Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடல்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என முல்லைத்தீவு கடல்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 5ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் 153 படகுகளுடன் 80 தென்னிலங்கை மீனவர்கள், தொழில் செய்து வருகின்றனர். அத்துடன் கொக்குளாய் பகுதியில் 300 தென்னிலங்கை மீனவர் குடும்பங்களும், புலி பாய்ந்தகல் பகுதியில் 15 தென்னிலங்கை மீனவக் குடும்பங்களும் தங்கித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

முன்னர் மீனவர்கள் மட்டுமே தற்காலிக கொட்டகைகள் அமைத்து மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்கள் குடும்பங்களுடன் வந்து தங்கியிருந்து தொழில் செய்கின்றனர்.

இந்த மீனவர்கள் தாம் பிடித்த மீன்களை 'கூலர்' வாகனங்களில் தென்னிலங்கைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிறிய படகு, வலைகள் ஆகியவற்றையே மீன் பிடிக்கு இவர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களால் பெருமளவில் தொழிலில் ஈடுபட முடியவில்லை.

தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதால் உள்ளுர் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதற்கு அச்சுவதாக கடல்தொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடல்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் சென்றிருந்தார். இதன்போது நாயாறு, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து அனுமதி பெறாத தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். ஆயினும் அந்த உத்தரவைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85478/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.