Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது

Featured Replies

[size=4]சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது[/size]

[size=3][size=4]November 10, 2012[/size][/size]

[size=2][size=4]சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநில மாநாடு தற்பொழுது பெய்ஜிங்கில் நடைபெற்றுக் [/size][/size]

xi1.jpg

[size=2][size=4]கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]உலகத்தில் உள்ள முக்கிய ஊடகங்களில் எல்லாம் சீனாவில் உள்ள ஊழலை புதிதாக வரவுள்ள தலைவர் எப்படி களையப்போகிறார் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் சன் லியோன் என்ற 11 வயது பாடசாலை மாணவர் கேட்ட கேள்வி சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.[/size][/size]

[size=2][size=4]சீனப்பாடசாலைகளுக்கு சத்துணவை வழங்கும் அரசு மாணவருக்கு நோயை ஏற்படுத்தாத உணவை வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]சீனாவில் மலிந்து கிடக்கும் ஊழல் பாடசாலைகளின் சத்துணவில் கலப்படங்களை பாரிய அளவில் செய்து வருகிறது, கடந்த 2008ம் ஆண்டில் மெலமின் என்ற பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட இரசாயன கலவையை பாடசாலைகளுக்கு வழங்கும் பால் மாவில் கலந்ததால் ஆறு பிள்ளைகள் இறந்து மூன்று இலட்சம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டார்கள்.[/size][/size]

[size=2][size=4]சீனர்கள் தமது உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் மலிந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள், பழுதடைந்த மரக்கறியை சேர்க்கிறார்கள், பழுதடைந்த உணவில் இரசாயன கலவை தூவி மறுபடியும் பிள்ளைகளுக்கு வழங்கி ஊழல் புரிகிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]எல்லா வீரமும் வீரப்பிரதாபங்களும் பேசும் உங்களால் சிறு பிள்ளைகளுக்காவது தரமான உணவை வழங்க முடியுமா.. என்ற கேள்வியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் முன் அந்த மாணவன் எழுப்பியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]இந்தக் கேள்விக்காக சீனத்தலைவர்களால் வெட்கப்பட முடிகிறதே அல்லாமல் உரிய பதிலைக் கூற முடியவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.[/size][/size]

[size=2][size=4]மேலும் சோசலிசம் பேசும் சீனாவில் ஏழைக்கும் பணக்காரருக்குமான இடைவெளி கடந்த 1994 ல் இருந்து 2012 ற்கு இடையில் 48 வீதமாக அதிகரித்துள்ளது, முதலாளித்துவ நாடான டென்மார்க்கிலேயே 21.8 வீதமாத்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=2][size=4]சீனாவில் உள்ள எட்டுப்பேருக்கு ஒருவர் இந்த இரும்பு ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில் புதிதாக பதவிக்கு வரவுள்ள ஸீ ஜின்பிங் சீனாவில் ஜனநாயக மாற்றங்களை கொண்டுவர போராடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]சீன கம்யூனிசத்தை தொடர்ந்தும் அதிகார கட்டிலில் காப்பாற்ற முயலும் ஒருவராக இவர் பதவிக்கு வருகிறார், உரிய சீர்திருத்தங்களை செய்யாவிட்டால் சீனா பாரிய சிக்கல்களை சந்திக்கும்.[/size][/size]

[size=2][size=4]ஏற்கெனவே சீன அதிகாரத்திற்கு எதிராக இதுவரை மொத்தம் 180.000 ஆர்பாட்டங்கள் ஆங்காங்கு நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில் வரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவை முந்தி உலகின் முதலாவது பொருளியல் வல்லரசாக சீனா வருமா என்ற கேள்விக்கு புதிய தலைவரின் திட்டங்களே பதிலாக அமையும் என்று உலகம் காத்திருக்கிறது.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=116830[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகங்களுக்கு வேறை என்ன வேலை? மலாலா என்று தூக்கிப் பிடித்தார்கள்.. இப்ப சிறுவன்.. தமது எதிரியை எதிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே முன்னிடம்.. :D

  • தொடங்கியவர்

இந்த ஊடகங்களுக்கு வேறை என்ன வேலை? மலாலா என்று தூக்கிப் பிடித்தார்கள்.. இப்ப சிறுவன்.. தமது எதிரியை எதிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே முன்னிடம்.. :D

தலிபான்களுக்கு எதிராக போராடியதை சிறப்பிக்க நவ.10ஐ மலாலா நாளாக அறிவித்த ஐ.நா.

[size=3]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்வி குறித்து தைரியமாக கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று 'மலாலா' நாளாக ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியிருந்தது.[/size][size=3]

தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மலாலா, உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைப் போராளி மலாலாவைப் பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.[/size][size=3]

இந்நிலையில் அவர் சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கொண்டாடுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் கேட்டுக் கொண்டிருந்தார்.[/size][size=3]

மேலும் மலாலா மற்றும் பள்ளி செல்ல உரிமை மறுக்கப்படும் 32 மில்லியன் பெண் குழந்தைகளை நினைவுகூறும் நாளாகவும் கடைபிடிக்கப்படும் என்று கார்டன் பிரவுன் தெரிவித்திருந்தார்.[/size][size=3]

இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நேற்று மலாலா நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளின் கல்வி உரிமைக்கான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.[/size][size=3]

இந்த நாளை ஒட்டி ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அறிக்கையில், உரிமைக்காகப் போராடிய மலாலாவை சுட்ட தலிபான்களை வேட்டையாடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.