Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும்

மீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம்.

v.jpg

உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டணி அரசியல் தான் என்பதால், தெய்வத்தோடும் மக்களோடும் மச்சினனோடும் மட்டுமே அவர் கூட்டணி வைத்ததால் நாடு தப்பித்தது.

விஜயகாந்த் தன் உதவியாளரை பொதுவெளியில் அடித்ததன் மூலம் தான் முதன்முதலாக அநாகரீகமாக நடந்துகொண்டார். அப்போது அவரை ‘கருப்பு எம்.ஜி,ஆர்’ என்று நம்பியவர்கள் ‘ஆஹா..எம்.ஜி.ஆர் மாதிரியே யார் தப்புச் செய்தாலும் தண்டனை கொடுக்கிறாரே’ என்று புகழ்ந்து தள்ளினர். ஆனால் எம்.ஜி.ஆர் காலம் வேறு, தற்போதைய தகவல் தொழிட்நுட்பக் காலம் வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இப்போதெல்லாம் பொதுவெளியில் யாரையும் நாகரீகக்குறைவாகப் பேசினாலே, மக்கள் மதிப்பதில்லை. இதை விஜயகாந்த் உணர்ந்திருப்பதாகத் தெரியவும் இல்லை.

Captain.jpg

ஏதோ தப்புச் செய்தோரை மட்டும் தான் விஜயகாந்த் அடிப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மக்களும், தேர்தல் பிரச்சார நேரத்தில் வேட்பாளரை அடித்ததின் மூலமும், இப்போது பத்திரிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட விதத்திலும் தன்னை ஒரு நிதானமற்ற நபராகவே நிரூபித்திருக்கிறார் விஜயகாந்த்.

இப்போது விஜயகாந்த்திடம் இருந்து வெளியில் வந்திருப்போரும் புலம்புவது அவர் கோபத்தில் நடந்துகொள்ளும்/நடத்தும் முறை பற்றித்தான்.இன்றைய நாகரீக உலகில், இத்தகைய பண்ணையார்த்தனங்கள் செல்லுபடியாகுமா என்று விஜயகாந்த் யோசிப்பது நல்லது.

பொதுவாக ஒரு எதிர்க்கட்சியை உடைத்து பலவீனமானதாக ஆளும்கட்சி ஆக்குவது ஜனநாயக ரீதியில் நல்ல விஷயம் அல்ல தான். உண்மையில் மக்கள் மன்றத்தில் இதன் மூலம் அனுதாபமும் ஆதரவும் தேடும் வாய்ப்பு விஜயகாந்த்திற்கு இருந்தது. ஆனால் தனது முன்யோசனையற்ற நடவடிக்கையால், அந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்துக்கொண்டு நிற்கிறார் விஜயகாந்த்.

’தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?’எனும் நிருபர்களின் கேள்விக்கு ஒரு நல்ல, நிதானமான அரசியல் தலைவராக விஜயகாந்த் பதில் சொல்லியிருக்கலாம். ‘இது எனக்கும் என் கட்சித் தொண்டர்களுக்கும் அவர்கள் செய்யும் துரோகம்’ என்று சொல்லியிருந்தால்கூடப் போதும். ஆனால் உடனே கோபம் கொண்டு என்ன பேசுகிறோம் என்ற வரைமுறை இல்லாமல் பேசியது பெரும் தவறு.

நிருபர்களின் கேள்விக்கு அவர் சொன்ன பதில் ‘நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு. இது தான் முக்கியமா? கரண்ட் இல்லை, டெங்கு காய்ச்சல் பரவுது. அதைப் பத்திக் கேளுங்க!’. அவர் இவ்வாறு சொன்னதும் நிருபர்கள் அவர் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொண்டு, மின்வெட்டு பற்றிய ஜெயலலிதாவின் தீர்மானத்தைப் பற்றிக் கேட்க ‘போய் ஜெயலலிதாகிட்டக் கேளுய்யா..நாயே..மைக்கைத் தூக்கிட்டு வந்திடறாங்க..உன் சேனலா சம்பளம் கொடுக்குது’ என்று ஒரு கட்சித்தலைவர் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி, தன் பெயரை முழுதுமாக கெடுத்துக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

v_j.jpg

இனியும் மக்கள் இவரை நம்புவார்களா என்பதே சந்தேகம் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போத இப்படி என்றால், முதல்வராக ஆக்கியிருந்தால் என்ன செய்திருப்பார் என்று நினைக்கவே பயமாக உள்ளது. இவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது நாம் சொன்னது ‘ இவர் இனிமேல் திமுக-அதிமுகவிற்கு மாற்று அல்ல. பாமகவிற்கே மாற்று’. ஆனால் தற்போதைய அவரது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவர் டாக்டர்.ராமதாஸிற்குக் கூட மாற்று அல்ல என்று தான் நிரூபணம் ஆகியுள்ளது

மேலும் சில எம்.எல்.ஏக்கள் விலகினால், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பார் என்று தெரிகிறது. அப்படி ஆனால், ஸ்டாலின் அந்த பொறுப்புக்கு வருவது நல்லது என்றே தோன்றுகிறது.அதன்பிறகாவது விஜயகாந்த் தன்னை சுயபரிசோதனை செய்வது நல்லது.

http://sengovi.blogs...-post_4880.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.