

குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களைக் கையிலெடுத்தே மேற்படி நாடுகள் இலங்கை மீது கேள்விக் கணைகளை ஏவின.

அத்துடன், கடுமையான சொற்போரை சமாளிப்பதற்குஇலங்கை அரசதரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதால் நேற்றைய ஜெனிவாத் தொடர் போர்க்களம்போல் காட்சியளித்தது.

அதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்க கடும் கண்டனத்தை வெளியிட்டது.

நேற்றைய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெனிவாவுக்கான அமெரிக்கப் தூதுவர் ,பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டு வந்திருக்கும் குற்றப்பிரேரணை மூலம் ,இலங்கை அரசு நீதித்துறையில் தலையிட்டுள்ளதென்றும் குற்றம்சாட்டியது.

இலங்கையின் மீள்குடியேற்றம் ,கட்டமைப்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடும் கவலை கொண்டிருப்பதாகவும், அளிக்கப்பட வாக்குறுதிகளையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம்,வடக்கு கிழக்கில் படைக் குறைப்பு,தேசியப் பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு தீர்வு,துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதக் களைவு ஆகிய விடயங்களை உடனடியாக இலங்கை அரசு செய்ய வேண்டுமென்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்.

பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க கடும் அதிருப்தியை வெளியிடுவதாக குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,இது அரசு அப்பட்டமாக நீதித்துறையில் தலையிடுவதையே காட்டுகின்றதென குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கனடாவுக்கான ஜெனீவாத் தூதுவர் ,இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தல் விடயத்தில் கனடா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும், இலங்கையின் வட மாகாணத்தில் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கையின் கடமை என்றும் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜெனீவாவில் உள்ள இந்தியாவுக்கானத் தூதுவர், பதின்மூன்றாம் திருத்தத்தின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பென்று குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம்,மனித உரிமைகளின் மேம்பாடு குறித்து இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய தூதுவர்,வடமாகாணத் தேர்தலை 2013 ஆம் ஆண்டுக்குள் இலங்கை நடத்துமென்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுமென்று இந்தியா நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் இங்கு கருத்து வெளியிட்ட ஜேர்மன் தூதுவர்,பிரதம நீதியரசருக்கேதிரான குற்றப்பிரேரணை குறித்து ஜேர்மன் அரசு கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மீளாய்வுக் கூட்டத்தின் இடைநடுவே கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க ,பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டுவர இலங்கை அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் இருப்பதாகவும். அதன்படி பல ஆதாரங்களுடன் அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நூற்றி பதினெட்டு பேர் கையொப்பமிட்டு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/News_More.php?id=367651574503109695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.