Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பாலஸ்தீனம், நாளை ஈழம் !

Featured Replies

[size=5]
எனது நண்பனைப் பற்றி
[/size]

[size=5]
எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர்.
[/size]

[size=5]
எப்படி அவன் சென்றான்…
[/size]

[size=5]
துப்பாக்கி வேட்டுக்கள்
[/size]

[size=5]
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின
[/size]

[size=5]
தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம்.
[/size]

[size=5]
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்
[/size]

[size=5]
அதன் பரிமாணங்களைப் பார்த்தேன்
[/size]

[size=5]
நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
[/size]

[size=5]
குழந்தையை இடுப்பில் ஏந்திய
[/size]

[size=5]
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
[/size]

[size=5]
அன்புள்ள நண்பனே!
[/size]

[size=5]
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
[/size]

[size=5]
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
[/size]

[size=5]
என்று மட்டும் கேள்.
[/size]

[size=4]ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும்,இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. [/size]

[size=4]ஒரு இனத்தவன் கல்லெறிகிறான்,இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடிக் கொண்டு அடக்குமுறையை காட்டுபவனிடம் தன்னாலியன்ற அத்தனை எதிர்ப்புகளையும் முள் வேலி முகாம்களுக்குள்ளிருந்து செய்கிறான். [/size]

[size=4]இன்னொரு இனமோ கண்ணுக்கு கண்ணையும் பல்லுக்கு பல்லையும் பிடுங்கிப்பார்த்தது, மக்களை ஒன்று கூட்டி ஓலமிட்டுப் பார்த்தது,கற்களை வீசிப்பார்த்தது. நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மனம் வந்தவர்களுக்கு ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இன்னமும் மக்களைத் துடிப்புடன் வைத்திருக்க அம்மண்ணின் கவிஞர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.[/size]

[size=5]
சாத்தியமற்றதை
[/size]

[size=5]
என்னிடம் கேளாதே
[/size]

[size=5]
என் நண்பனே
[/size]

[size=5]
என்னை என் நாட்டை
[/size]

[size=5]
விட்டு போகுமாறு
[/size]

[size=5]
உன்னால் கேட்க முடியாது
[/size]

[size=4]றஷீத் ஹூசைன், பாலஸ்தீனிய அரபுக் கவிதைகளில் அரசியலை புகுத்திய முன்னோடிகளில் முதலாமவர். அம்மக்களின் துயர நிலையைப் பாடும் இவர் கவிதைகள் தங்களுக்குள்ளிருக்கும் துரோகிகளையும் அதே நேரத்தில் சுட்டத்தவறுவதில்லை. இவருடைய கவிதைகள் கால, தேச வேறுபாடுகளைக் கடந்து ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இன மக்களையும் குறிப்பிட்டு பாடுகிறது.[/size]

[size=5]
இருண்ட கூடாரங்களில்
[/size]

[size=5]
சங்கிலிகளில்
[/size]

[size=5]
எனது மக்களை சிறையிட்டுள்ளனர்.
[/size]

[size=5]
வாய் மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர்
[/size]

[size=5]
அவர்களேதும் முறையிட்டால்
[/size]

[size=5]
இராணுவச் சவுக்கால்
[/size]

[size=5]
மரணத்தால்
[/size]

[size=5]
பசியால்
[/size]

[size=5]
அச்சுறுத்துகின்றனர்.
[/size]

[size=5]
எங்கள் மத்தியில்,
[/size]

[size=5]
இன்னும் ஒரு கும்பல்
[/size]

[size=5]
எஞ்சியுள்ளது.
[/size]

[size=5]
அவமானத்தை
[/size]

[size=5]
அது சாப்பிடுகின்றது.
[/size]

[size=5]
தலைகுனிந்து நடந்து செல்கின்றது.
[/size]

[size=5]
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
[/size]

[size=5]
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
[/size]

[size=5]
நக்கும் ஒருவனை
[/size]

[size=5]
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்.
[/size]

http://thamiziniyan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=3][size=5]எனது சொற்கள்

மண்ணாய் மணத்த நாளில்

கோதுமைத் தாள்களின்

நண்பனாயிருந்தேன்.[/size][/size]

[size=3][size=5]எனது சொற்கள்

கொதித்துச் சீறிய நாளில்

இரும்புத் தளைகளின்

நண்பனாயிருந்தேன்.[/size][/size]

[size=3][size=5]எனது சொற்கள்

கற்களாய் உறைந்த நாளில்

தழுவிச் செல்லும் ஓடையின்

நண்பனாயிருந்தேன்.[/size][/size]

[size=3][size=5]எனது சொற்கள்

கலகமாய்க் கிளர்ந்த நாளில்

நடுங்கும் நிலத்தின்

நண்பனாயிருந்தேன்.[/size][/size]

[size=3][size=5]எனது சொற்கள்

புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்

நம்பிக்கை தளரா உள்ளங்களின்

நண்பனாயிருந்தேன்.[/size][/size]

[size=3][size=5]ஆனால்

சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்….

ஈக்கள் மொய்த்தன

என் உதடுகளில்![/size][/size]

[size=3][size=5]-மஹ்மூத் தார்வீஷ்

(ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)[/size][/size]

Mahmoud-Darwish.jpg

[size=3][size=4]மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட. 1948இல் இசுரேல் அரசு தார்வீஷின் கிராமத்தைச் சூறையாடி முற்றிலுமாக அழித்தபோது, அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது. விடுதலைத் தாகம் கொண்ட இளம் போராளியாக தனது இருபதாம் வயதுகளிலேயே இசுரேல் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1970இல் ரசியா சென்று படித்தார்; பிறகு பெய்ரூட்டிலும், பாரீசிலுமாக சுமார் 26 ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். 1996இல் இசுரேல் திரும்பி, கொந்தளிப்பான ‘மேற்கு கரையில்’உள்ள ரமல்லாவில் தங்கினார்.[/size][/size]

[size=3][size=4]கவிதை, உரைநடைப் படைப்புக்களில் 30 தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர், கலை மக்களுக்கானது என்பதில் தெளிவான பார்வை கொண்டவர். தார்வீஷ் பாலஸ்தீன மக்களின் உயிர்மூச்சு; தாயகம் பிடுங்கப்பட்டவர், நீக்கப்பட்டவர். தாயகம் ஏக்கம் கொண்டவர்களின் கம்பீரமான போராட்ட சாட்சி.[/size][/size]

[size=3][size=4]கடந்த ஆகஸ்டு 9, 2008 அன்று அவரது 66ஆவது வயதில் இதயநோய்ச் சிகிச்சையின் போது இறந்து போனார். பாலஸ்தீனத் தாயகத்தின் போராளியாகவும், புலம் பெயர்ந்தோரின் உரிமைக் குரலாகவும், கம்யூனிச உணர்வுமிக்க சர்வதேசவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் மஹ்மூத் தார்வீஷ்.[/size][/size]

Edited by akootha

[size=5]
எங்கள் மத்தியில்,
[/size]

[size=5]
இன்னும் ஒரு கும்பல்
[/size]

[size=5]
எஞ்சியுள்ளது.
[/size]

[size=5]
அவமானத்தை
[/size]

[size=5]
அது சாப்பிடுகின்றது.
[/size]

[size=5]
தலைகுனிந்து நடந்து செல்கின்றது.
[/size]

[size=5]
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
[/size]

[size=5]
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
[/size]

[size=5]
நக்கும் ஒருவனை
[/size]

[size=5]
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்
[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.