Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பாக். பெற்றோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தெருவில் பைக்கில் சென்ற வாலிபரைத் திரும்பிப் பார்த்த 15 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோரே ஆசிட் ஊற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். அவரது மனைவி ஜாஹீன். இவர்களது 15 வயது மகள் கடந்த 29ம் தேதி அன்று தெருவில் பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த ஜாபர் மகளைக் கண்டித்துள்ளார். அதற்கு அவர், நான் வேண்டும் என்றே அந்த பையனை பார்க்கவில்லை. மீண்டும் அப்படி பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் மகள் ஒரு வாலிபனைப் பார்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஜாபர் பெற்ற பாசம் இன்றி அவர் மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் அவர் உடல் வெந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாபர் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யாரோ ஒரு வாலிபனை தங்கள் மகள் பார்த்ததால் குடும்ப கௌரவம் கெட்டுவிட்டது என்றும், அதனால் தான் ஆசிட் ஊற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன கொடுமை!

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடுமைகள் எல்லாம் செய்வது பாகிஸ்தான் காரருக்கு சின்ன விசயம்.

12 வயது தம்பி ஒரு உயர்சாதி பெண்ணை காதலித்தற்காக, அவனது ஒன்றும் அறியா அக்காவை தண்டனையாக, நான்கு கிராம பஞ்சாயத்து பெரிசுகளால் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய மனிதம் இல்லா கிழட்டு மிருகங்களை கொண்ட நாடு.

http://www.telegraph...ht-back....html

இங்கிலாந்தில் பத்து வருடங்கள் முன்னால் மகளை 'கவுரவ கொலை' செய்த அம்மாவும், அப்பாவும் மகளை காணவில்லை என்று நடித்து ஒப்பாரி வைத்து பின்னர் கொல்லப் பட்ட பெண்ணின் தங்கை வளர்ந்து சொன்ன சாட்சியதினால் மாட்டி இரு மாதங்களுக்கு முன், ஆயுள் தண்டனை பெற்று உள்ளே போடப்பட்டு இருகின்றனர்.

இதிலே, முரண்பாட்டுக்கு உரிய விடயமாக பிரித்தானியப் பத்திரிகைகள் சொல்வது, தமது பிள்ளை ஒரு வேறு மத ஆணை விரும்புகின்றாள் என கொலை செய்த அந்த அப்பா, டென்மார்க் பெண் ஒருவரை மணந்து, தனது குடும்ப அழுத்தம் காரணமாக, ஒரு குழந்தையுடன் கைவிட்டு,பாகிஸ்தான் போய் வேறு திருமணம் முடித்து வந்தே அந்த பிள்ளையினை பெற்று, 'கொன்றார்'.

அப்படியானால் நீயும் டென்மார்க் பெண்னை கலியாணம் கட்டாமல் இருந்து இருக்க வேண்டாமா என கேட்டு இருந்தார்கள்.

தனக்கு ஒரு நியாயம், தன் பெண்பிள்ளைக்கு ஒரு நியாயம்.

ஆனால் அவர்களது தளம் ஒன்றில் எமது பெண் பிள்ளைகளின் சாமத்திய சடங்கு குறித்து பெரிய ஆச்சரியப் பட்டு போனதாகவும் பெண்களை சிறுமைப் படுத்தும் செயல் என்றும் எழுத, நல்லா வாதப் பிரதி வாதங்கள் போய் இருக்கின்றது. பாருங்கள்

http://www.paklinks....indu-girls.html

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.