Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி

Featured Replies

[size=4]கனடா “வாழவைப்போம்” அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 58 குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் “அறிவகம்” மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாழ்வாதார நிதியுதவி வழங்கும் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் யாழ்.மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் செயலாளர் எஸ்.பிருந்தாபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 58 குடும்பங்களுக்கும் தலா 3ஆயிரம் ரூபா வீதம் வாழ்வாதார நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய முன்னாள் மாநகர ஆணையாளரும், தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான சீ.வி.கே.சிவஞானம்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களிலும் வறுமை புரையோடியிருந்ததை நாங்கள் வரலாற்றில் பார்க்கின்றோம். அதேபோன்று எங்களுடைய சமூகமும் மிக நீண்ட யுத்தத்தின் ஒய்வில் கடுமையான வறுமையின் பிடிக்குள் கிடந்து உழல்கின்றது.

ஆனால் இதே சமூகம் தான் யுத்தத்திற்கு முன்னர் செழிப்பான தன்னிறைவுள்ள ஒரு சமுகமாக வாழ்ந்தது. எனவே நாம் வறுமைப்பட்டு விடவில்லை. வறுமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்று சொல்வதே இங்கு பொருத்தமானதாக அமையும். ஆனால் எம்மை வறுமை நிலைக்குள் தள்ளியவர்கள் எங்களை அதிலிருந்து மீட்பதற்கு நினைத்தால் முடியும்.ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்க தயாரில்லை.

மாறாக எங்களுடைய வறுமையினையும், எங்களது இயலாமையினையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களிடம் மிச்சமாகவுள்ள எங்கள் தனித்துவங்களை சிதைக்கப்பார்கின்றார்கள்.

இதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம், தமிழ் இளம் பெண்கள் படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை. இங்கு அரசாங்கம் நினைத்தால் அந்த பெண்களுக்கு ஒரு அடிப்படை வாழ்வாதார தொழிலை பெற்றுக் கொடுக்கலாம். அல்லது இழந்த கல்வியை மீட்டெடுக்கும் செயற்றிட்டத்தின் கீழ் கல்வி கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யாமல் படையில் இணைப்பது எங்கள் அடையாளங்களை, தனித்துவங்களை சிதைப்பதற்கு எங்கள் இயலாமைகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்து கடந்த 3வருடங்களில் நலிந்து கிடந்த இந்த இனம் மீண்டும் எழுந்து உட்காருமளவிற்கு பலம் கொடுத்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்பதை நாம் மறக்கவில்லை.

அந்த உதவிகளை எங்கள் மக்களும் நிச்சயமாக மறக்கப் போவதில்லை. அதேபோல் இன்னமும் உதவிகள் தேவையாகவேயுள்ளது. அவற்றை எமது மக்கள் நேர்மையான தரப்புக்கள் ஊடாக உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் உதவிகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

canada_valavaipom_001-150x150.jpg canada_valavaipom_002-150x150.jpg canada_valavaipom_003-150x150.jpg

canada_valavaipom_004-150x150.jpg

canada_valavaipom_005-150x150.jpg

http://www.canadamir...anada/2148.html[/size]

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.